உறுதி கொள் @ விமர்சனம்

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க,  கோலி சோடா  கிஷோர்,   மேக்னா , காளி வெங்கட்,

தென்னவன், மாஸ்டர் சிவசங்கர்,  கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர்  நடிக்க,  அய்யனார் என்பவர் எழுதி  இயக்கி இருக்கும் படம்     ‘உறுதி கொள்’ 

பார்வை கொள்ளலாமா ? பேசுவோம் .

செஞ்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம் . அரசு மேல் நிலைப்  பள்ளிக் கூடம் . 

பிளஸ்  2 படிக்கும் மக்கு மாணவனுக்கும் (கிஷோர்) பத்தாவது படிக்கும் படிப்பாளி மாணவிக்கும்  (மேக்னா) காதல் .  மாணவனுக்கு ஒரு நண்பன் . 

மாணவனின் தங்கையும் மக்கு . அவளும் நன்றாக படிக்கும் ஒரு மாணவனும் விரும்புகிறார்கள் . அவனுக்கும் அண்ணனுக்கும் ஆகாது . 

மக்கு மகன் மீது அப்பாவுக்கு கோபம் . 

நன்றாக படிக்கும் மாணவியின் அப்பாவுக்கு தன் மகள் மக்கு மாணவனை விரும்புவதால் கோபம் . 

அந்த மக்கு மாணவன்  மற்றும் மற்றும்  தங்கை இருவருக்கும்  ஊர்ப்  பண்ணையாரின் ஊதாரி  மகனுக்கும் பிரச்னை . 

செஞ்சிக் கோட்டையின் தனிமையைப் பயன்படுத்தி அத்து மீறும் ஜோடிகளை மிரட்டி பணம் நகை பிடுங்குவதோடு பெண்களை சீரழிக்கும் ஒரு சமூக விரோத கும்பல் . 

ஒரு நிலையில் பள்ளி மாணவிகள் பலர்,  அப்புறம் தங்கை , பின்னர் காதலி எல்லோரும் காணமல் போகிறார்கள் . பழியும் குற்றமும் மாணவன் மீதே விழுகிறது . 

மாணவிகளுக்கு என்ன ஆச்சு ? அவன் என்ன செய்தான் ? அப்புறம் என்ன ஆச்சு? என்பதே உறுதி கொள் . 

ஒரு இடைவேளைக்குப் பிறகு கிராமத்துப் பள்ளி மாணவ மாணவியரின் காதல் சொல்லும் படம் . அந்தக் காலத்தில் டி. ராஜேந்தர், 

கல்லூரி மாணவிகளை வைத்து எடுத்தது போன்ற வகுப்பறைக் காட்சிகளை பள்ளி மாணவ மாணவியரை வைத்து எடுத்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் அய்யனார்

அந்த மாணவ மாணவியரின் பால்ய வயது நட்பு , அப்புறம் பள்ளி பிராய பழக்கம் இவற்றை சுவாரஸ்யமாக சொல்கிறார் இயக்குனர் .

அதில் பல இடங்களில் வெள்ளந்தியான  காமெடி ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது 

குறிப்பாக தேர்வு சம்மந்தமான காட்சிகளில் வரும நகைச்சுவை சிறப்பு . மிக இயல்பாக குறும்பும் உற்சாகமும் கொப்பளிக்கிறது 

அது சரி எந்த வருஷம் பத்தாவது மற்றும் பனிரெண்டாவது பொதுத் தேர்வை ஒரே நாளில் நடத்துறாங்க இயக்குனரே …?

அதுவும்  பத்தாவது மாணவியும் பனிரெண்டாவது மாணவரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து பொதுத் தேர்வு எழுதறாங்க ? ம்ம்ம்ம்ம்ம்..??

பால்ய வயது அண்ணன் தங்கை பாச காட்சிகளும் அதை கடைசியில் சரியாகப் பொருத்தும் விதமும் சிறப்பு . 

செஞ்சிக் கோட்டை போன்ற இடங்களில் பாலியல் ரீதியாக அத்து மீறுவோருக்கு சமூக விரோதிகளால் வரும் ஆபத்துகளை சொல்வது பாராட்டுக்குரியது . அறிமுக இசையமைப்பாளர் ஜூட் லின்னெகர் இசையில் மணி அமுதவன் எழுதிய பாடல்கள் இனிமை. நான் சிவன் என்ற பாடல் இன்னும் ஒரு படி மேல்!

நாயகனாக நடித்து இருக்கும் கிஷோரின் நடிப்பு ஒகே . 

மேக்னா மட்டுமல்லாது மாணவிகளாக நடித்து இருக்கும் எல்லொருமே நன்றாக நடித்துள்ளனர் .

ஒரு சிலர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் ஒரு நிலையில் அதுவும் ரசிக்கும்படி ஆகிவிடுகிறது . 

எங்கே துவங்கி எங்கோ பயணித்து எப்படியோ முடிகிறது திரைக்கதை . இது எதை சொல்ல வந்த படம் என்பதில் ஒரு தெளிவும் அதற்கேற்ற கதைப் போக்கும் இல்லை .

விளைவு ? தறிகெட்டு ஓடுகிறது படம் . இதுதான் படத்தின் பெரிய பலவீனம் . கிளைமாக்ஸ் ஓவர் டோஸ் . 

உறுதி கொள் ….  இன்னும் பிடிமானம்  இருந்திருக்க வேண்டும்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *