பேட்ட@ விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசி குமார், திரிஷா, சிம்ரன் நடிப்பில்  கார்த்திக் சுப்புராஜ்  இயக்கி இருக்கும் படம் . 

ஊட்டி . ஒரு கல்லூரி மற்றும் மாணவர் விடுதி.  ஜுனியர்களை ரேக்கிங் செய்யும் சீனியர் மாணவர் கூட்டம் .
 
அதன் தலைவன் ( பாபி சிம்ஹா) . கல்லூரியின் ஒட்டு மொத்த உணவு காண்ட்ராக்டில் கொள்ளை அடிக்கும், அவனது அப்பா ( ஆடுகளம் நரேன்)
 
மாணவர்களின் தொல்லை தாளாமல் ஹாஸ்டல் வார்டன்கள் பலரும் தெறித்து ஓட , அந்த  வேலைக்கு மந்திரியின் சிபாரிசோடு வருகிறார் ஒருவர் (ரஜினிகாந்த் )
 
சீனியர் மாணவர்களை அடக்கி ஜூனியர் மாணவர்களுக்கு பாதுகாப்பு வாங்கித் தருகிறார். 
 
ஜூனியர் மாணவர்களில் ஒருவனான அன்வரின் , இந்துப் பெண்ணுடனான காதலை , அவளது அம்மாவை (சிம்ரன்) ஈர்த்து
 
சமாதானப்படுத்தி, காதல் ஜோடி வருங்காலத்தில்  திருமணம் செய்து கொள்ளும் சூழலை உருவாக்கித் தருகிறார். 
 
சீனியர் ஜூனியர் மோதலில் ஜூனியர்களை நையப் புடைக்க சீனியர் மாணவர் தலைவன் தலைமையில் சிலர் வருகிறார்கள் .
 
ஆனால் வந்த கூட்டம் அன்வரை  கொலைவெறியோடு தாக்கும்போதுதான் , வேறு யாரோ அன்வரை கொல்ல முயல்வது தெரிகிறது . 
 
பிளாஷ்பேக் . 
 
மதுரையில் ஒரு முஸ்லிம் பெரியவரால் எடுத்து வளர்க்கப்பட்ட இந்து இளைஞன் பேட்டை வேலன் ( ரஜினிகாந்த் தான் ). மனைவி (திரிஷா) ஒரு மகன் .
 
அந்த முஸ்லிம்  பெரியவரின் மகன் (சசிகுமார் ) ஓர் இந்துப் பெண்ணை காதலிக்கிறான் .
 
பெண்ணின் தந்தை (இயக்குனர் மகேந்திரன்) மற்றும் அண்ணன்கள் அனைவரும் ஆற்றில் முறையற்று மணல் அள்ளி விற்கும் தாதா கூட்டம் . 
 
அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணின் காதலை ஏற்க மறுக்க, திருமணம் செய்து வைக்கிறான் பேட்டை வேலன்  
 
பகை வெடிக்க , பெண்ணின் சிறிய அண்ணன் சிங்காரம் ( நவசுதீன் சித்திக் ) , நல்லவன் போல் நடித்து
பெரும் இழப்பை உருவாக்குகிறான் . தப்பி ஓடி முமபையில் பெரிய  இந்துத்வ கட்சியின் முக்கிய புள்ளி ஆகிறான் . 
 
அவனது இரண்டாவது மகன் ரவுடி ( விஜய் சேதுபதி) 
 
அன்வர்சிங்காரத்தின் சகோதரியின் மகன் . .அன்வரை கொல்ல முயல்வதும் தாய்மாமன் சிங்காரம்தான் 
 
அன்வரை போட்டுத் தள்ளும் கும்பலுக்கு பின்னால் இருப்பது சிங்கரமா ?  ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லை எனில் நிகழ்ந்தது என்ன ?
 
அன்வரை , இப்போது வார்டனாக இருக்கும் பேட்டை வேலனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே இந்த பேட்டை . 
 
நீண்ட இடைவேளைக்கு பிறகு பழைய ரஜினி . வயது  தெரிந்தாலும்  பழைய  ஸ்டைல் கெத்து , மாஸ், காமெடி எல்லாம் பார்க்க முடிகிறது . 
 
காண்ட்ராக்டர் வீட்டுக்குள் நுழைந்து அப்பாவையும் மகனையும் மிரட்டும் காட்சியில்
 
பழைய ரஜினியை மறு உருவாக்கம் செய்து இருக்கிறார் கார்த்திக் சுப்ப்புராஜ் . அஸ்ஸ்ஸ்ஸ்சத்தல் !
 
அதே நேரம் கடைசியில் வரும் விஜய் சேதுபதி ரஜினி உறவு  சம்மந்தப்பட்ட  திரைக்கதைப் பகுதியும் அந்த இறுதித் திருப்பமும் அபாரம் . 
 
ரஜினி படம் என்றால் அதை தன்னுடைய பாணிப் படமாக கார்த்திக் சுப்புராஜ் முடித்து இருப்பது அபாரம் !
ரஜினியை மீறி ஸ்கோர் செய்கிறார்கள் விஜய் சேதுபதியும் , நவாசுதீன் சித்திக்கியும் ! சபாஷ் 
 
சசிகுமாரும் திரிஷாவும்  இயக்குனர் மகேந்திரனும் ஒகே . 
 
நிறைய இளம் கலைஞர்கள் .. வாழ்க !
 
சிம்ரன் ..ம்ம்ஹும் முடியல !
 
பாடல்கள் பின்னணி இசை ஒகே ரகம் !
 
பாவமன்னிப்பு படத்தில் வரும் வந்த நாள் முதல் பாடலின் முதல் பின்னணி இசைக்கு முன்பு வரும், 
 
சீழ்க்கை அடி மெட்டை படத்தின் தீம் மியூசிக் போலவே பயன்படுத்தி இருக்கிறார் அனிருத் . 
 
சிவாஜியின் பல பாடல்களை படத்தில் வானொலியில் ஒலிப்பது போல அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள் .
அது முழுக்க சிவாஜிக்கான நினவு கூரலாக இருந்து விடக் கூடாது என்றோ என்னவோ , ஒரு ஜெமினி பாட்டையும் கலப்படம் செய்து விட்டார்கள் .
 
.சண்டைக் காட்சிகள்  தெறிப்பு . 
 
கல்லூரியில் ரேக்கிங் செய்வது தப்பு . ஆனால் ஆரம்பத்தில் ரேக்கிங்கின் நோக்கம் என்பது  கலந்து பழகத்தான் என்று உருவாக்கப்பட்டது 
 
ஆனால் இந்தப் படத்தில் புதுசா வருபவன இருக்கறவன் எதிர்க்கிற குணம் இந்த ரேக்கிங் இல் இருந்துதான் வருது  என்று சொல்லும் ரஜினி ,
 
அந்த பழக்கத்தை ஒதுக்கணும் என்பது போல ஏதோ சொல்கிறார்  . அந்த வசனம் கூட ஒகே . 
 
ஆனால் ரேக்கிங் செய்யும் முகங்கள் எல்லாம், மண் சார்ந்த நேட்டிவிட்டி முகங்களாகவும் ,
 
ரேக்கிங் செய்யப்படும் மாணவர்கள் எல்லாம் வடக்கத்தி மேல் தட்டு முகங்களாகவும் இருக்கிறார்கள் 
 
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியவில்லை . 
 
இன்னும் எத்தனை அனிதாக்கள் சாக வேண்டும் என்பதும் புரியவில்லை 
 
புதிதாக வருபவர்கள் என்ன செய்தாலும் பழையவர்கள் மண்ணுக்கு உரியவர்கள் எதிர்க்கக் கூடாது .
 
ஆனால் பழையவர்களின் பாடல்களை இசைக் கோர்வைகளை மட்டும் புதியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் . அவர்களுக்கு எந்த மரியாதையையும் செய்யாமல் ! ஹா ஹா  ஹா !
 
தவிர படத்தில்  வேலன் என்ற கதாபாத்திரத்துக்கும் அப்பாற்பட்டு ரஜினியின் ரசிகர்களாகவும்
 
வருகிற மாணவ கேரக்டர்கள் பலரும் கூட வடக்கத்தி முகங்களாகவே இருக்கிறார்கள் . 
 
என்ன நியாயமோ தெரியவில்லை . 
 
அதே போல ஏதோ ஒரு வரதராஜ முதலியார் பாதிப்பில் நாயகன் வந்துவிட , தொடர்ந்து
 
இந்த படம் வரை தமிழ் நாட்டில் இருந்து மும்பை போனாலே பெரிய தாதா ஆகிடலாம் என்றே கதை சொல்வது நியாயமாவா இருக்கு ?
 
நிஜத்துல  சாதா தோசை கூட வாங்க முடியாது 
 
பக்கா கமர்ஷியல் ரஜினி பாடலாகவே வந்திருக்கிறது பேட்டை . 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *