”மேனன்’ பட்டத்தை துறக்கிறேன்” – ‘வாத்தி’ நாயகி சம்யுக்தா

தனுஷ்  நடிக்கும் வாத்தி படத்தில் நாயகியாக நடிப்பவர் சம்யுக்தா (மேனன்) . இதுவரை மலையாளம், தமிழ் , தெலுங்கு என்று இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் சம்யுக்தா , முதலில் 2016 இல் மலையாளத்தில் பாப்கார்ன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் 2018 இல் களரி , 2019 இல் ஜூலை காற்றில் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் . இரண்டும் பெரிதாக பலன் தரவில்லை 2022 இல் பிம்பி சாரா படம் மூலம் தெலுங்கிலும் காலிபட்டா 2 என்ற படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகமான நிலையில் இப்போது, தனுஷ் ஜோடியாக வாத்தி படத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் (தெலுங்கில் படத்துக்குப் பெயர் சார். ) நடித்துள்ளார் 

பிப்ரவரி 17 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையலர்களைச் சந்தித்து உற்சாகமாகப் பேசினார் சம்யுக்தா. 
 
” தமிழில் ஆரம்பத்தில் நடித்த இரண்டு படங்கள் சரியாகப் போகாத நிலையில் வாத்தி எனக்கு முக்கியமான படம். சென்ற வருடம் நான் தெலுங்கில் அறிமுகம் ஆன நிலையில் இந்தப் படம் தெலுங்கிலும் வருவது மகிழ்ச்சி. 
 
வாத்தி படத்தில் தமிழ் வசனங்களைப் பேசுவதை விட , தெலுங்கு பேசுவது சிரமமாக இருந்தது . ஆனால் தனுஷ் இரண்டையும் உடனுக்கு உடன் பேசுவார். எழுத்து என்பது முக்கியம். ஒரு வார்த்தை பேசினாலும் அர்த்தம் மாறி விடும் என்பதால் கவனமாக இருந்தேன் . 
 
படத்தில் நான்  ஆசிரியையாகவும் தனுஷ் ஆசிரியராகவும் நடிக்கிறோம் .  இருவரும் ஜோடிதான் . படத்தில் ஆசிரியர்களுக்குள் உள்ள காதலும் வருகிறது . நான் படிக்கிற காலத்திலேயே அப்படி ஒரு காதலைப் பார்த்து இருக்கிறேன் . கல்யாணத்துக்கு அப்புறமும் இருவரும் சார்.. மேடம் .. என்று கூப்பிட்டுக் கொண்டார்கள்   
 
இந்தப் படத்தில் மாணவர்களுடன் ரொம்பவே ஜாலியாக பழகும் ‘மீனாட்சி’ என்கிற உயிரியல் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.  நான் பள்ளியில் படித்தபோது எனக்கு பாடம் சொல்லித் தந்த ‘தீபா’ டீச்சரை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு அதையே நடிப்பில் வெளிப்படுத்தினேன்.
 

இந்தப் படத்தில் கல்வி முறையில் உள்ள சில பிரச்சனைகள் பற்றி கூறியுள்ளோம்.

இன்ஜினியரிங் படித்த பெண்கூட அதை முடித்துவிட்டு தனக்கு விருப்பமான நடன துறையில்தான் சேர்ந்தார். நானும் பிளஸ் டூ மட்டுமே படித்துள்ளேன். சினிமா மீதான ஆர்வம் இருந்ததால் இங்கே வந்து விட்டேன்.

பெர்சனலாக சொல்லவேண்டும் என்றால் ஒரு  டிகிரி இருந்தால்தான் நமக்கு பிடித்த வேலையை பார்க்க முடியும் என்று சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. அதேசமயம் இந்தப் படத்தில் நடித்தபோது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு எவ்வளவு பெரிய மாற்றத்தை அவர்களது வாழ்க்கையில் கொண்டு வருகிறது என்பதை உணர முடிந்தபோது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது.

தமிழ் சினிமாவில் எந்தப் படங்களை கமர்சியலாக எடுக்க வேண்டும். எந்த படங்களை ரியலிஸ்டிக்காக எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.  மலையாளத்தில் கூட தமிழ் படங்களுக்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது.

முதன்முறையாக இந்தப் படத்தில் தான் ஒரு நடன இயக்குனர் சொல்லிக் கொடுத்த அசைவுகளுக்கு நடனம் ஆகியுள்ளேன். தெலுங்கில் விருபாக்சி, டெவில் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். எல்லாமே பீரியட் படங்கள்தான். எப்போது ஒரு கதையைக் கேட்டதும், உடனே நான் நடிக்கிறேன் என்று சொல்கிறேனா அந்த படங்கள் எனக்கு நன்றாகவே அமைந்திருக்கின்றன.. யோசித்து சொல்கிறேன் எனக் கூறி பின்னர் ஒப்புக் கொண்ட படங்கள் பெரிய அளவில் பலன் தரவில்லை.

வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு வேறொரு படத்திற்காக தென்காசிக்கு சென்றிருந்தபோது, அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்துவிட்டு ஏற்கனவே யூட்யூப் மூலமாக கேள்விப்பட்டிருந்த மதுரை பன் புரோட்டா சாப்பிடலாம் என முகத்தில் மாஸ்க் அணிந்தபடி ஒரு ஹோட்டலுக்கு சென்றேன்.

அப்போதுதான் ‘வா வாத்தி’ பாடல் ரிலீஸ் ஆகியிருந்த நேரம். நான் மாஸ்கை கழட்டியதுமே அங்கிருந்து என்னை பார்த்த சிலர் ‘ஏ நம்ம டீச்சரம்மா’ என்று ஆச்சரியமாக கூவினார்கள். அந்த பாடல் ஏற்படுத்திய மேஜிக்தான் இது. இந்த படத்தின் மூலம் நான் எனக்கென எடுத்துச் செல்வது இந்த பெருமையைத்தான்” என்று கூறினார்.

தமிழ் எனது இளமைக் காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த மொழி. குறிப்பாக சின்ன வயதில் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல் மூலம் தமிழ் மீது ரொம்பவே ஆர்வமானேன். அதன் பிறகு தமிழ் பாடல்களை அதிகமாக கேட்க ஆரம்பித்தேன். இதுவரை நான் கேட்ட பாடல்களில் தமிழ் மொழியை போல வேறு எந்த மொழியிலும் இனிமையான பாடல் வரிகளை கேட்டதில்லை. சினிமா பாடல்களிலேயே அதிகம் இனிமையான பாடல் வரிகளை கொண்டது தமிழ் மட்டும்தான்.

“தயவு செய்து ‘சம்யுக்தா மேனன்’ என்று என்னை அழைக்க வேண்டாம். எந்த ஒரு ஜாதி பெயரையும் சேர்த்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ‘சம்யுக்தா’ என்றுதான் இந்த ‘வாத்தி’ பட டைட்டில் கார்டில்கூட குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பள்ளியில் பேர் சேர்க்கும்போது பெரியவர்கள் அப்படி சேர்த்துவிட்டதை நாம் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. இப்போது மாற்றிக் கொள்வது என்பது நம் விருப்பம்தானே…? வேறு சில நட்சத்திரங்கள் இப்படி தங்கள் பெயருடன் ஜாதிப் பெயரை சேர்த்துக் கொண்டிருப்பதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது.” என்றார் சம்யுக்தா .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *