வல்லதேசம் @ விமர்சனம்

லக்ஷனா பிக்சர்ஸ் சார்பில் கே. ரவீந்திரனும், பவர் டூல்ஸ் மீடியா சார்பில் இம்மானுவேலும் தயாரிக்க 

அனுஹாசன், நாசர், பாலா சிங், ஜெயபாலன் நடிப்பில்  என் டி நந்தா ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் வல்லதேசம் . இது ரசிப்பதற்கு நல்ல தேசமா ? பார்க்கலாம் .
 
இந்தியாவில் பல்வேறு இடங்களில் கெமிக்கல் வெடிகுண்டுகளை வெடித்து நாட்டையே ஸ்தம்பிக்க செய்கிறது ஒரு சர்வ தேச தீவிரவாத அமைப்பு . 
 
அந்த விஷயம் நமது ராணுவத்துக்கு தெரிய வர, திட்டம் முறியடிக்கப் படுகிறது . 
 
இதனால் கோபம் கொள்ளும் தீவிரவாத அமைப்பு  ஒரு குறிப்பிட்ட  நபர் மூலம்தான்,  
ரகசியம் ராணுவத்துக்குப் போயிருக்க வேண்டும் என்று,
 
 அவரையும் அவர் மனைவி (அனுஹாசன்) மற்றும் மகளை (சிறுமி அக்ஷரா ) கொலை செய்ய முயல்கிறது . அந்தக் குடும்பம் லண்டனுக்குப் போய் தங்க , 
 
 தீவிரவாத கும்பல் அங்கே போய் அந்த நபரை  சுட்டுக் கொல்கிறது .அவர் மனைவியையும் சுடுகிறது . குழந்தை தப்பிக்கிறாள் . 
 
ஆனால் உண்மையில் சர்வதேச வெடிகுண்டுக் கும்பலின் திட்டத்தை ராணுவத்திடம் உளவு சொன்னது கொல்லப்பட்ட நபர்  அல்ல . எனில் யார் ? 
 
சுடப்பட்ட  மனைவியின் நிலை என்ன ? தப்பிய குழந்தையின் கதி என்ன ?
 
குழந்தை  தீவிரவாதக் கும்பலின் கைகளில் சிக்கியதா ? ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லை எனில் அமைந்தது என்ன  ? என்பதே வல்லதேசம் . 
 
பழகிய பழைய கதை .   நாசர் போன்ற நடிகர்கள்  வீணடிக்கப்பட்டு உள்ளனர் . பலரும் செயற்கையாக நடிக்கிறார்கள் .
கிளைமாக்சில் இது போன்ற கதைகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை நோக்கம் மிஸ்ஸிங் . 
 
அதே நேரம் உண்மையான  உளவாளி டேவிட் அல்லாத யார் என்று சொல்லும் இடம் ஓரளவு யூகிக்க முடியும் என்றாலும் சுவாரஸ்யம்தான் .
 
நாட்டுக்காக சண்டையிட்டு வெற்றியோ அல்லது உயிர்த் தியாகமோ செய்கிற கதாபாத்திரமாக ஓர் ஆண்தான் இருப்பான் .
 
அதை ஒரு பெண்ணுக்கு கொண்டு பொய் இருப்பதை பாராட்டலாம் .பொதுவாக அயல்நாடுகளில் நம் நாட்டு நடிகர்களை வைத்தோ வெளிநாட்டு நடிகர்களை வைத்தோ எடுக்கும்போது இது நம்ம ஊர்ப் படம் என்பது எப்படி தெரியும் . 
 
ஆனால் இந்தப் படத்தில் ஒரு நிஜமான ஹாலிவுட் படத்தில் நம்ம நடிகர்களை பார்த்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஒளிப்பதிவு செய்து ஷாட் வைத்திருக்கிறார் என். டி . நந்தா .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *