வான் மூன்று @ விமர்சனம்

சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் வினோத் குமார் சென்னியப்பன் தயாரிக்க, ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் நடிப்பில் ஏ எம் ஆர் முருகேஷ் இயக்கி,  ஆஹா ஓ டி டி தளத்தில் காணக் கிடைக்கும் படம்.

காதலித்த நபர்  வசதி காரணமாக தன்னைப் புறக்கணித்து வேறு நபரை மணந்து கொண்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற ஓர் ஆணும் (ஆதித்யா பாஸ்கர்) ஒரு பெண்ணும் ( அம்மு அபிராமி) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உரிர் பிழைக்கும் நிலையில் அங்கே அவனுக்கு அவள் மேல் காதல் வருகிறது 

பிராமணப் பெண்ணை ( அபிராமி வெங்கடாச்சலம்) காதலித்து பிராமண மாமனாரின் எதிர்ப்பை மீறி மணந்து சந்தோஷமாக வாழும் ஒரு கிறித்தவ இளைஞன் (வினோத் கிஷன்) வாழ்வில் பேரிடியாக, அவளுக்கு மூளை செயலிழப்பு நோய் வருகிறது . . கோபத்தில் புறக்கணித்து விட்ட தனது பிராமண அப்பாவைப் பார்க்க வேண்டும் என்கிறாள் அவர் . 

கல்யாணம் செய்து நாற்பது வருடம் வாழ்ந்த அந்த தம்பதியில் ( டெல்லி கணேஷ் – லீலா சாம்சன்), மனைவிக்கு புற்று நோய் வர, வசதியாக இருக்கும மகன் காப்பாற்ற மறுக்க, ஏழு லட்சம் பணம் இருந்தால் போதும் என்ற நிலையில் பணத்துக்கு அலைகிறார் கணவர் . 

இவர்களுக்கு என்ன நடந்தது என்பதே இந்த வான் மூன்று 

நெஞ்சில் ஓர் ஆலயம், நீர்க்குமிழி பாணியில் மருத்துவமனை அதைச் சுற்றிய சூழலில் வந்திருக்கும் படைப்பு 

நிதானமான அழுத்தமான பக்குவமான காட்சிகள் நிறைந்து இருக்கிற படம். 
சிறப்பான திரைக்கதை . 

ஒவ்வொரு வானின் முடிவும் மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ தருகின்றன . 

கிளைமாக்ஸ் கடற்கரைக் காட்சியும் வசனமும்  காவியம் . 

நடிப்பில் டெல்லி கணேஷ் அசத்தி இருக்கிறார். லீலா தாம்சனும் ஈடு கொடுக்கிறார். 

அம்மு அபிராமியின் பெஸ்ட் இதுவரை இதுதான் . அருமை . 

மற்றவர்களும் குறை சொல்ல முடியாத பங்களிப்பைக் கொடுத்துள்ளனர் 

சார்லஸ் தாமஸ் ஒளிப்பதிவு உணர்வுகளுக்கு பலம் சேர்க்கிறது  ஆர் 2 புரோஸ் இசை, அஜய் மனோஜ் படத்தொகுப்பு இவையும் நேர்த்தி 

மூளை செயலிழப்பு பெண்ணுக்கு குழந்தை பிறப்பது  சினிமா 

இன்னும் நல்ல வசனங்கள் ஆங்காங்கே காமெடி இன்னும் சிறப்பான காட்சிகள் இருந்திருந்தால் படம் மேலும் அசத்தி இருக்கும் . எனினும்  இப்போதும் குறையில்லை. 

வான் மூன்று … பளிச் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *