டார்க் @ விமர்சனம்

எம் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் பைவ் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில் கணேஷ் கே பாபு, மற்றும் மாறன் தயாரிக்க, அஜய் கார்த்திக், அர்ச்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ் , கே. பாக்யராஜ், வி டி வி கணேஷ் நடிப்பில்  கணேஷ் பாபுவின் கதைக்கு திரைக்கதை வசனம்  எழுதி கல்யாண் ஜெகன் இயக்கி இருக்கும் படம். 

டிசைனிங் நிறுவனத்தில் வேலை செய்ய நகருக்கு வரும் ஓர் இளைஞன் (அஜய் கார்த்திக்), கருணாகரன் (கே.பாக்யராஜ்) என்பவரின்  வீட்டு மாடியில் வாடகைக்கு தங்குகிறான். கருணாகரனுக்கு ஒரு மகள் (அர்ச்சனா நேத்ரன்)
 
கொஞ்ச நாளைக்கு முன்பு  அந்த வீட்டில்  வாடகைக்கு இருந்த மூன்று நபர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் எரித்துக் கொண்டும் செத்த நிலையில், வீட்டுக்குள் அமானுஷ்ய நிகழ்வுகள்!  சில கோர உருவங்களை அவன் பார்க்கிறான்.உயிர் பயம் வருகிறது. 
 
வீட்டைக் காலி செய்யலாம் என்றால் பெரியவர் கருணாகரன் அந்த வீட்டை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த இளைஞன் ஒரு மூன்று மாதம் இருந்து விட்டு காலி செய்தால் பேய் இல்லை என்று உறுதி ஆகி அவர் வீடு விலை போய் விடும். இல்லாவிட்டால் விற்க முடியாது . அவருக்காக அவன் அந்த வீட்டில் தொடர்ந்து தங்க, என்ன நடந்தது என்பதே படம் 
 
படத்தின் துவக்கத்தில்  வரும் அந்த மூவர் கொலை, தற்கொலை , எரிப்பு காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பு.  இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர் ரவி சக்திக்கும் பாராட்டுகள். 
 
பாக்யராஜ் தோன்றும் முதல் காட்சியிலேயே  அவர் பிணமாக இருப்பது இந்த சமயத்தில்,  மனநிலையில் திக்கென்று இருக்கிறது. 
 
ஆழமான அமைதி திடீர் சத்தங்கள், கோர உருவம் என்று அவ்வப்போது பயமுறுத்துகிறார் இயக்குனர், ஒரு பேய்க்கதையை சைக்கலாஜிக்கலாகவும்  சொல்கிறார் . சில விஷயங்கள்  கவனிக்க வைக்கின்றன. விஷுவலாக சில  விஷயங்களை உணர்த்த முயல்வதும் சிறப்பு. 
 
மனு  ரமேசனின்  பின்னணி இசைக்கும் ஒலி வடிவமைப்புக்குமான புரிதல் நன்றாக இருக்கிறது சண்முகராஜாவின் கலை இயக்கமும் பேய்ப்பட உணர்வுக்கு பலம் சேர்க்கிறது. 
 
நாயகன் அஜய் கார்த்திக் உற்சாகமாக நடிக்கிறார் . பயம் குழப்பம், சோர்வு எல்லாவற்றையும் கண்களில் அழகாக காட்டுகிறார்.முகமும் ஒத்துழைக்கிறது. நல்ல திரைக்கதைகள் அமைந்தால் நன்றாக வருவார். 
 
விசாரணை அதிகாரியாக நட்டி நடராஜுக்கு உண்மையை கொண்டு வரும் கேரக்டர் . விடிவி கணேஷ் நடிகராக ஒரு சீனில் வந்து காமெடி பண்ண முயல்கிறார் 
 
கனவு என்று  சொல்லப்படும் சில விஷயங்கள் நிஜத்தில் நடக்கும் காட்சிகளாக  வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 
 
உள்ளுக்குள் ஒரு   கதை இருக்கிறது. அதை கடைசி நேரத்தில் அவசர அவசரமாக சொல்ல முயன்றது பலன் தரவில்லை. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *