‘கிம்பல்’ தொழில்நுட்பத்தில் ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 

கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது .

இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில்நுட்பத்தில் 

படமாக்கியிருக்கிறார்கள்.

அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், 

 “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம்  “மாலை நேரத்து மயக்கம்”. 

நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான்.  எனக்கு அதிகமாக கிராமத்து  வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை.

 எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான்.

 ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு.அவரிடமிருந்து கற்றுக்கொண்ட 

விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது. 

 எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்புஅனுபவமும் 

கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் .இயக்குனர் மாரி செல்வராஜ் . 

“பரியேறும் பெருமாள்” கதையைக் கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் 

வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் 

என்கிற எண்ணம் வந்தது.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில்தான்.  . 

அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள் ,

வெயில் மனிதர்கள்,விலங்கினங்கள் ….

இவைஅனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும், 

கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிற ஆசை. 

கதைக்களம் , அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும்

 தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.

40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை 

தோளில் சுமந்து கொண்டு  முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும்  

படம்பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

 பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.   கிராமத்து நிலமும் 

மக்களும் வாழ்வியலும் தினம் தினம் என்னைஉற்சாகமூட்டியதும் , தயாரிப்பாளர்

பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரிசெல்வராஜ் 

ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க 

பெரும் உதவியாக இருந்தது.

எந்த  இடத்திலும் அந்த நிலத்தின் வண்ணம்  மாறாமல் 

அதை அப்படியே கொண்டுவர  முயற்சி செய்திருக்கிறோம். 

மனிதர்களோடு விலங்குகளும் இந்தபடத்தில் நடித்திருக்கின்றன.

அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது.

குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது , 

திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் , அழகையும் 

 இந்த படத்தில் பெரிதும்எதிர் பார்க்கலாம்” என்றார்  உற்சாகமாக.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *