சபாபதி @ விமர்சனம்

ஆர் கே என்டர்டைன்மென்ட் சார்பில் ரமேஷ் குமார் தயாரிக்க, சந்தானம், பிரீத்தி வர்மா, எம் எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, குக் வித் கோமாளி புகழ், உமா, ரமா, வைஷ்ணவி மதுரை முத்து  நடிப்பில் சீனிவாசராவ் இயக்கி இருக்கும் படம் சபாபதி. 

 யாருடைய வாழ்க்கையில் வேண்டுமானாலும் விளையாடும் திறம் கொண்ட இறைவன்,  சபாபதி (சந்தானம்)என்கிற திக்குவாய் உள்ள -நேர்மையான நபர் மீது  விளையாடும் நவீன திருவிளையாடலே இந்த படம்.

 கண்டிப்பான தமிழ் வாத்தியார் (எம் பாஸ்கர்) பாசமுள்ள அம்மா (உமா) மற்றும் தங்கை ( வைஷ்ணவி) என்ற குடும்பம் கொண்ட சபாபதிக்கு திக்குவாய் காரணமாக வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவனது அப்பா அதை அவனது திறமைக்குறைவாக எண்ணுகிறார் .

ரிட்டயர்டு ஆன பிறகு வீட்டில் மரியாதை இழந்த நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டில் ரொம்ப கடுமையாக நடந்து கொள்கிறார் . அதுவும் பிரச்னைக்கு காரணம். 

சிறுவயது முதல் எதிர் வீட்டில் குடியிருக்கும் சாவித்திரி என்ற பெண்ணுக்கும் (பிரீத்தி வர்மா) சபாபதிக்கும் காதல். ஆனால் சாவித்திரி அம்மாவுக்கு (ரமா ) இதில் உடன்பாடு இல்லை. எனவே அங்கும் சிக்கல். 

இந்த நிலையில் லக்கி ராஜா என்ற அரசியல்வாதி ( ஷாயாஜி ஷிண்டே) தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்து இருந்த பணம் இருபது கோடி ரூபாய் ஒரு விபத்தில் சபாபதி கையில் கிடைக்கிறது . 

அப்புறம் என்ன ஆச்சு என்பதே சபாபதி . 

திக்குவாயால் பாதிக்கப்படும் நபராக நெகிழ்வை உண்டாக்கிறார் சந்தானம் . தகப்பனை அவமானப்படுத்துவது என்ற விஷயம் உறுத்தினாலும் எம் எஸ் பாஸ்கர் , சந்தானம் காட்சிகளில் காமெடி ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகிறது. 

வசனம் செறிந்த படம் என்றாலும் தனது சிறப்பான ஒளிப்பதிவால் கவனம்  கவர்கிறார் பாஸ்கர் ஆறுமுகம்.

 இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையும் சிறப்பு. 

கதாநாயகி ஒகே ரகம் .புகழ் நடிப்பால் படத்துக்குப் பலன் இல்லை. ஒப்பிடுகையில் ஓரிரு காட்சியில் வரும் மதுரை முத்து கலகலக்க வைக்கிறார் .

குடும்பம் , பொறுப்பு, நேர்மை, நியாயமான கோபம் என்று நல்ல  விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி இயக்கி இருக்கிறார் சீனிவாச ராவ்.

‘அவன் ஏமாத்துனா நீயும் ஏமாத்து , நேர்மையாக இருந்தால் எல்லாம் பிழைக்க முடியாது ‘என்று நேரடியாக சொல்லும் படங்கள் வரும் காலத்தில் நல்லவன் வாழ்வான் என்று முடிகிற ஒரு படத்தை பாசம், காமெடி , கலர்புல்லான காட்சிகள் என்று உருவாக்கி இருபதற்கே அவரை பாராட்டலாம். 

இயக்குனரே நடித்து இருக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சி நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி . 
தயாரிப்பாளர் ரமேஷ் குமாரும்  ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைக்கிறார்  .

சபாபதி .. மனசுக்கு இதமான பதி. 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *