தேவகன்யா புரொடக்சன்ஸ் சார்பில் பிஜு கரிம்பின்கலயில் தயாரிக்க ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ் சிவப்பிரகாசம், செல்வா ஆகியோர் நடிக்க,
ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுக இயக்குநர் உல்லாஷ் சங்கர் இயக்கியிருக்கும் படம் ‘1982 அன்பரசின் காதல்’.
தமிழ்நாடு கேரள எல்லையில் தமிழ் நாட்டுப் பையன் ஒருவன் கேரளப் பெண்ணை காதலிக்கிறான். 1980 கால மனோநிலையில் வாழ்பவன் அவன் . அவள் தன்னை சந்திக்க கேரளாவுக்கு வரச் சொல்ல , போகிறான் . மலைப்பாங்கான பகுதியில் இருவரும் பயணிக்கும் போது ஒரு மலையாள ரவுடிகள் கும்பலிடம் சிக்க, ஒரு தமிழ் நாட்டு ஆள் வந்து காப்பாற்றுகிறார்.
ஆனால் இரவில் அவரோடு தங்கும் சூழல் வர, அவரைப் பார்த்துப் பயப்படும் பெண் அங்கிருந்து தப்பிக்கலாம் என்று காதலனிடம் சொல்ல இருவரும் தப்பிக்க முயல , அவர்களை அவர் துரத்துகிறார் .
ஒரு நிலையில் அவர் நல்லவர் என்று தெரிய வருகிறது . இரும்புக் கருவிகள் ஆயுதங்கள் மட்டுமின்றி துப்பாக்கி, வில் ஆகியவை செய்யும் கொல்லன் வேலை பார்க்கும் அவர், முரட்டுத்தனமாக நடந்து கொள்வதற்கு காரணம் , அவரது மகள் ஒருவனைக் காதலிக்க ,
அவன் பெண்ணிடம் தப்பாக நடந்து கொள்ள முயல்பவன் என்று எண்ணி அவனை அவர் கொல்ல முயல நடந்த விபரீதமுமே . அது என்ன விபரீதம்? நடந்தது என்ன ? அது எப்படி பயணம் போன ஜோடியின் காதலுக்கு உரம் ஊட்டியது என்பதே படம் .
முதலில் கண்ணைக் கவர்வது தேனி, கம்பம், போடிநாயக்கனூர், மூணார் மற்றும் கேரளாவில் உள்ள அழகிய இடங்களின் மயக்கும் லொக்கேஷன்களும் ஜிஸ்பின் செபாஸ்டியனின் ஒளிப்பதிவும்தான்.
இரும்புக் கொல்லனின் மகளின் பிளாஷ்பேக் காட்சிகளின் விவரணைகளில் கவர்கிறார் இயக்குனர். உல்லாஸ் ஷங்கர் . கொல்லனாக நன்றாக நடித்தும் இருக்கிறார். அந்த கொல்லன் பட்டறைப் பின்னணியும் அது கடத்தும் உணர்வும் அபாரம்.
படத்தில் வரும் நாயகிகளில் காதல் ஜோடிப் பெண்ணாக வரும் சந்தனா அரவிந்த் கவர்ச்சி தேங்காய் என்றால் , கொல்லன் மகளாக வரும் அருணிமா கழுத்துக் கீழ் கவர்ச்சியும் கழுத்துக்கு மேல் கண்ணியம் என்று இரண்டு வகையிலும் அசத்துகிறார்
நாயகன் அன்பரசுவாக வரும் ஆஷிக் மெர்லின், கொல்லன் மகளின் காதலனாக வரும் அமல் ரவீந்திரன் இருவரும் சிறப்பு . எஸ் . சிந்தாமணியின் இசையில் பாடல்கள் ஒகே . பின்னணி இசை சிறப்பு .
திரைக்கதையில் இருக்கும் லாஜிக் மீறல்கள், அழுத்தமின்மை , சில செயற்கையான காட்சிகள் இவையே படத்தின் பின்னடைவுக்குக் காரணங்கள்.