கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஸ்காந்த், ஹரிஷ் பெராடி, நண்டு ஜெகன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இருக்கும் படம் அதர்ஸ் .
மனிதர்களை பால் ரீதியாகப் பிரிக்கும் பதிவுகளில் MALE, FEMALE தவிர மற்றவர்களுக்கு ஒரு பிரிவு இல்லையா? அதுதான் படத்தின் அடிநாதம் .
இரவில் முக்கியச் சாலையின் நடுவில் பெரிய கல்லை வைத்து, அதில் மோதி நிற்கும் வாகனங்களில் இருந்து, கொள்ளையடிக்கக் காத்திருக்கிறான் ஒருவன். அப்படி ஓர் வேன் வந்து மோதி காற்றில் பறந்து விழுந்து வெடித்து நெருப்பு பற்றி , அதில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் எரிந்து கருகிப் போயிருக்கிறார்கள் .
விசாரிக்கிறார் அசிஸ்டன்ட் கமிஷனர் (அறிமுகம் ஆதித்யா மாதவன்) அவரது காதலி ஒரு டாக்டர் ( கவுரி கிஷன்) ஏசி யின் படையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் ( அஞ்சு குரியன்) உண்டு .
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி இறந்த அந்த மூன்று பெண்களில் ஒரு பெண் எரிக்கப்படும் முன்பே காயப்படுத்தப்பட்டு இருக்கிறாள். அந்த ஆண் உடல் வேனின் மேலே வெளிப்பக்கம் கிடந்தபடி எரிந்து இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது
விசாரணை தொடர , மருத்துவர் காதலி வேலை செய்யும் செயற்கைக் கருத்தரித்தல் மையத்தில் கருமுட்டைக்குள் விந்தணு செலுத்தப்பட்ட பிறகு, அந்தக் கருவை வயிற்றில் செலுத்தி கரு வளர்ந்து பிரசவிக்கும் சிகிச்சையில் ஒரு முறைகேடு கண்டு பிடிக்கப்படுகிறது .
அதாவது செயற்கைக் கருத்தரித்தல் முறையில் குழந்தைகளை ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத இடைப்பட்ட இனக் குழந்தைகளாக வளர்வதற்கான ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது .
வேனில் இறந்த பெண்கள் எல்லோரும் கண் பார்வையற்ற நபர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் கருணை கோயில் என்ற அனாதை இல்லத்தில் இருந்தவர்கள் என்பதும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் கொல்லப்பட்டது தெரிய வருகிறது . கணவர்கள் எல்லாம் ரவுடிகள் என்பதும் புரிகிறது
பார்வையற்ற பெண்கள் கொலை வழக்கு கருத்தரித்தல் மையம் சம்மந்தப்பட்ட அதிர்ச்சியும் ஒரு புள்ளியில் ஒன்று சேரும்போது நடந்தது என்ன படம் .
ஒரு சிறுபான்மை தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டால், அந்தச் சிறுபான்மை தங்களைப் பெரும்பான்மையாகக் கொள்ள எந்த எல்லைக்கும் போகும் என்பதுதான் இயக்குனர் சொல்ல வரும் கருத்து .
படம் முழுக்க சிறப்பாக இசைத்திருக்கிறார் ஜிப்ரான்.
எனினும் கதையாக ஆரம்பம் சிறப்பாகவே உள்ளது . போகப் போக , நியாயமாக இல்லாவிட்டாலும் வித்தியாசமாக இருந்தால் போதும்’ என்ற ரீதியில் திரைக்கதை இருக்கிறது .
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்தின் திரில் தன்மைக்கு நியாயம் உள்ளது. ராமரின் எடிட்டிங் ஓகே ரகம்.
நாயகன் ஆதித்யா மாதவன் , கேரக்டருக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் .
அழகான எக்ஸ்பிரஷன்களால் கவர்கிறார் கவுரி கிஷன் . அஞ்சு குரியன் போலீஸ் இன்ஸ்பெக்டராக அசத்துகிறார் . சில காட்சிகளே என்றாலும் நண்டு ஜெகன் சிறப்பு,
ஹரீஷ் பெராடிக்கு பழகிய கேரக்டர் .
வில்லன் நாயகியைத் துரத்த, அவளுக்கு நாயகன் செல்போனில் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தே போலீஸ் இருக்கும் பகுதிக்கு போக வைத்து வில்லனை மடக்கும் சீன் அருமை . ஜிப்ரான் இசை அங்கே பிரம்மாதம் .
இடைவேளையிலேயே சஸ்பென்சை ஓப்பன் செய்து, எதிர்த்தரப்பு நியாயத்துக்கான காரணத்தை வலுவாக அழுத்தமான காட்சிகளில் சொல்லி , இன்று கொஞ்சம் விவாதத்தை நீட்டித்து ஹீரோயிசத்தைக் குறைத்து, யார் ஜெயிப்பார் பார்ப்போம் எனற சவாலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கினால் இந்தப் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . .
OTHERS என்ற செயல் அப்படியே தமிழ்ப்படுத்தி அதன் நேரடிச் பொருளில், ‘மற்றவை…. நேரில்’ என்ற பெயர் வைத்திருந்தாலும் கூட இந்தப் படம் இன்னும் எளிதாக ரசிகர்களை அடைய வாய்ப்பு உண்டு.
