‘பூக்கி ‘திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

Vijay Antony Film Corporation சார்பில், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்க, அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss match தெலுங்கு படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை, காதலர்களே தான் பிரச்சினையாக இருக்கிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் உலகை மையப்படுத்தி, ஒரு இளைஞன் சந்திக்கும் பிரேக்கப் அதைத் தாண்டி அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, பரபரப்பான திரைக்கதையில், கலக்கலான காமெடியுடன் சொல்லும், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக ‘பூக்கி’ உருவாகியுள்ளது.

தன் இசை ரசிகர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அஜய் திஷான் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தனுஷா  நடித்துள்ளார்.  இவர்களுடன் லக்‌ஷ்மி மஞ்சு, பாண்டியராஜன், சுனில், இந்துமதி,  மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, MJ ஶ்ரீராம், அஸ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியபோது, “நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. 

அவரது  உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.  மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள். மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரிதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

 அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு குழு அனைவருக்கும் என் நன்றி. இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி. “என்றார்.

இயக்குனர் கணேஷ் சந்திரா  பேசியபோது, “இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற ‘ஆக்ஷனை’ மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, ‘பூக்கி’ படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து ‘ஆக்ஷன்-கட்’ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.

இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி. \

விஜய் ஆண்டனி சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான் “தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்” என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்த படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா —இந்த மூன்று பேரும் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்த படம் இப்படியாக உருவாகியிருக்காது. இயக்கக் குழு, இசை, எடிட்டிங், உடை வடிவமைப்பு, தயாரிப்பு குழு, அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள்.

அதனால்தான் இந்த படம் இவ்வளவு வேகமாகவும் அழகாகவும் உருவானது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி”என்றார்..

நடிகர் அஜய் திஷான்  பேசியபோது, “இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நடந்திருக்கிறது. கதையை முதலில் படித்தபோதே, இந்த படம் மிகுந்த கவனத்தோடு, ஆழமான எழுத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் உணர்ந்தேன். உண்மை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த கதையே என்னை மிகவும் பாதித்தது. இயக்குநர் கணேஷ் சந்திரா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவருடன் வேலை செய்வது மிகுந்த ஊக்கமும் நிம்மதியும் தரும் அனுபவமாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப்படங்கள் வேலை செய்ய ஆசைப்படுகிறேன். 

படத்தில் உடன் நடித்த அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். தனுஷா நல்ல தோழியாக மாறி விட்டார். இந்த படத்தின் குழு அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாகவே இருந்தார்கள். அவர்களில்லாமல் இந்த படம் இவ்வளவு சீக்கிரமாகவும் ஒழுங்காகவும் முடிந்திருக்காது. உடை வடிவமைப்பாளர் மாளவிகா அவர்களுக்கும், நடன இயக்குநர் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். இந்த படம் எனக்கு ஒரு வேலை போல அல்ல; இன்னொரு வீட்டில் இருப்பது போலவே இருந்தது. அந்த அளவுக்கு அன்பும், நம்பிக்கையும் இந்த குழுவில் இருந்தது. என்னை ஆரம்பத்திலிருந்தே நம்பி ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படம் உங்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”என்றார்.

நடிகை லக்‌ஷ்மி மஞ்சு  பேசியபோது, “இந்த படம் உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷல். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இயக்குநர் மிகப்பெரிய  திறமைசாலி. மிகவும் தனித்துவமானவர். நடிகர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரை கண்டுபிடித்தற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. அஜய் ஒரு உதவி இயக்குநர் போல தான் இருந்தார். அவர் திறமை பார்த்து ஆச்சரியாமாக இருந்தது. விஜய் ஆண்டனி சார் பாடலில் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம். ஆனால் இந்தப்படத்தில் நானும் இருப்பது பெருமை. தமிழில் எப்போது நடித்தாலும் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள்”என்றார்.

நடிகை தனுஷா  பேசியபோது, “முதலில், இவ்வளவு பெரிய படத்தில் என்னை நம்பி, எனக்கு வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நாயகியாக இது எனது முதல் திரைப்படம். அதுவும் இவ்வளவு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம். நான் உண்மையிலேயே மிகுந்த அதிர்ஷ்டசாலி. இயக்குநர் கணேஷ் சந்திரா சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு கலைஞருக்கு மிகவும் முக்கியமானது, சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் நடிக்க முடிவதுதான். அந்த நிம்மதியை முழுமையாக எனக்கு அளித்தவர் கணேஷ் சந்திரா சாரும், இந்த முழு குழுவும் தான்.

 எத்தனை சிறிய காட்சிகளுக்காக எத்தனை முறை எடுத்தாலும், ஒரு நொடி கூட முகம் சுளிக்காமல் எப்போதும் ஊக்கம் அளித்தார்கள். அதற்காக என் மனமார்ந்த நன்றிகள். என்னுடன் நடித்த அஜய் — உங்களுக்கும் என் நன்றி. மிகவும் கனிவாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொண்டதால் இப்படத்தில் நடிக்க எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அஷ்வின், லக்ஷ்மி அம்மா — அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். இந்த திரைப்படத்தை பிப்ரவரி 13 அன்று, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்கில் கண்டிப்பாக பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”என்றார்..

எழுத்தாளர் புதிய பரிதி   பேசியபோது, ”  ,இந்தப்  படம் ஒரு சாதாரண முயற்சி அல்ல. கணேஷ் சந்திராவிடம் நான் கதையை ஒரு படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட கொடுக்கவில்லை. “படிக்க ஒரு ஸ்கிரிப்ட் கொடுங்கள்” என்றார். அதைப் படித்த இரண்டே நாளில் படம் உறுதியானது — அது எனக்கு ஒரு மேஜிக் மாதிரி இருந்தது. இந்த படத்தில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பலம் — கணேஷ் சந்திரா சாரும் , தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாரும் தான். இருவரும் கதையை அப்படியே நம்பி, அதற்கு உண்மையாக நின்றார்கள். “ஸ்கிரிப்ட் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுதியாக நின்றார்கள். 

ஒரு முதல் பட எழுத்தாளருக்கு இப்படி ஒரு வாய்ப்பு  கிடைப்பது அரிது. நான் எழுதும்போதே இந்த படம் என் மனதில் இசையோடு, எடிட்டிங்கோடு ஓடிக்கொண்டிருந்தது. அந்த உணர்வை இசை மூலமாகவும், எடிட்டிங் மூலமாகவும் அப்படியே திரையில் கொண்டு வந்ததற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இந்த படத்தில் இசை என்பது பின்னணி மட்டும் அல்ல, பல காட்சிகளுக்கே மாற்றாக இசை பேசுகிறது. அது இந்த படத்தின் மிகப் பெரிய பலம். இயக்கக் குழு, உடை வடிவமைப்பாளர் மாளவிகா, நடன இயக்குநர், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் ஒரு குழுவாக அல்ல — ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள். 

உண்மையிலேயே இந்த படம் எனக்கு ஒரு வேலை போலவே தோன்றவில்லை. ஒரு குடும்பத்தோடு இருந்து செய்த அனுபவமாகத்தான் இருந்தது. “என்றார்.

இயக்குநர் சசி  பேசியபோது, “. இந்த படத்துல இருக்கிற பாடல் காட்சிகளையும், சீன்ஸையும் நீங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க. உங்கள் எல்லாருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பை விட  இரண்டு  மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. அதுக்குக் காரணம் கணேஷ்சந்திரா. அவர் ஒரு சினிமாட்டோகிராபர் மட்டுமல்ல, ஒரு இயக்குநரும் கூட.  நான் விஜய் ஆண்டனி, அஜய் வைத்து கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன். அந்த படத்துல எல்லாருமே ஃபுல்லா டேன் லுக். விஜய் ஆண்டனிக்கு ஒரு விவசாயி கேரக்டர். ஆனா இங்க இந்த படத்துல பார்த்தா… எல்லாமே கலர் கலரா, ஃப்ரெஷ்ஷா இருக்கிறது. அதை பார்த்ததும் ரொம்ப பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. 

அஜய் என் படத்திலேயும், இந்த படத்திலேயும் இரண்டு வெவ்வேறு மாதிரியான கேர்கடர்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார். உண்மையிலேயே நல்ல திறமைசாலி.  இப்படத்தில் ரொம்ப சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கணேஷ்சந்திரா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் எடுக்குற கதை, சொல்லுற விதம் எப்போதுமே ஒரு உணர்வோட இருக்கும். அதோட விஜய் ஆண்ட்னியின் பாடல்கள்… சோகமான இடத்துல வர வேண்டிய சாங்ஸ்கூட ஒரு தனி வைபோட, அவருடைய ஸ்டைல்ல ரொம்ப அழகா போட்டிருக்கார். இந்த பிப்ரவரி 13, ஒரு நல்ல கதையோட, ஒரு நல்ல படம் திரைக்கு வரப்போறதுன்னு நம்பிக்கையோட முடிக்கிறேன். “என்றார்.

நடிகர் அஷ்வின் ராம்  பேசியபோது, “நான் தியேட்டர் குரூப்பில் ஏழு வருடமாக இருந்தேன், பூக்கி பட வாய்ப்பு தந்த என் இயக்குநர் கணேஷ் சந்திரா சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இயக்குநர் ரொம்பவே கூல், அவர் ஒரே நேரத்தில் கேமரா, டைரக்ஷன் இரண்டையும் செய்துள்ளார். இந்த டீம் ரொம்பவே இனிமையாக இருந்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். விஜய் ஆண்டனி சார் பாடல்களுக்கு தீவிர ரசிகன், அவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது பெரிய மகிழ்ச்சி.”என்றார்.

காஸ்ட்யூம் டிசைனர் மாளவிகா  பேசியபோது, “இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக முதலில் விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. “பூக்கி” எனக்கு ரொம்பவே சிறப்பு வாய்ந்த படம். என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம். இந்த டீம்ல வேலை பண்ணும்போது மனசு ரொம்ப சந்தோசமாக இருந்தது. முழு இயக்குநர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் உண்மையிலேயே அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்தப் படம் எல்லாருக்கும், குறிப்பா காதல் ஜோடிக்கு, ரொம்ப நெருக்கமான படமாக இருக்கும். பிப்ரவரி 13, கண்டிப்பா திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள்.”என்றார்.

கலை இயக்குநர் பிரகதீஸ்வரன்  பேசியபோது, “இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் கணேஷ் சந்திராவுக்கும், விஜய் ஆண்டனி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. கணேஷ் இந்த படத்தை பற்றி முதலில் எனக்கு சொல்லும்போது, “இது ஃபேன்டஸியா பண்ணணும், இதுவரைக்கும் பண்ணியதிலிருந்து கொஞ்சம் வேற மாதிரி இருக்கணும், பார்த்து பண்ணுங்கன்னு சொன்னார். அப்போலிருந்தே அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தார். “இது இப்படிதான் வரணும், இது இதே மாதிரி தான் இருக்கணும்”ன்னு ஒவ்வொன்றையும் டிஸ்கஸ் பண்ணி, அதுக்கப்புறம் ஒவ்வொரு விஷயமாவே பிரிச்சு வேலை பண்ணினோம். அந்த உழைப்பு எல்லாம் சேர்ந்து, நல்லா வந்திருக்கு. இந்த படமும் நல்லா வந்திருக்கு.”என்றார். 

பாடலாசிரியர் லாவர்தன் பேசியபோது, “பூக்கி” படத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் பாடலை எழுதினது எனக்கு ரொம்பவே சந்தோசம். விஜய் ஆண்டனி சார் கூட வேலை பார்க்க வேண்டும் என்பது எல்லா பாடலாசிரியர்களும் ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு நிறைவேறிச்சுன்னு நான் தைரியமா சொல்ல முடியும். ஏன்னா, நான் 12th படிக்கிற டைம்ல “வேட்டைக்காரன்” படம் ரிலீஸ் ஆனது. அப்போ சார் பாட்டை கேட்டு, “புலி உருமுது” மாதிரி பாடல்களுக்கெல்லாம் நாங்க வைப் பண்ணிய நாட்கள் அது. அப்படிப்பட்ட ஒரு மியூசிக் டைரெக்டரை ரசிச்சு வளர்ந்த நான், இன்னைக்கு அவருக்குப் பக்கத்துல உட்கார்ந்து, நான் பாடல் எழுதுற பாக்கியம் கிடைத்திருக்கிறது, நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவன் ன்னு தான் சொல்லணும். அந்த விதத்துல, விஜய் ஆண்டனி சாருக்கு  நான் மனதார நன்றியை சொல்லிக்கிறேன். இந்த படத்தோட இயக்குநருக்கும், எழுத்தாளர் புதிய பரிதி சாருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். “என்றார். 

ஸ்டண்ட் மாஸ்டர் பிரபு ஜாக்கி  பேசியபோது, “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் ஆண்டணி சாருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. கணேஷ் சந்திரா கூட நான் முன்பே மூன்று படங்களில், அவர் கேமராமேன் ஆக இருந்தபோதும், அசிஸ்டெண்ட் ஆக இருந்த போதும், ஃபைட் மாஸ்டர் டீமில் வேலை செய்திருக்கேன். அந்த நம்பிக்கையில் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. இந்த படம் முழுக்கவே மிக நல்ல ஸ்டண்ட் காட்சிகள். குறிப்பா படத்துல ஒரு சேஸ் சீன் இருக்கிறது, அதுக்கப்புறம் ஒரு ஃபைட் சீனும் இருக்கிறது. கண்டிப்பாக நீங்க எல்லாரும் பார்த்து ரசிப்பீங்கன்னு நம்புறேன்.”என்றார்.

நடிகை பிரியங்கா மஸ்தானி   பேசியபோது, ”  ,என்னுடைய ஊர் சேலம், கிராமத்து பொண்ணு, என்னை மாதிரி ஒரு கிராமத்திலிருந்து வந்த தமிழ் பொண்ணுங்களுக்கு, ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துல வாய்ப்பு தர்றது மிகப்பெரிய விசயம். அதுக்காக விஜய் ஆண்டனி சாருக்கு பெரிய நன்றி.  இயக்குநர் ரொம்ப டென்ஷன் ஆகவே மாட்டார். இது என்னுடைய முதல் படம். அதனால டைரக்டர்னா ரொம்ப கோபப்படுவாங்க, டேக் சரியா போகலன்னா திட்டுவாங்கன்னு நினைச்சு நான் ரொம்ப பதட்டமாதான் இருந்தேன். ஆனா அவர் அப்படியே இல்ல. ரொம்ப கூலாக, ஜாலியாக எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணினார். “என்றார்.

குழந்தை நட்சத்திரம் ஷன்விகா ஶ்ரீ  பேசியபோது, “எல்லோருக்கும் வணக்கம் எனக்கு வயது 5 தான். இந்தப்படத்தில் நடித்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். பிப்ரவரி 13 ஆம் தேதி எல்லோரும் படம் பாருங்கள் நன்றி.”என்றார்.

நடிகர் சத்யா  பேசியபோது, “பிக்பாஸ் அங்கீகாரத்தை விட, இப்படத்தை பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். இயக்குநர் கணேஷ் சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இப்படம் மிகச்சிறப்பான அனுபவம். அஜய் கற்பூரம் மாதிரி, எந்த காட்சியையும் அட்டகாசமாக நடிப்பார்.  ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி எல்லோரும் திரையரங்கில் படம் பாருங்கள்”என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *