2D என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்க, ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் நடிப்பில் கல்யாண் இயக்கி இருக்கும் படம் .
அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் ஒன்று 1918 ஆம் ஆண்டு பால்காரர் ஒருவரிடம் கிடைத்து அவரை பணக்காரர் ஆக்கி விட்டு, திருடப்பட்டு ஆற்றில் விழுந்து மூழ்குகிறது.
திருட்டு வேலை செய்யும் ஜோதிகா , ரேவதி கையில் கிடைக்கிறது .
ஒரு அழகான பையான் குடுகுடுப்பைக்காரனின் சாபத்தால் யோகிபாபு ஆக மாறுகிறான். அழகே இல்லாத நபர் என்று மருவுகிறான்.
இவர்களுக்கு எல்லாம் என்ன ஆனது என்பதே ஜாக்பாட்.
ஜோதிகா ஹீரோயினிசம் காட்டும் படம் . பைக் ஓட்டுகிறார் . பைட் பண்ணுகிறார். சிலம்பம் சுற்றுகிறார் . சம்மர் சாட் அடிக்கிறார் .
ரேவதி உற்சாகம் தெறிக்க நடிக்கிறார் .
அக்கா ஆனந்தராஜ் கலகல.
ஆனந்த குமாரின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது .
அருவி மழைக் காட்சிகள் படத்தில் நன்றாக வந்திருக்கிறது . அங்கே தெரிகிறார் இயக்குனர் கல்யாண்.
சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு .
கிளைமாக்ஸ் சுகமான கனவு .
இவரது முந்தைய படம் குலேபகாவலி . அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை
கதை திரைக்கதை வசனம் ஆகியவை சிரத்தையோடு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.