பலமான எதிரிகளோடு தேவியின் வெற்றி

devi-1

தேவி படத்தின் வெற்றி விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக் குழு . 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பளர் கணேஷ் , ” பிரபுதேவா ,  இயக்குனர விஜய் இருவரும் சேர்ந்து எனக்கு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். படத்தை வெற்றிப் படமாகிய அனைவர்க்கும் நன்றி ” என்றார் . 
படத்தை  வாங்கி வெளியிட்ட அவ்ரா பிலிம்ஸ்  மகேஷ் பேசும்போது, ” சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய் செதுபதியின் றெக்க ஆகிய படங்ககுடன் தேவி ரிலீஸ் ஆகும் என்ற நிலை வந்த போது,
 எல்லாரும் பயமுறுத்தினார்கள் . நாங்கள் படத்தை நம்பினோம் . ஆரம்பத்தில் இருந்தே சூடு பிடித்த எங்கள் படம் போகப் போக முதல் இடத்துக்கு வந்தது.
devi-5
ஒரு வெற்றி என்பது எந்த பலமான எதிரிகளை வென்று பெறுகிறோம் என்பதைப் பொறுத்தே மதிப்பிடப் படும்.
அப்படிப் பார்த்தால்  சிவ கார்த்திகேயன் , விஜய் சேதுபதி படங்களோடு வந்த எங்கள் படம் பெற்ற இந்த வெற்றி மிகப் பெரிய வெற்றி ” என்றார் .
ஆர் ஜே பாலாஜி தன் பேச்சில் ” மகேஷ் சொன்னது போல  சிவா, மற்றும் விஜய் சேதுபதி படங்களுக்குன் இடையே எங்கள் படம் வருகிறது எனும்போது எல்லோரும்  கிண்டலாக சிரித்தார்கள் .
ஆனால் இப்போது அது எங்களது வெற்றிச் சிரிப்பாக மாறி இருக்கிறது.  
இனி  என்ன மாயம் செய்தாய்  படத்தில் விஜய்யோடு இணைந்தேன் . அவரது நெருங்கிய   நண்பன் ஆனேன். 
devi-3
விஜய்க்கு இதற்கு முன்போ பின்போ எந்தப் படம் ஓடினாலும் அது வேறு விசயம். ஆனால்  இந்தப் படத்தின் வெற்றி மிக முக்கியமானது .
இனி அவர் தொடர் வெற்றிகள் பெறுவார் .ஜெயம் ரவியும் அவரும் இணையும் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 
தேவி என்பது அடிப்படையில் ஹீரோயின் சப்ஜெக்ட் . ஆனால் படம் பார்த்து விட்டு வரும் எல்லோரும் பிரபுதேவா சூப்பர் என்கிறார்கள் . அதுதான் பிரபுதேவா சார் . 
 படத்தில் எனது நடிப்பும் பாராட்டப்படுவது மகிழ்ச்சி . 
 நான் நடிக்கும்போது  காமெடி என்ற பெயரில் எதையாவது  பன்ச் என்ற பெயரில் அடிக்க மாட்டேன் . கேரக்டருக்கு ஏற்றபடி மட்டுமே பேசுவேன் ” என்றார் 
இயக்குனர் விஜய் தனது பேச்சில்
devi-2
” என்னைப் பொறுத்தவரை எத்தனை படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு களம் இருக்கிறது .
ரெமோவும் றெக்கயும் அவற்றுக்கான களங்களில் ஓடுகிறது . எங்கள் படம் அதற்குரிய களத்தில் ஓடுகிறது . 
படம் இவ்வளவு  வெற்றிகரமாக ஓடுவதற்கு ஐசரி கணேஷ் சாரும் பிரபுதேவா சாரும் காரணம் . தமன்ன சிறப்பாகநடித்தார் . பிரபுதேவா சார் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் ” என்றார் 
பிரபு தேவா பேசும்போது, 
devi-4
” படத்தின் வெற்றி என்னை ரொம்ப சந்தோஷப்படுத்துகிறது.
ஓர் இடைவேளைக்குப்  பிறகு  நடிக்க வந்த என்னை மனதார ஏற்றுக் கொண்ட அனைவர்க்கும் நன்றி “என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *