ஃபேமிலி @ குறும்பட விமர்சனம்

தான் நடித்த படங்களில் எல்லாம் தன்னளவில் சிறந்த பங்களிப்பைக் கொடுத்த நடிகர் உதயா,  இயக்குனர் ஆகி உருவாக்கிய செக்யூரிட்டி என்ற குறும்படம் பலரின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு இலக்கான நிலையில் , 

இரண்டாவதாக பூர்ணிமா பாக்யராஜ், விஜித், லாவண்யா, பிளாக் பாண்டி, மாஸ்டர் சாய் யோகன் , மாஸ்டர் மித்திரன், பேபி த்ரி நாராயணி சரத், பேபி ரோகினி ஸ்ரீ நடிப்பில் இயக்கி இருக்கும் புதிய குறும்படம்  ஃ பேமிலி.
 
வேறு வேறு வீட்டில்-  குடும்பத்தில் பிறந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் காதலித்தோ , நிச்சயிக்கப்பட்ட வகையிலோ திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள் . பிடிக்கவில்லையா ? சின்னச் சின்ன விசயங்களுக்க்காகக் கூட பிரிந்து போக எண்ணி விவாகரத்து செய்து கொள்வது எளிதாக இருக்கிறது. 
ஆனால் அவர்கள் பிள்ளையாக பிறந்து  வளர்ந்து , இன்னும் பெற்றோரின் அரவணைப்பும் பராமரிப்பும் தேவைப்படும் நிலையில் உள்ள பிள்ளைகள்? அண்ணன் தங்கைகள் ? 
 
பிடிக்கவில்லை என்று பிரிந்து போக முடியுமா? 
 
போகிறார்களா?
 
 அதுவும் மழலை வயதில் போக நினைப்பார்களா? 
 
ஒரு விவாகரத்தால்,  பிள்ளைகள் பிரிந்து போவதும் , அல்லது பெற்றோரில் ஒருவரை இழப்பதும் என்ன நியாயம்?
 
இந்த நியாயமான கேள்விக்கு, கனமான பதிலாக வந்திருக்கிறது இந்தக் குறும்படம் . 
 
சரியான கதாபாத்திரங்கள், நல்ல நடிக நடிகையர் , நேர்த்தியான கதைப்போக்கு, சிறப்பான படமாக்கல்,  அருமையான இயக்கம் என்று ஃ பேமிலி குறும்படத்தை பார்ப்பவர் இதயத்தில் நிலை நிறுத்துகிறார் உதயா . 
 
ஜஸ்ட் ஒரு brerathing time ஆக, காமெடிக் காட்சி ஒன்றில் ( அந்தக் காட்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்) துவங்கும் படம் அடுத்த காட்சியிலேயே சூடு  பிடித்து கடைசி வரை பயணித்து கைதட்டல் பெறுகிறது . 
 
குடும்பம் உடையக் கூடாது என்று எண்ணும் குடும்ப நலக் கோர்ட் அதிகாரியாக பூர்ணிமா பாக்யராஜ்  பண் பட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார். பக்குவமற்ற  வெறுப்பை வளர்த்துக் கொண்டு விவாகரத்துக் கேட்கும் மனைவி பாத்திரத்தில் லாவண்யாவும் , அதைத் தடுக்க முடியாமலும் சுய ஈகோ கலந்து தடுமாறவும் செய்யும் கதாபாத்திரத்தில் விஜித்தும் கரைந்து கிடக்கிறார்கள் . அருமை 
 
சுட்டிகள் மாஸ்டர் சாய் யோகன் , மாஸ்டர் மித்திரன், பேபி த்ரி நாராயணி சரத், பேபி ரோகினி ஸ்ரீ  நம்மைக் கவர்ந்து கலங்கடிக்கிறார்கள்
 
எல் கே விஜய்யின் ஒளிப்பதிவும் நரேன் பாலகுமாரின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன . 
 
வசனம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . 
 
ஆனாலும் என்ன …
 
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய முறையில்  சொல்ல வேண்டிய  தரத்தோடு சொல்லி இருப்பதன் மூலம் நம்பிக்கைக்குரிய இயக்குனராக ஜொலிக்கிறார் உதயா . 
 
மிகச் சிறந்த வெள்ளித்திரை இயக்குனராக விரைவில் ஜொலிக்கப் போகிறீர்கள் உதயா . 
 
அட்வான்ஸ் வாழ்த்துகள் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *