கல்கோனா கண்ணழகி தெரியுமா ?

naalu 1

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ்  சார்பில் மாதவன் , மோகன் இருவரும் தயாரிக்க, அறிமுக நாயகன் இந்திரஜித், தேவிகா மாதவன் ஆகியோர் நடிக்க, தயாரிப்பவரான மாதவனே  எழுதி இயக்கி இருக்கும் படம்,  நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க . 

இந்திர ஜித், மாதவனின் தம்பிதான் . இவர்கள் இருவரும் மகான் கணக்கு படத்தை இயக்கிய சம்பத் ராஜின் தம்பிகள் .
naalu 2
கதையும் குடும்பக் கதைதான் என்பது படத்தின் டிரைலரில் இருந்து ஆழ்ந்து யோசித்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
பெண் பார்க்கும் சடங்கு மூலம் பெண் தேடும் ஒருவன், அவன் பார்க்கும் பெண்கள், அது தொடர்பான நிகழ்வுகள் மற்றும் பிரச்னைகளை சிங்க முத்து , சுவாமிநாதன், சிவா சங்கர் மாஸ்டர் ஆகியோரைக் கொண்டு காமெடியாக சொல்ல…. முயன்று இருக்கிறார்கள் . 
இந்திர ஜித் பார்ப்பதற்கு அந்தக் கால டி.ராஜேந்தர், மற்றும் சசிகுமார், ஜே.கே.ரித்தீஷ், கஞ்சா கருப்பு, ஆகியோரின் கூட்டு சாயலில் இருக்கிறார் . 
naalu 3
தேவிகா மாதவன் நல்ல தமிழில் பேசுகிறார் . இவர் பெயரில் மாதவன் இருந்தாலும் இவருக்கும் இந்த படத் தயாரிப்புக் குடும்பத்துக்கும் எந்த உறவும் (இதுவரை?) இல்லை . 
மகான் கணக்கு , சதுரன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ரிஷால் சாய் தான் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளர் . அந்த வகையில் சதுரன் பட இயக்குனர் ராஜீவை மேடைக்கு அழைத்து கவுரவித்தார் ரிஷால் சாய் . 
கல்கோனா கண்ணழகி என்ற பாடல் உற்சாகம் தந்தது. அதிலும் பல்லவி ரொம்ப சிறப்பு. 
naalu 4நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹரிதாஸ் படத்தின் வசனகர்த்தாவும் இயக்குனரின் நண்பருமான வெங்கடேசன் ” ஹரிதாஸ் படத்தில் ‘ உங்க பையன்லாம்  ஜெயிக்கறதுதான்  வெற்றி . ஆனா என் மகன் கலந்துக்கறதே வெற்றி’ அப்படின்னு நான் ஒரு டயலாக் வச்சிருப்பேன் .
இப்போ சினிமாவில் தோற்காம நீடிப்பதே பெரிய வெற்றி . அந்த வகையில் நண்பர் மாதவனின் முதல் வெற்றியாக இந்தப் படத்தின் தயாரிப்பை நான் பார்க்கிறேன் . நாலு பேரும் நல்லவிதமா பேசும்படி படம் நிஜ வெற்றி பெற  வாழ்த்துகள் ” என்றார் .
Naalu-Peru-Naalu-Vithama-Pesuvanga-Audio-Launch-Photos-7
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் களஞ்சியம் “படத்தின் பாடல்கள் அருமை . கல்கோனா கண்ணழகி உவமை நல்ல இருக்கு (எழுதியது யுக பாரதி ) . பாடல் என்ற பெயரில் ஆபாசங்களை எழுதும் நிலை பெருகி வரும் சூழ்நிலையில் நல்ல வரிகளை எழுத வேண்டியது நல்ல கவிஞரிகளின் கடமை ” என்றார் . 
ஹலோ இயக்குனர் மாதவன் ..!
கல்கோனா கண்ணழகி பாடல் பல்லவியை வச்சு ஒரு டிரைலர் ரெடி பண்ணுங்க . கலக்கலா வரும் ! 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →