ஜாக்கி ஷெராப் நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கம் ‘பாண்டி முனி ‘

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த, 

ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்க, 

பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி  வேடத்தில் நடிக்க, 

 புதுமுக நடிகையான மேகாலி  பாண்டி என்ற வேடத்திலும் நடிக்க, 

இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்க, 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கஸ்தூரிராஜா இயக்கும் படம்   “ பாண்டி முனி “     ஒளிப்பதிவு   –  மது அம்பாட்   

இசை  –  ஸ்ரீகாந்த் தேவா

கலை   –  ஸ்ரீமான் பாலாஜி

நடனம் –  சிவசங்கர்

ஸ்டன்ட்  –  சூப்பர் சுப்பராயன்.எடிட்டிங்  –  சுரேஷ்அர்ஸ்

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா, ”  இது வித்தியாசமான படம்.

இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.

சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது.சாமி பாதி,  பேய் பாதி என்று  கதையின் போக்கு இருக்கும்.

இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி.

படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது

இது நான் இயக்கும் 23 வது படம்.

ஆனால் இப்போது உணர்வு ரீதியாக இதுதான் நான் இயக்கும் முதல் படம் ” என்றார் . நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த ஜாக்கி ஷெராப் , ” எனது இந்திப் படங்களை நூறு நாள் ஓட்டும் அளவுக்கு, 

தமிழ்நாடு என்னை  தனது பிள்ளையாக ஏற்றுக் கொண்டது . அந்த நன்றி எனக்குள் எப்போதும் உண்டு . 

ஆரண்ய காண்டம், மாயவன் படங்களுக்குப் பிறகு நான்  நடிக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் இது .  மிக வித்தியாசமான கதாபாத்திரம் . வித்தியாசமான படங்களை தரும் படைப்பாளிகள் இங்கு நிறைய  உண்டு . 

மேலும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ” என்றார். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *