முக்காலத் திகிலில் ‘செண்பக கோட்டை ‘

shenbaga

லக்ஷ்மி ராம கிருஷ்ணன் இயக்கிய படங்களில் அசோசியேட் டைரக்டராக இருந்தவர் தாமரை கண்ணன்.  

இவர் மலையாளத்தில் இயக்கிய திங்கள் முதல் வெள்ளிவரை மற்றும் ஆடு புலி ஆட்டம் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாம் . 

shenbaga-2
மேற்படி ஆடு புலி ஆட்டத்தை இவர் மலையாளம் மட்டுமல்லாது  தமிழிலும் எடுக்க , அந்தப் படம் செண்பக கோட்டை என்ற பெயரில்,
 தமிழில் விரைவில் வெளியாக இருக்கிறது .
shenbaga-8 
(செண்பகக் கோட்டை அல்ல . ஏன்னா எட்டெழுத்து செண்டிமெண்ட் )
ஜெயராம் , ரம்யா கிருஷ்ணன், ஓம் புரி , சம்பத் , ஆடு களம் நரேன் ஆகியோர் நடிக்க, ஹர்ஷினி மூவீஸ் தயாரித்து உள்ளது . படத்தின் வசனம் தயாரிப்பாளர் இயக்குனர் சித்ரா லட்சமணன் . 
shenbaga-1
படம் பற்றி  சொல்லும் இயக்குனர் தாமரைக் கண்ணன் (இவரது மலையாளப்  பெயர் கண்ணன் தாமரக் குளம் ),  
 ” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு நடக்கும் ஒரு வரலாற்றுக் கதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை, இப்போது நிகழும் கதை… 
shenbaga-6
ஆகிய மூன்று கதைகளின் பின்னலே இந்தப் படம் . 
இதில் பேய் உண்டு . ஆனால் வழக்கமான பேய்ப் படம் அல்ல . வழக்கமான பேய்ப் படங்களில் பேயை கட்டுப்படுத்துவதே படம் பார்க்கும் ரசிகனின் விருப்பமாக இருக்கும் .  
shenbaga-5
இந்தப் படத்தை பார்க்கும் ரசிகன் அந்தப் பேய் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுவான் . 
நடிகர ஜெயராமை ஹீரோவாக பார்த்து இருப்பீர்கள் . வில்லன் என்ற வார்த்தையை விடவும் கொடுமையான ஒரு கேராக்டரில் இந்தப் படத்தில் பார்ப்பீர்கள் . 
shenbaga-7
தேசிய விருதுகள் பல பெற்ற நடிகர் ஓம் பூரி இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் பிரம்மாதமாக நடித்துள்ளார் . 
ரம்யா கிருஷ்ணன், சம்பத் இருவரும் தங்கள் கதா பாத்திரங்களில் கலக்கி இருக்கிறார்கள் . 
shenbaga-4
இப்படி பெரிய நடிகர் பட்டாளம் இருந்தாலும் படத்தின் ஜீவனாக வரும் இரண்டு சிறுமிகளின் கதாபாத்திரத்தில் பேபி அக்ஷரா கிஷோரும் பேபி அஞ்சலீனாவும் அசத்தி இருக்கிறார்கள். 
படம் எல்லோரையும் கவரும் ” என்கிறார் . 
shenbaga-3
படத்தை பற்றி சித்ரா லட்சுமணன் , ” படத்தில் சென்டிமென்ட்டுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் எல்லோரையும் கவரும்” என்கிறார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *