சசிகுமாரை வியக்கும் ‘வெற்றிவேல்’ வசந்த மணி

vetri 1

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் R.ரவிந்திரன் தயாரிக்க, 

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும்படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, 

மியா ஜார்ஜ்நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகள்,  

vetri 4

முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு ஆகியோர் நடிக்க , 

இயக்குனர் டி.பி. கஜேந்திரனிடம் துணை இயக்குனராகவும், ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் இணை இயக்குனராகவும் பணிபுரிந்த வசந்தமணி,

 கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் வெற்றிவேல் 

பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை வெற்றிகரமாக,  வினியோகம் செய்தவர் தயாரிப்பாளர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் R.ரவிந்திரன்

vetri 6

படம் பற்றிக் கூறும் இயக்குனர் வசந்த மணி ” நான் படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் கூறினேன் . அவர் கதையை சசிகுமரிடம் கூறி அவர் ஒகே செய்த பிறகே எனக்கு தகவல் சொன்னார்.

பிறகு நான் கதையை விளக்கமான சொன்னேன் .

ஒரு வெற்றிகரமான இயக்குனர் என்ற நிலையிலும் என் கதையை அப்படியே ஏற்றார் . மூன்று இடங்களில் மட்டும் சிறு சிறு திருத்தங்கள் செய்து கொள்ளலாமா என்று கேட்டு, பிறகு செய்யச் சொன்னார்

vetri 5

தம்பியின் காதலுக்கு போராடும் அண்ணன், குடும்ப உறவுகள் மதிப்பீடுகள் இவற்றை தஞ்சாவூர் மண் சார்ந்த  பின்னணியில் சொலி இருக்கிறேன் .

காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை,  ஆக்ஷன்செண்டிமெண்ட் என அனைத்து கலவைகளையும் கலந்து

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுத்து இருக்கிறேன் .

vetri 3

படப்பிடிப்பில் எனக்கு சசிகுமார் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . கேமரா  பக்கமே வரமாட்டார் . மிக அரிதான ஷாட்களின்பொது மட்டுமே எடுக்கப்பட்ட ஷாட்டை மானிட்டரில் பார்ப்பார்.

அவரது தன்மை என்னை வியக்க வைத்தது. 

தம்பியில் காதலியின் தந்தையாக பக்கத்து ஊர் பெரிய மனிதராக பிரபு அசத்தி இருக்கிறார் ஒத்தாசை என்ற கேரக்டரில் தம்பி ராமையா காமெடியில் கலக்கி இருக்கிறார் இருக்கிறார் . 

vetri 2

டி இமான் அற்புதமான பாடல்களைக் கொடுத்து இருக்கிறார் 

 தஞ்சாவுர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் படத்தின் படபிடிப்பு நடைபெற்றது..விரைவில் படம் திரைக்கு வருகிறது ” என்கிறார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →