‘யார் இவன்’ ஆடியோ வெளியீடு

yar 5

வைக்கிங் மீடியா ஆண்டு  எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி தயாரிக்க,

தெலுங்கு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழில் அதிபர் சச்சின் தமிழில் அறிமுகமாக ,

ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில், 

டி.சத்யா என்பவர் எழுதி இயக்கும் படம் யார் இவன்.

சத்யாவின் தாத்தா டி. பிரகாஷ் ராவ் ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும்  இயக்கியவர் .

uar 2

சத்யாவின் அப்பா டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் .

வெண்ணிலா கபடிக் குழு உட்பட மூன்று படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த இந்த டி.சத்யா , தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கும் படம் யார் இவன்  தமிழில் இது இவருக்கு முதல் படம்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நிறைய திரைப் பிரபலங்கள் !

அருண் விஜய், கே எஸ் ரவிக்குமார், அருண் பாண்டியன் , சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா,

yar 6

மூன்று முகம் படத்தை இந்தியில் ஜான் ஜானி ஜனார்த்தன் என்ற பெயரில் இயக்கிய டி . ராமராவ் போன்றவர்கள் பாடல்களை வெளியிட ,

நடிகர் பிரபு முன்னோட்டத்தை வெளியிட்டார் .

எல்லோரும் சினிமா பாரம்பரியம் கொண்ட சத்யாவை வாழ்த்தினார்கள் . ஹீரோ சச்சினை வரவேற்றார்கள் . ஹீரோயின் ஈஷா குப்தாவை , கிஷோரை,  பிரபுவை , பாராட்டினார்கள்

yar 1

“தமிழில் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. கபடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது ” என்றார் நாயகன் சச்சின்

படம் பற்றிக் கூறும்  இயக்குனர் சத்யா ” இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படம் .

கபடி விளையாட்டின் பின்னணியில் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .  ஹீரோ ஒரு கபடி வீரன் . கபடியை ரசிக்கும்  கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை நேசித்து ,

மணந்து  கொள்கிறார் . ஒரு நிலையில் அந்தப் பெண் கொல்லப் படுகிறாள். கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது .

yar 3

ஹீரோயின் அப்பாவான கோடீஸ்வரர் குற்றவாளியை தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறார் .  ஹீரோ என்ன செய்தான் என்பதுதான் கதை . ஹீரோயின் அப்பாவாக பிரபு சார் நடிக்கிறார்

மேலோட்டமாக பார்த்தால் இது வழக்கமான திரில் படம் போல இருக்கும் . ஆனால் அப்படி இல்லாமல் மனோவியல் முறையில் படத்தை கொண்டு போகிறோம் .

 இது ஒரு மைன்ட் கேம் படமாக அதாவது மூளை விளையாட்டுப் படமாக இருக்கும்  வித்தியாசமான காட்சிகள் . வித்தியாசமான சூழல்கள் ரசிகர்களைக் கவரும் .

yar 7

படத்தின் எல்லாப் பாடல்களையும் மறைந்த நா . முத்துக் குமார் எழுதி இருக்கிறார் அவர் கடைசியாக பாடல் எழுதிய படம் இதுதான் என்று நினைக்கிறேன் .

இசை  தமன் . சூர்யா நடித்த 24 படத்துக்கு படத் தொகுப்பு செய்த புடி பிரவீன் படத் தொகுப்பு செய்கிறார்

தாத்தா மற்றும் அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் எனக்கு இருக்கிறது. ” என்றார் ” எனறார்.

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *