மணிகண்டன் + விஜய சேதுபதி = ஆண்டவன் கட்டளை

andavan-1

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் தயாரிக்க, 

ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் எம் எஸ் ஷரவணன் வெளியிட , 
விஜய் சேதுபதி, ரித்திகா சிங், நாசர் ஆகியோர் நடிப்பில்
மணிகண்டன் இயக்கி இருக்கும் படம் ஆண்டவன் கட்டளை 
காக்கா முட்டைக்குப் பிறகு குற்றமே தண்டனை என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்த மணிகண்டன், 
 “மீண்டும் இன்னொரு வித்தியாசமான படத்துடன் வருகிறேன் ” என்கிறார் 
andavan-8
“கிராமத்தில் இருந்து சென்னை வரும் ஒருவனுக்கு இந்த நகரம் என்ன செய்தது ? என்ன கற்றுக் கொடுத்தது ?
 அதனால் என்ன என்ன நடந்தது ? என்பதுதான் படம் சொல்ல வரும் அடிப்படைப் பார்வை . 
கிராமத்தில் சென்னை வந்து வெளிநாடு போக விரும்பும் ஓர் இளைஞனுக்கு
 பாஸ்போர்ட்டில் ஒரு  விசயத்தை மாற்றிச் சொல்ல  வேண்டி இருக்கிறது.
 andavan
அது தப்பு என்று அவன் தயங்கினாலும்
 ‘அனுபவசாலிகள்’ அவனிடம் ‘இதெல்லாம் வழக்கமா பண்ற ஒண்ணுதான் ‘ என்று சொல்லி,
 சம்மதிக்க வைக்கிறார்கள்.
ஆனால்  அவனுக்கு அப்படி அமையவில்லை . அந்த  சிறு  தப்பு மேலும் மேலும் தவறுகளுக்கு வழி வகுக்கிறது . 
andavan-4
(அதாவது , எலியை  ஒழிக்க பூனை வாங்கிய சாமியார் ஒரு நிலையில்
பொண்டாட்டி கட்டி துறவறத்தையே கை விட்ட மாதிரி ?)
எண்ணிக்கையிலும்  அளவிலும் பெருகும் தவறுகள் ஒரு நிலையில்,
 அவனை  எங்கே   கொண்டு போய் நிறுத்துகின்றன என்பதே இந்தப் படம் . 
அந்த இளைஞன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் . 
andavan-5சிவாஜி சார்  நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் தலைப்பு இந்தப் படத்தின் கதைக்கு மிக பொருத்தமாக இருந்ததால் , 
முறைப்படி அனுமதி பெற்று வைத்தோம். 
ரித்திகா சிங் பத்திரிக்கையாளராக  நடிக்கிறார் . 
படத்தில் நல்ல பத்திரிக்கையாளர்களையும்  காட்டுகிறேன்.
தவறான  பத்திரிக்கையாளர்களையும் காட்டுகிறேன். 
andavan-6
பல ஒண்டுக் குடித்தன வீடுகளின் உரிமையாளரின் கெத்து ,
அங்கு உள்ள வாடகைக்காரர்களின் நிலைமை என்ற ஒரு களம் இருக்கிறது . 
படம் பெரும்பகுதி  சென்னையிலேயே எடுக்கப்பட்டது . வேலூரில் கொஞ்சம் எடுக்கப்பட்டது. 
படத்தில் ஐந்து பாடல்கள் . ஐந்தும் எல்லோருக்கும் பிடிக்கும் . 
andavan-7
தவிர பின்னணி இசையின் பகுதிகளையே ஒரு பாடலுக்கான மெட்டு போல அமைத்து இருக்கிறோம்
அந்த வகையில் படத்தில் ஒன்பது பாடல்கள் என்றே சொல்லலாம் . 
காக்கா  முட்டையும் குற்றமே தண்டனையும் எப்படி சம்மந்தமில்லாத இரண்டு வேறு வேறு களங்களோ, 
 அது போல இந்த ஆண்டவன் கட்டளை முற்றிலும்  வேறு மாதிரியான படம் . 
andavan-2
எனது அடுத்த படமான கடைசி விவசாயியும் மற்றுமொரு புதிதான களத்தில்தான் அமைகிறது .” என்கிறார் மணிகண்டன் 
“படத்தை வரும் பதினாறாம் தேதி திரைக்கு கொண்டு வருகிறோம். ” என்கிறார், 
andu
 படத்தை  வாங்கி வெளியிடும் ஸ்ரிகிரீன் புரடக்ஷன்ஸ் எம் எஸ். ஷரவணன் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *