மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ,சரத்குமார் நடிப்பில், அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கி இருக்கும் படம் ட்யூட் ( DUDE)
2018 ஆம் ஆண்டில் இதே பெயரில் அமெரிக்க காமெடி படம் ஒன்று கென்டால் மேக்கனோன் உடன் சேர்ந்து கதை எழுதி ஒலிவியா மில்ச் என்ற பெண் திரைக்கதை எழுதி இயக்க, லூஸி ஹேல், கேத்ரின் பிரஸ்காட் , அலெக்சாண்ட்ரா ஷிப், அவ்க்வாஃபினா, ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடிக்க, , அலெக்ஸ் வுல்ஃப் என்பவர் நாயகனாக நடித்து வெளிவந்து ,
இப்போது நெட் பிளிக்சில் காணக் கிடைக்கும் படம். நாலு பள்ளி மாணவிகள் ஒரு மாணவனுக்கு இடையேயான நட்பு, சண்டை, இழப்பு, தெளிதல் இவற்றை சொல்லும் படம் )
தமிழ் படம் ட்யூட் அறிவிக்கப்பட்ட உடனே, தெலுங்கு நடிகர் தேஜா , கால் பந்தை மையமாக வைத்து தான் எடுக்க இருக்கும் படத்துக்கு இதே பெயரை முன்பே பதிவு செய்து இருப்பதாகவும் , இரண்டு ட்யூட் படங்களுமே பல மொழிகளில் வரும் என்பதால் குழப்பம் இருக்கும் என்று கூறினார் .
பின்னால் அந்த பிரச்னை முடிக்கப்பட்டதா இல்லையா? என்று தெரியவில்லை. பற்றியும் ஏரியலாம் அணைந்தும் போகலாம் .
தமிழ் ட்யூட் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் படம் பற்றி பத்திரிகையாளர்களுடன் பேசினார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.
“நான் சுதா கொங்காரவிடம் உதவி இயக்குனராகப் பல படங்கள் பணியாற்றினேன். ஐந்து வருடத்துக்கு டைரக்டர் ஆகி விட வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் ஏழு வருடங்கள் ஆகி விட்டது.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கும் நிகேத் பொம்மி தான் என்னை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு அழைத்துப் போனார் அவர்களிடம் கதை சொன்னேன் . அவர்கள் உடனே ஒகே சொல்லி வேலைகளை ஆரம்பித்தார்கள் .
உண்மையில் இந்தக் கதையை நான் முப்பது வயது ரஜினியை மனதில் வைத்து எழுதினேன். இன்றைய சூழலில் அது பிரதீப் ரங்கநாதனுக்கு பொருத்தமாக இருந்தது . கதையை கேட்ட அவர் மூணு நாள் டைம் கேட்டார். அப்புறம் சம்மதம் சொன்னார் .
பிரேமலு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நான் மமிதாவை இந்தப் படத்துக்கு புக் செய்து விட்டேன் . அவர் வந்த பிறகு இந்தப் படம் இளவயது ரஜினி – ஸ்ரீதேவி நடித்த படம் போல வந்திருக்கிறது .
சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார் .
எனக்கு இந்தப்படம் கிடைக்க காரணமன ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் , எடிட்டர் பரத் விக்ரமன் ஆகியோர் சிறப்பான பங்களைபைக் கொடுத்து இருக்கிறார்கள் .
வெளிநாட்டுக்கு ஷூட்டிங் போகலையா என்று பலரும் கேட்கிறார்கள் . எனக்கு அதை விட இந்தப் படத்த்துக்கு சென்னை பெரிதாகப் படுகிறது . எனவே சென்னையை விதம் விதமாக காட்சிப் படுத்தி இருக்கிறேன் . ‘முதல் படத்தில் மவுன்ட் ரோட்டில் கேமரா வைத்து ஷூட் செய்ய வேண்டும் ‘ என்று ஆசைப்பட்டேன். அதைச் செய்தேன் . இப்படி பல ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டேன் .
இந்தப் படம் மாடர்ன் ஆக சுவாரஸ்யமாக இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த வகையில் இருக்கும் அதே நேரம் செண்டிமெண்ட் , சமூகப் பொறுப்பு இவற்றோடும் இருக்கும் .
படத்தில் தாலி செண்டிமெண்ட் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இல்லாமல் வேறு மாதிரி இருக்கும். ” என்றார்