பிருந்தாவனம் @ விமர்சனம்

brindha 1
வன்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்க , அருள் நிதி, விவேக், தன்யா ரவிச்சதிரன், எம் எஸ் பாஸ்கர், செல் முருகன் , டவுட்டு செந்தில் ஆகியோர் நடிக்க, ராதா மோகன் இயக்கி இருக்கும் படம் பிருந்தாவனம் ரசிக நந்தகுமாரர்கள் ரசிப்பார்களா ? பார்ப்போம் ஊட்டியில் ஒரு சலூன் கடையில் முடி திருத்தும் கலைஞராக இருக்கும் கண்ணன் (அருள்நிதி)  செவித்திறன் பாதிப்புள்ள ஒரு மாற்றுத் திறனாளி. பேசவும் மாட்டான் .

அவனது சக தொழிலாள நண்பன் வர்க்கி (டவுட்டு செந்தில்)அதே பகுதியில் ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்திருப்பவரின் ( தலைவாசல் விஜய் ) மகள் சந்தியாவுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) கண்ணன் மீது காதல் . கண்ணனுக்கோ அவள் மீது நட்பு மட்டுமே சிறு வயதில் ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை பலி கொடுத்ததோடு கேட்பு மற்றும் பேச்சுத் திறனையும் இழந்த கண்ணனை மாற்றுத் திறனாளிகளுக்காக இல்லத்தில் சேர்த்து விட்டவர் லூயிஸ் ( எம் எஸ் பாஸ்கர்)

இப்போது கண்ணன் வீடு பார்த்துக் குடி இருப்பதும் லூயிஸ் வாழும் பகுதியுயல்தான் . அங்கு அவனுக்கு நட்பாக பல குடும்பங்கள் .

?????????????????????????????????????????????????????????????????????????

இந்த நிலையில் உடல் நலம் சரியில்லாமல்  வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கும் தன் நண்பனின் ( சுப்பு பஞ்சு) கடைசி ஆசையை நிறைவேற்ற ஊட்டி வருகிறார் நடிகர் விவேக் ( நடிகர் விவேக்)

அவருக்கு கண்ணன் , சந்தியா, வருக்கி ஆகியோர் உதவுகின்றனர் . எனவே அவர்களோடு நெருங்கிப் பழகுகிறார் .
ஒரு நிலையில் சந்தியா காதலிப்பதும் அதை கண்ணன் மறுப்பதும் அவருக்கு தெரிய வருகிறது .

காதலை சேர்த்து வைக்க விவேக் முயல , காதலை மறுக்க, கண்ணன் சில காரணங்கள் சொல்கிறான் . அப்போது அவனது மாற்றுத் திறன் பற்றி ஒரு திருப்பம் நிகழ்கிறது .

கண்ணனின் காரணங்கள் என்ன ? அவை  நியாயமானவையா ? சந்தியாவின் காதல் என்ன ஆனது என்பதே பிருந்தாவனம் .

மிக எளிய இயல்பான கதையை எடுத்துக் கொண்டு செண்டிமெண்ட் , நகைச்சுவை சேர்த்து தனக்கே உரிய பாணியில் படத்தைக் கொடுக்கிறார் ராதா மோகன் .

brindha 5

நடிகர் விவேக்கை நடிகர் விவேக்காகவே பயன்படுத்துவது நல்ல ஐடியா . வித்தியாசமான நாவலடி . அதற்கேற்ப விவேக்கின் மற்ற பட காமெடிகளை பயன்படுத்தியது புத்திசாலித்தனம் .

விவேக்கின் மகன் இறந்த விஷயத்தைக் கூட ஒரு காட்சியில் ஞாபகப் படுத்துவது நெகிழ்வாழம்.விவேக்கின் நண்பருக்கான பிளாஷ்பேக் எளிமை ஆனால் கனம்.அனாதைப் பிள்ளைகளுக்கு உதவ லூயிஸ் கேரக்டர் சொல்லும் காரணம் நெகிழ்ச்சி .

ராதா மோகனுக்கே உரிய சர்ச் செண்டிமெண்ட், கிம்மிக்ஸ் ஃபாண்டசி காட்சிகள் இதிலும் உண்டு.

பொன். பார்த்திபனின்  வசனங்கள் நெகிழ்வு , நகைச்சுவை , கவிதை என்று எல்லா ஏரியாக்களிலும் விளையாடுகின்றன.

படத்துக்கு மிகப்பெரிய பலம்  வசனம். (உதாரணம் ”காதல் என்னிடம் பேசும் . நட்பு எனக்காகக் பேசும் ” )விஷால் சந்திர சேகரின் பின்னணி இசை உணர்வின் மொழியாக இசைகிறது . அருமை brindha 4எம் எஸ் விவேகானந்தனின் ஒளிப்பதிவில் ஊட்டியின் நிஜ தன்மை விரிகிறது

மொழி படத்தில் ஜோதிகா நடித்தது போன்ற கதாபாத்திரம் அருள் நிதிக்கு . சிறப்பாக நடித்துள்ளார் .

தன்யா சினிமாத்தனம் இல்லாத அழகு .

எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல .

விவேக் கதாபாத்திரத்தை சுற்றி நிகழும் திரைக்கதை . அதை உணர்ந்து நடித்துள்ளார் விவேக்  .

இப்படி பல நல்ல விஷயங்கள் இருந்தும் திரைக்கதையின் முக்கியமான் இடங்கள் பலவீனமாக அமைந்து விட்டது .

படத்தின் இரண்டு முக்கிய விசயங்கள்  கண்ணனின் மாற்றுத் திறன் குறித்து அவன் எடுக்கும்  முடிவுகளும் , காதலை மறுக்க அவன் சொல்லும் காரணங்களுமே

இரண்டும் யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கின்றன (இதற்கு மேல் சொன்னால் சஸ்பென்ஸ் உடையும் . ஸோ…. நோ !)

????????????????????????????????????????????????

மாற்றுத் திறன் குறித்து அவன் எடுத்த முடிவை வளர்ந்த பிறகும் அவன் அப்படியே வைத்து இருப்பது , அவனது நேர்மை குறித்த பிம்பத்தை நிஜமாகவே உடைக்கிறது .

தவிர, கேட்புத் திறன்., பேச்சுத் திறன் இரண்டில் ஒரு குறை இருந்தாலும் சம்மந்தப்பட்ட நபர் மாற்றுத் திறனாளிதான் .

அதுபோல நான் வசதி இல்லாதவன் என்ற விசயத்தை மட்டுமே காதலை மறுக்க கூறுவதும் போங்கு.

அதுதான் அவனது கேரக்டர் என்று சொல்லவும் முடியவில்லை . ஏனெனில் மாற்றுத் திறன் தவிர அது வேறு எந்த வகையிலும் அப் நார்மல் கேரக்டரும் இல்லை .

அதனால் அவன் மனதை மாற்ற நடக்கும் போராட்டங்கள் மனதை ஈர்க்கவில்லை

எனவே படத்தின் இரண்டாம் பகுதி அந்நியப்பட்டுப் போகிறது . அதுதான் படத்தின்  பலவீனம் .

பிருந்தாவனம் .. இன்னும் குளுமையும் செழுமையும் தேவை

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *