அஞ்சுக்கு ஒண்ணு @ விமர்சனம்

anju-1

பேரன்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் சண்முகம் தயாரிக்க, , சித்தார்த், அமர், உமா , மேக்னா , சிங்கம்பபுலி முத்துக்களை ஆகியோர் நடிக்க, ஆர்வியார் என்பவர் இயக்கி இருக்கும் படம் அஞ்சுக்கு ஒண்ணு.  

எத்தனை தேறும் ? பார்க்கலாம் ,

சிறுவயது முதலே ஒன்றாக சேர்ந்து வாழும் ஐந்து அநாதை சிறுவர்கள் வளர்ந்து ( அமர், சித்தார்த், ஜெரால்டு, ராஜசேகர் , நசீர்) , கட்டிடத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் .
சோறு , மது , மாது இப்படி எது என்றாலும் ஐவரும் பங்கு போட்டுக் கொள்ளும் வாழ்க்கை . 
இந்நிலையில் புதிதாக அங்கு வேலைக்கு சேரும் — வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது (உமாஸ்ரீ) ஐவரில் ஒருவனுக்கு (சித்தார்த்) காதல் வருகிறது .
அந்தப் பெண்ணும் காதலிக்க , நண்பர்கள் வழக்கம் போல அவளையும் பங்கு கேட்கிறார்கள். 
சண்டை வந்து நட்பு வென்று காதலை ஏற்று வாழ்த்தி வாழ வைத்து,  மற்றவர்கள் அந்தப் பெண்ணை சகோதரியாக ஏற்று ஒன்றாக வசிக்கிறார்கள் .
anju-4
ஐவரும் வேலை பார்க்கும்  ஒரு பெரிய கட்டிடக் கம்பெனியின் முதலாளி மகள் (மேக்னா ) , அந்த ஐவரில் இன்னொருவனை ( அமர்) காதலிக்கிறாள் . 
ஒரு நிலையில் அவள்  டூர் போய்விட , பெரும் மழை பல நாட்கள் நீடிக்க, அறுவருக்கும்  வேலை இல்லாமல் போய் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட,
உணவு தேடும் முயற்சியில் ஒரு நண்பன் மின்சாரத்தில் அடிபட்டு செத்துப் போகிறான் . 
தன் பெண் ,ஒரு கட்டிடக் கூலித் தொழிலாளியை காதலிப்பதை அறிந்த கட்டுமாணக் கம்பெனி முதலாளி,  மகளது காதலை எதிர்க்க ….. அது இந்த நண்பர்களை எப்படி பாதித்தது என்பதே அஞ்சுக்கு ஒண்ணு . 
அனாதை நண்பர்கள்,  ஜாலி வாழ்க்கை, அந்த வாழ்க்கையில்  காதல், அதனால் வரும் சண்டை சச்சாரவு,  சமாதானம் , 
அப்புறம் வரும் பிரச்னைகள் என்ற பழகிய  கதையில் கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலை என்ற விஷயத்தைக் குழைத்து கலவை போட்டு அடித்துப் பூசிய வகையில் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் .
anju-3
குறிப்பாக கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்க்கை முறை , அங்கே வேலை செய்யும் பெண்களின் பிரச்னைகள் , அப்படி நகருக்கு வந்து வேலைக்கு சேரும் பெண்களின் பின்னால் உள்ள,  
கிராமத்து — வாழ்ந்து கெட்ட வாழ்க்கை,  சோகங்கள் என்று  பல பாராட்டத்தக்க அம்சங்கள் படத்தில் உண்டு . 
நடிகர்களில் நண்பர்களாக வரும் ஐவரின் நடிப்பும் உமஸ்ரீயின் நடிப்பும் ஒகே 
கட்டிடத் தொழிலாளிகளின்  வாழ்க்கையை சொல்ல வந்தவர் அதற்கு அமைத்த துணைக் கதைகளில்தான் , பொருந்தாமை என்னும்  மணலைக் கூட்டி   யதார்த்தம் என்ற சிமண்டைக் குறைத்து,
 பலகீனமான சுவர் கட்டுகிறார் இயக்குனர் . 
அந்த ஐவரையுமே மலை போல நம்பி இருப்பதோடு கல்யாணமும் செய்து வைக்கும் முதலாளி இருந்தும் , அந்த முதலாளியின் மகளே ஐவரில் ஒருவனை காதலித்தும் ,
மழைக்காலத்தின் நண்பர்கள் சோற்றுக்கு அலைந்தார்கள் என்பது ( என்னதான் முதலாளியின் மகள் டூ……ருக்குப் போய் இருந்தாலும்கூட ),  சாம்பல் கலந்த சிமெண்டில் தளம் போடுவது போன்ற அநியாயம் . 
anju-2
அதே போல இந்த ஐவரால்தான் முதலாளியின் கட்டிடத் தொழிலே ஓகோ என்று இருப்பதாகவும்,  அவர்களை தன் கம்பெனிக்கு இழுக்க ,
இன்னொரு கட்டுமான நிறுவன முதலாளி இந்த ஐவருக்கும் மது மாது விருந்து வைப்பதும் , வேகாத செங்கல் போன்ற காட்சிகள் . 
இரண்டு முதலாளிகளின் நடிப்பும் , மேகனாவின் நடிப்பும் கூட படு செயற்கை . சிங்கம் புலி  காமெடி எல்லாம்…. ம்ஹும் ! 
கிளைமாக்ஸ் என்று எதுவும் இல்லாமல் அது பாட்டுக்கு முடியுது படம் . 
கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சொன்னது பாராட்டுக்குரிய விஷயம் . ஆனால்  அதை யதார்த்தமாகக் காட்சிப் படுத்தத் தெரிந்தவர்கள்.
திரைக்கைதையில் கோட்டை விட்டதால் , உசரமாக எழுந்தும் மண்ணுக்குள் புதைந்த மவுலிவாக்கம்  கட்டிடம் ஆகி விட்டது படம் . 
அஞ்சுக்கு  ஒண்ணு …. அஞ்சுக்கு 1/3

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *