பரணிதரன் , செந்தில் குமார் இவர்களின் ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்காக , நீலிமா இசை மற்றும் இசை இருவரின் தயாரிப்பில் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் , அர்ஷத் நடிப்பில் ஜெயராஜ் பழனியின் எழுத்து இயக்கத்தில் உருவாகி செப்டம்பர் 28 அன்று ஷார்ட் பிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் படம்.
அதை அறிந்து கொந்தளிக்கும் இஸ்லாமிய குடும்பம் இரு பெண்கள் மேலும் கோபம் கொள்ள , ஒரு நிலையில் மகளுக்கு அவசரம் அவரசமாக ஒரு மாப்பிளையை பார்த்து நிக்கா செய்து வைக்க வாப்பா முயல , என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .
படத்தில் வரும் பெண்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்க, ஆண்கள் அனைவரும் செயற்கையான நாடகத்தனமான நடிப்பைக் கொடுத்துள்ளனர் . தயாரிப்பளர் இசையிடம் கேட்டால் பட்ஜெட் பிரச்னைதான் சார் என்றார் . இதே பட்ஜெட்டுக்கு நல்ல புதிய நடிகரகளைக் கண்டறிந்து பயன்படுத்தி இருக்கலாம் சார் .
நன்றாகவே நடித்திருக்கிறார் என்றாலும் ஸ்ருதி பெரியசாமியின் தோற்றம் இதற்குப் பொருந்தவில்லை . இன்னும் கொஞ்சம் அப்பாவித்தனமும் இது போலவே அப்பாவித்தனமும் கொண்ட ஒரு நடிகை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . 