இரவும் பகலும் வரும் @ விமர்சனம்

iravu 6

எஸ்.தணிகை வேல் வழங்க பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரிப்பில் அங்காடித்தெரு மகேஷ், அனன்யா இணை நடிப்பில் பாலா ஸ்ரீராம் இயக்கி இருக்கும் படம் இரவும் பகலும் வரும் . விடியல் வருமா ? பார்க்கலாம் ! 

அம்மா இறந்த நிலையில் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள,  சித்தியின் பாராமுகத்தோடு வளர்ந்த  இளைஞனுக்கு (அங்காடித் தெரு மகேஷ் ), குழந்தைத்தனமான மனதுடன் இருக்கும் கள்ளங்கபடு இல்லாத ஓர்  இளம்பெண் மீது ( அனன்யா) காதல் வருகிறது.

அதே நேரம் பணத்துக்காக பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடும்  பழக்கமும் அவனுக்கு இருக்கிறது .

நடுத்தர மக்கள் வாழும் குடியிருப்புகளில் மேஜிக் ஷோ நடத்தி மக்கள் மேஜிக் பார்க்கும் நேரத்தில் தனது ஆட்களை வைத்து வீடுகளில் கொள்ளையடிக்கும் வேலையை செய்கிறான் ஒரு சமூக விரோதி . அந்த சமூக விரோதிக்கு ஓர் அராஜக இன்ஸ்பெக்டரின் அதரவு இருக்கிறது .

iravu 5

நடுத்தர மக்கள் பெரிதாக போலீசுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் . போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்து விட்டு கண்ணீர் வடித்து விட்டு மறந்து விடுவார்கள் என்பதால் இப்படி நடுத்தர மக்களிடமே கொள்ளை அடிக்கிறார்கள் . சொல்லப் போனால் இந்த திட்டத்துக்கு சூத்திரதாரியே அந்த இன்ஸ்பெக்டர்தான் .

ஒரு நாள் அந்தத் திருட்டுக் கும்பல் திருடும் அதே இடத்தில்  திருடும் நாயகன்,  அவர்களிடம் மாட்டிக் கொள்ள… நாயகனையும் குழுவில் சேர்த்துக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர் .

இந்த நிலையில் நாயகனோடு நட்புப் பாராட்டும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியிடம் (யுவராணி),  நாயகனின் திருட்டு சகாக்கள் பைக்கில் வந்து செயினை அறுக்க, அந்தப் போராட்டத்தில் இறந்து விடுகிறார் அந்தப் பெண்மணி .

iravu 2

தான் காதலிக்கும் பெண்ணின் அண்ணிதான் அந்தப் பெண்மணி  என்பது தெரிந்ததும் நாயகன் மனம் நொறுங்கி விடுகிறான் . அதன் விளைவாக திருட்டுக் கூட்டத்தில் இருந்தபடியே, திருட்டுக்கு எதிராக கதாநாயகி நடத்தும் சமூக விழிப்புணர்வுக் குழுவில் சேர்கிறான் .

இன்ஸ்பெக்டர் தங்களை என்று எந்த ஏரியாவில் கொள்ளையடிக்க அனுப்புகிறார் என்பதை முன்கூட்டியே இவன் தகவலாக கொடுக்க,  ஒவ்வொரு இடத்திலும் இன்ஸ்பெக்டர் அனுப்பும் திருடர்களுக்கு மக்கள் தர்ம அடி கொடுக்கின்றனர் .

இதற்கெல்லாம் காரணமான கதாநாயகியை போட்டுத் தள்ள இன்ஸ்பெக்டர்  திட்ட மிட , அவளுக்கு உதவுவதும் தனது கூட்டத்திலேயே இருக்கும் நாயகன்தான் என்பதுவும்  இன்ஸ்பெக்டருக்கு தெரியவர … அடுத்து என்ன வந்தது என்பதே இரவும் பகலும் வரும் .

iravu 7

நடுத்தர வர்க்கத்து மக்களின் இயலாமை காரணமாகவே அவர்களை குறிவைத்து திருடும் கூட்டங்கள் இருக்கிறது என்ற இயக்குனரின் அப்சர்வேஷன் பிரம்மாதம் .

நாயகன்,  அவனது அப்பா , சித்தி தொடர்பான காட்சிகள் அருமை . 

மகேஷின் நண்பராக வருகிறார் நண்டு ஜெகன் .

 கேரக்டருக்கும் குடும்பப் பின்னணிக்கும் பொருத்தமாக இருக்கிறார் மகேஷ்  . ஆனால் காட்சியின் தன்மைக்கு ஏற்ப வேறு வேறு பொருத்தமான முக பாவங்களுடன் கூடிய நடிப்பை வழங்க முயல வேண்டும் .

iravu 1

அனன்யா சிறப்பு . ஆரமபத்தில் அவருக்கு ரசனைக்குரிய ஒரு வெள்ளந்தியான குணாதிசயம் சொல்கிறார் இயக்குனர். அதை படம் முழுக்க தொடர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .

யார் அந்த சித்தி ?  நடிகை என்பதையே மறந்து விடும் அளவுக்கு அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறார் .

வில்லனாக நடித்து இருக்கும் வெங்கடேஷ் டெர்ரர் காட்டுகிறார் . கடைசியில் நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு ஆடுவதை மட்டும் குறைத்து இருக்கலாம் .

உங்கள் வீட்டு நகை இப்படியும் திருடு போகலாம் என்று ஒரு விஷயத்தை சொன்ன வகையில் இந்தப் படத்தை பாராட்டலாம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →