சோமன் பல்லேட், தாமஸ் கோக்கட் தயாரிப்பில் சேரன் நடிப்பில் சாய் ராஜ்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் .
ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்கிற — கார் ஓட்டும் நேரம் உட்பட எந்த நேரத்திலும் சட்டென்று தூக்கத்தில் விழுந்து மாதக் கணக்கில் கூட தூங்குகிற ( விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் ஞாபகம் வருதா?) குறைபாடு உள்ள- போலீஸ் அதிகாரி ராஜா செந்தூர் பாண்டி ( சேரன்) .
மேற்படி பிரச்னை காரணமாகவே விவாகரத்து கோரும் மனைவி கவுரி ( சரயு மோகன்). இருதலைக் கொள்ளி எறும்பாய் பாசமுள்ள மகள் கீர்த்தனா (நந்தனா வர்மா ) .
விவாகரத்து தீர்ப்பாகி மகளொரு மனைவி அமெரிக்கா போகப் போகும் நிலையில் கடைசி பத்து நாள் மகளோடு கழிக்க திட்டமிடுகிறார் பாண்டி . கடுகடு மனைவியும் பல்லைக் கடித்துக் கொண்டு அனுப்பி வைக்கிறாள் .
மகள் வீட்டுக்கு வந்த நிலையில் ஓர் ஆபத்து .
காம வெறி இளைஞர்கள் சிலரிடம் இருந்து ஒரு இளம்பெண்ணை ( சிருஷ்டி டாங்கே) சில வருடங்களுக்கு முன்பு பாண்டி காப்பாற்றி , குற்றவாளிகளை தண்டிக்க,
தண்டனை முடிந்து வெளிவந்த குற்றவாளிகளின் தலைவன் ( இர்பான்) , பழிவாங்கலாக காதல் என்ற பெயரில் பாண்டியின் மகளை ஏமாற்றி கடத்திப் போய் இருப்பது புரிகிறது .
அவர்கள் கீர்த்தனாவை சிதைப்பதை , ஆன் லைன் மூலம் பாண்டியை பார்க்க வைத்து சித்திரவதை செய்ய முயல, அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் .
குடும்ப செண்டிமெண்ட் , சமூக அக்கறை என்று இரண்டு பகுதிகளில் பயணிக்கும் படம் . ‘முக நூல் போன்ற சமூக வலைதளங்களில் எல்லோருமே நல்லவராகத்தான் இருப்பார்கள் . நலவராகத்தான் காட்டிக் கொள்வார்கள்’ என்பதை பிரச்சாரமாக இல்லாமல் கதையின் வழியே சொல்கிறார் இயக்குனர் . பாராட்டுகள் .
மாற்றுத் திறனாளியின் சைகை மொழி, சிருஷ்டி டாங்கே கதாபாத்திரம் இவற்றின் மூலம் சில சுவாரஸ்யமான திருப்பங்கள் படத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன . சிறப்பு .
பொருத்தமாக நடித்துள்ளார் சேரன் . அவருக்கு இருக்கும் சமூக மதிப்பீடு இந்த கதாபாத்திரத்துக்கு அவரை சிறப்பாக பொருத்துகிறது . நந்தனா வர்மா குழந்தைத்தனத்தில் ஜொலிக்கிறார். அருமை .
மற்றவர்கள் ஒகே ரகம்.
எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கான சூழல் உணர்வை சிறப்பாக கொண்டு வருகிறது .
பிரேமின் படத் தொகுப்பு இருக்கிற விசயங்களை சிந்தாமல் சிதறாமல் தொகுக்கிறது.இசையமைப்பாளர் வினோத் எஜமான்யா… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் எசமான் !
ஒவ்வொரு விசயத்தையும் சொல்ல அதிகப் படியான வார்த்தைகளை வாக்கியங்களை எடுத்துக் கொள்வது பெரிய சுமையாக இருக்கிறது .
ஓரிடத்தில் அடுத்த ஐந்து நிமிடத்தில் முடிக்க வேண்டிய கதைப் போக்கை அடுத்து அரைமணி நேரம் இழுத்துப் போகிறார்கள் .
விளைவு ?
ஆரம்பித்த குடும்பக் கதையை முடிக்காமல் விட்டு விடுகிறார்கள் . இல்லை இந்த விசயத்தில் படத்தை முடிப்பதுதான் இயக்குனரின் நோக்கம் என்றால் , அதற்கான பட ஆரம்பம் இது அல்ல .
மொத்தத்தில் ராஜாவுக்கு செக்.. பாதி கட்டங்களில் திக் திக் … மீதி கட்டங்களில் ரொம்ப வீக்