ஆறாம் வேற்றுமை @ விமர்சனம்

செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்க , அஜய் , கோபிகா, யோகிபாபு, உமாஸ்ரீ , அழகு , சேரன்ராஜ் நடிப்பில்,

 ஹரி கிருஷ்ணா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆறாம் வேற்றுமை .  படம் ரசனை  ஒற்றுமை தருமா ? பார்க்கலாம் . 

மலைக்கிராமமான கோட்டைக்காடு பழங்குடி மக்கள் வாழும் ஊர். அதற்கும் உயரத்தில் உள்ள கூனிக்காடு ,
 
தங்களுக்கு என்று எந்த மொழியும் இல்லாத ஆதிவாசிகள் வாழும் ஊர் . கோட்டைக்காடு  வணத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூனிக்காடு இல்லை . 
 
இந்த நிலையில் கொட்டைக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் , பேயா , மிருகமா, மிருகப் பேயா , பேய் மிருகமா என்று சொல்ல முடியாத ,
 
பெண் உடை அணிந்த ஒரு உருவத்தால் கொடூரமான அடித்துக்  கொல்லப் படுகின்றனர் .
 
அதற்குக் காரணம் பூரணி என்ற பெண்ணுக்கு  (கோபிகா) நாம்  செய்த துரோகம்தான் என்று  விசனப்படுகிறது ஊர் .
 
கொல்லப்பட்ட இருவரில் வேலன்  (சூரியகாந்த்) என்பவனின்  அக்கா மகள்  வள்ளியும் (உமாஸ்ரீ) பூரணியும் நெருங்கிய தோழிகள் .
 
வள்ளி  சித்தப் பிரம்மை பிடித்த நிலையில் இருக்கிறாள் . 
 
அந்த சரகத்தின் பாரஸ்ட் ரேஞ்சர் (சேரன் ராஜ்) கோட்டைக்காடு வந்தால் எல்லா வசதிகளும்,
 
 செய்து கொடுக்கும் வழக்கம் உள்ளவர்கள்தான் கொலை செய்யப்பட்ட இருவரும் . 
 
எனவே அவர்களின் கொலை பற்றி விசாரிக்க கோட்டைக்காடு வரும் ரேஞ்சரும் சக ஆபீசரும் கூட கொடூரமாக  கொல்லப் படுகிறார்கள் . 
 
வழக்கை விசாரிக்க அடுத்து  வரும் காவல்துறை உயர் அதிகாரி,  பூரணிக்கும் பகலில் உறங்கி இரவில் வேட்டையாடும் பழக்கம் உள்ள, 

 
அந்த ஆதிவாசி கிராமமான கூனிக்காட்டைச்  சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கும் (அஜய்) காதல் இருந்ததைக் கண்டு பிடிக்கிறார் . 
 
அந்த காதலை சக ஆதிவாசிகள் விரும்பவில்லை . 
 
இன்னொரு பக்கம் பூரணியை “தனக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டால் , ஊர் மக்கள் தாங்கள் வாங்கிய கடனுக்காக,
 
 அடகு வைத்த நிலப் பத்திரங்களை வட்டி கேட்காமல் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ” என்கிறார் ஊர்த்தலைவர் 
 
எனவே ஊரே சேர்ந்து வயதான ஊர்த் தலைவரை திருமணம் செய்து கொள்ளும்படி பூரணியை மிரட்டுகிறது . 
 
இந்த நிலையில் பூரணிக்கு என்ன ஆச்சு ? கொலைகள் செய்வது யார் அல்லது எது ? என்பதே இந்தப் படம் . 
 
அடர்ந்த காட்டில் படப்பிடிப்பு நடந்தி இருப்பதோடு அதை விட அடர்ந்த காடுகள், விதம் விதமான பிராணிகளின்,
 
 
குளோசப் காட்சிகள் எல்லாம் திரட்டி எடுத்துப் போட்டு மிரட்டுகிறார்கள் . கொலைகள் நடக்கும் காட்சிகளில் ஒலிப் பயன்பாடு சிறப்பு . 
 
ஆதிவாசிக் காதலன்  தனது பழங்குடி இனக் காதலியை சந்திக்க புதைகுழியைக் கடந்து போக வேண்டும் என்பதற்காக அவன் நண்பர்கள் புதைகுழியில் குதித்து,
 
 மூழ்கிக் கொண்டிருக்க , அவர்களின் தலையில் கால் வைத்து காதலன் புதைகுழியைக் கடக்க, அவர்கள் மூழ்கி இறக்க அவன் கதறும் காட்சி நெகிழ்வு . பாராட்டுக்கள். 
 
ஆதிவாசி தொடர்பான காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளை கடுமையாக உழைத்து உருவாக்கி உள்ளனர் . அந்த உழைப்பு போற்றுதலுக்குரியது .
 
அழகு, சேரன்  ராஜ், கோபிகா, உமாஸ்ரீ , அஜய் மற்றும் ஆதிவாசிகளாக நடித்து இருப்போரின் நடிப்பு பரவாயில்லை .
 
மற்ற கதாபாத்திரங்களுக்கு இயல்பான தோற்றம் என்ற பெயரில் நடிப்புப் பரிச்சயம் இல்லாதவர்களை போட்டு இருப்பதால் அவர்கள் நடிப்பு செயற்கையாக உள்ளது . 
 
என்னதான் ஆதிவாசி என்றாலும் எப்போதும் எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஒருவரை ஒருவர் “அ. ஹ. அ. ஹ. ஹ. அ.ஹ. அ ” என்று கத்திக் கொண்டே இருந்தால்,
 
 எப்படி ரசிகனுக்கு அவர்கள் சொல்வது புரியும் ? சைகை மொழிகளை பயன்படுத்தி சில விசயங்களை விளக்கி இருக்கலாம் 
 
பழங்குடிப் பெண் — ஆதிவாசி காதல் என்பது வித்தியாசமான அற்புதமான களம் . ஆனால் அதை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் .
 
யோகிபாபுவை வீணடித்து இருக்கிறார்கள் . காமெடி , சீரியஸ் என்று எதற்கும் அவர் பயன்படுத்தப்படவில்லை . 
 
குற்றவாளிகளை எல்லாம் கொண்டு விட்டு அப்புறம் அவர்கள் செய்த குற்றத்தை சொல்வதால்  ரசிகனுக்கு என்ன உணர்வெழுச்சி கிடைக்கும் ?
 
திரைக்கதையில்  இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *