ஜருகண்டி @ விமர்சனம்

பத்ரி கஸ்தூரி மற்றும்   நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில், ஜெய், ரீபா மோனிகா ஜான், அமீத் குமார், ரோபோ ஷங்கர் , டேனி நடிப்பில், 

ஏ என் பிச்சுமணி முதன் முதலாக எழுதி இயக்கி இருக்கும் படம் ஜருகண்டி . தரிசனத்துக்கு போலாமா ? பேசலாம். 

சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞன் ஒருவனுக்கு (ஜெய்),  வங்கிகள் கடன் வழங்க மறுக்க, ஒரு  தவறான நபரின் ( இளவரசு) மூலம்,
 
வெளிநாட்டில் உள்ள ஒருவரின் நிலத்தை சொந்த நிலமாக காட்டி கடன் பெறுகிறான் அவன் . அவனுக்கு ஒரு நண்பன் ( டேனி).
அந்தப் பணத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனமும் துவங்குகிறார்கள். சில நாட்களில் அவர்களை, 
 
மிரட்டும் ஓர் இன்ஸ்பெக்டர் ( போஸ் வெங்கட்) , ”இரண்டு நாளில் திருடியாவது பத்து லட்சம் கொடு.
 
இல்லை என்றால் கைது செய்து விடுவேன்” என்கிறார். பணக்கார இளைஞன் ஒருவன் (ரோபோ ஷங்கர்) , 
தான் காதலிக்கும் ஒரு பெண்ணை (ரீபா மோனிகா ஜான்) தன்னோடு சேர்த்து வைத்தால் உதவுவதாக சொல்கிறான். அதற்காக அந்த பெண்ணை கடத்துகிறார்கள் . 
 
கடத்திய பிறகு அந்தப் பெண்ணின் அப்பாவிடமே பணம் கேட்கிறார்கள் . ஒரு நிலையில் அப்பா நிஜ அப்பா இல்லை என்பதும் ,
 
அவள் அநாதை இல்லத்தில் பிறந்தவள் என்பதும் , வெளிநாட்டில் வேலை வாங்கித தருவதாக சொல்லி போலி அப்பா அம்மா காட்டி ,
 
வெளிநாட்டுக்கு அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின் தலைவன் (அமீத் குமார் ) செய்து வைத்து இருக்கும் செட் அப் அது என்பது தெரிய வருகிறது. 
அவர்களும் இவர்களும் எதிர்கொண்ட போது நடந்தது என்பதே இந்தப் படம் . வழக்கமான கதை தெரிந்த காட்சிகள் என்றாலும், 
 
ஆங்காங்கே அறிவார்ந்த காமெடிகள் படத்தில் இருக்கின்றன . உதாரணமாக .. பெண்களை கடத்தி விற்க துணை போகும் அநாதை ஆசிரம பொறுப்பாளர் (ஜி எம் குமார்) ,
 
அட்ரஸ் சொல்லும்போது ”இந்திப் பிரச்சார சபா கிட்ட வந்து போன் பண்ணு’ என்பான். தவறான முறையில் லோன் வாங்கிக் கொடுத்து இன்ஸ்பெக்டரிடமும், 
 
மாட்டி விட்ட  நபருக்கு,  ஹீரோ கொடுக்கும் மிகப் பெரிய தண்டனை என்ன தெரியுமா ?கட்டிப் போட்டு, தமிழிசை சவுந்திர ராஜன் பேசுவதை கேட்க வைப்பதுதான்!
இப்படி புரிந்து ரசிக்க சில நகைச்சுவைகள் . நடித்தவர்கள் யாரும் குறை வைக்கவில்லை . 
பிச்சுமணியின் படமாக்கல்,
 
ஆர் டி ராஜ சேகரின் ஒளிப்பதிவு இரண்டும் தரமாக இருக்கின்றன.   போபோ சசியின் பாடல் இசை மற்றும் பின்னணி இசை இரண்டும் சிறப்பு . 
 
படத்தொகுப்பில் அசத்தி இருக்கிறார் பிரவீன் கே எல் . இன்னும் நல்ல கதை , இன்னும் இன்னும் சிறப்பான கதை இருந்திருக்கலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *