
இங்கிலாந்து-கனடா கூட்டுத் தயாரிப்பாக 2007-ம் வருடம் வந்த படம் ‘Butterfly on a Wheel’ ஜேம்ஸ்பாண்ட் நடிகர் பியர்ஸ் பிரான்ஸன் தனது ஹீரோயிசத்தை கடந்து அந்தப் படத்தில் ஒரு வில்லத்தனமான கேரக்டரை செய்திருந்தார்.
இதே கதை 2010-ம் ஆண்டு ‘காக்டெயில்’ என்ற பெயரில் மலையாளத்தில் ஜெயசூர்யா, அனூப் மேனன், சம்விருதா சுனில், பகத் பாஸில், இன்னசென்ட் நடிக்க அருண்குமார் இயக்கத்தில் வந்தது தயாரித்து வெளியிட்டார்கள். கதைக்கான இடத்தில் ஒரிஜினல் கதாசிரியரான William momssey-யின் பெயர் இடம் பெற்றிருந்தது.இப்போது 2014-ல் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை மலையாளத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்று அழகிய தமிழ் மகன்’ படத்தின் வசனகர்த்தா வான பரதன் இயக்கத்தில் அதிதி ஆக்கி ஆக்கி இருக்கிறார்கள்.
அழகான, அமைதியான இல்லற வாழ்க்கையில் இருக்கும் ந்ந்தா மற்றும் அன்ன்யாவின் வாழ்க்கையில் நிகேஷ்ராம் மின்னலாய் நுழைகிறார். கையில் துப்பாக்கி. அவருடைய செல்போனின் மறுமுனையில் தம்பதிகளின் ஒரே மகளின் உயிர். இனி நிகேஷ் சொல்வதைத்தான் இந்த்த் தம்பதிகள் கேட்க வேண்டும்.. மறுத்தால் மகளின் உயிர் போய்விடும். நிகேஷ் கேட்பதையெல்லாம் செய்கிறார்கள்.. சொல்கிறார்கள்.. தருகிறார்கள். இறுதியில் என்னாகிறது என்பதுதான் படம்..!
நந்தா நன்று . ஆனால் இந்தா இந்தா என்று சொல்வது போல, மலையாள ஜெயசூர்யா கேரக்டரில் தமிழில் நிகேஷ்ராம். அடக்கமான, ஆக்ரோஷமான, அழுத்தமான கேரக்டரை பதிவு செய்திருக்கிறார்.அனன்யா அடக்கி வாசித்து நடித்திருக்கிறார்.மலையாளத்தில் இன்னசென்ட் செய்த கேரக்டரில் தமிழில் தம்பி ராமைய்யா! காரில் செல்லும்போது நிகேஷ் பற்றி அவிழ்த்து விடுவதும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாட்டிலை வாங்கிவிட்டு பின்பு திருப்பிக் கொடுக்க அல்லல் படுவதும் அருமை
திரைக்கதை பிரதானமாக உள்ள படத்தில் பல இடங்களில் பலவீனமாக பயணிக்கிறது திரைக்கதை.
கிளைமாக்ஸ் படு அதிர்ச்சி . இறைவா! இதெல்லாம் சினிமாக் கதையில் மட்டுமே நடக்கட்டும் .
அதிதி .. அடி ஆத்தி !