”சொன்ன மாதிரி எடுத்துக் கொடுக்க முடியுமா?”

IMG_6772

தான் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு கதை சொன்ன ஒரு இயக்குனரிடம் , கதை பிடித்த நிலையில் தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் கேட்ட கேள்விதான் … மேலே உள்ள தலைப்பு. 

திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமார்  மற்றும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக விஷ்ணு விஷால், ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் , கர்ணா , ஜெயப்பிரகாஷ் , அனுபமா குமார் ஆகியோர் நடிக்க, ஆர்.ரவிக்குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் பட,ம் இன்று நேற்று நாளை . 
பொதுவாக நேற்று இன்று நாளை என்றுதான் சொல்வார்கள். இந்தப் பெயரில் அமார் எம்ஜிஆர் நடித்த படம் ஒன்று கூட உண்டு. ஆனால் ”அது என்ன இன்று நேற்று நாளை?” என்று கேட்டால், “அந்த விசயம்தான் இந்த படத்தை தயாரிக்க சொன்னது ” என்கிறார் சி.வி.குமார் . 
IMG_6705
”இன்றைய நிகழ்வு இதன் நேற்றைய நிலைமை அதன் நாளைய முடிவு என்ற நிலையில் நிகழ்வில் இருந்து முடிந்த ஒன்றை பேசி பின்னர் நடக்க இருக்கும் ஒரு விஷயத்தை பேசும்படம் இது . படம் ஒரு ஃபேண்டசி காமெடி மற்றும் காதல் படம் இது ” என்று மில்லி மீட்டர் கணக்காக அளந்து அளந்து பேசுகிறார்  இயக்குனர் ரவிகுமார் . 
“ஹீரோவுக்கு ஒரு விஷயம் கிடைக்கிறது . அது நேற்று எப்படி இருந்தது நாளை என்ன நிலைமைக்கு போகிறது என்பதுதான் படம் ” என்கிறார் விஷ்ணு விஷால். 
அமரகாவியம் படத்தில் ஆளுயர அழகு பொக்கேவாக நடித்த நிலையில் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மியா ஜார்ஜ் என்ன ‘மியாவ்’கிறார். ” என்னைப்பொறுத்தவரை படத்தின் கதைதான் முக்கியம் . பத்து வருஷம் ஆனாலும் மியா இப்படி ஒரு படத்துல நடிச்சான்னு சொல்லணும் . அந்த மாதிரி படங்கள்லதான் நான் நடிக்க ஆசைப்படுறேன். இன்று நேற்று நாளை அந்த மாதிரி ஒரு படம் ” என்கிறது இந்த பூனைக்குட்டி. 
IMG_6752
படத்தின் கதையை டைரக்டர் சொன்ன போதுதான் ‘ கதை ரொம்ப பிரமாதமா இருக்கு. . ஆனா சொன்ன மாதிரி குழப்பம் இல்லாமல் எல்லோருக்கும் புரியற மாதிரி எடுத்துக்கொடுத்துருவீங்களா?” என்று சம்மந்தப்பட்ட பலரும் கேட்டார்களாம். எல்லோருக்கும் உறுதி கொடுத்து படத்தை ஆரம்பித்து எண்பது விழுக்காடு  வரை முடித்து இருக்கிறார் இயக்குனர் ரவிகுமார் . 
அப்போ .. இப்பவே நீங்க ஒரு பிராமிசிங் டைரக்டர்தான் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →