சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, சூர்யா, சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா, வினய், நடிப்பில் பாண்டியராஜன் இயக்கி இருக்கும் படம் .
வடநாடு, தென்னாடு என்று தென்மாவட்ட கிராமங்கள் இரண்டு . தென்னாட்டுப் பெண்கள் பலர் வடநாட்டில் வாக்கப்பட்டு இருக்கின்றனர். . வடநாட்டில் அரசியல் செல்வாக்கு கொண்ட ஒருவன் (வினய்) தென்னாடு பெண்களை மயக்கி பாலியல் அனுபவிப்பு செய்து வீடியோ எடுத்து இணையத்தில் ஏற்றும் குணம் உள்ளவன் .
பெண்கள் நலன் மீது அக்கறை கொண்ட தென்னாடு வக்கீல் ஒருவர்க்கும் (சூர்யா) அவனுக்கும் ஏற்படும் பகை , அதன் விளைவு இவற்றை சொல்லி, பெண்களை ஆபாசப்படம் எடுக்கும் நபர்கள் மீது சாட்டையை சுழற்றி இருக்கிறார் பாண்டிராஜ் .
சூரியா துள்ளலாக துடிப்பாக நடிக்கிறார் . பிரியங்கா மோகன் டாக்டர் படத்தில் வந்த அதே பாணியிலான கதாபாத்திரம் .
நாயகனின் அப்பாவாக சத்யராஜ், அம்மாவாக சரண்யா, வில்லனாக வினய், நாயகியின் அப்பாவாக இளவரசு , அம்மாவாக தேவ தர்ஷினி , குடும்ப நண்பராக வரும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துக் குவிக்கிறார்கள்.
ஆங்காங்கே காமெடி கலகல. சில சிறப்பான வசனங்கள்.
ரத்னவேலு ஒளிப்பதிவு சிறப்பு, இமான் இசை ஒகே.
ராம் லக்ஷ்மன் மற்றும் அன்பறிவ் ஆகியோரின் சண்டைக் காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன. சண்டைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். பாராட்டுதல்கள் . கைதட்டல்கள் .
தவறான உறவில் ஈடுபடுவதுதான் அசிங்கம்.. ஒரு பெண் குளிக்கும்போதோ , உடை மாற்றும் போதோ , துரோகமில்லா உடலுறவு கொள்ளும்போதோ அது வீடியோ எடுக்கப்பட்டால் அது அந்த பெண்ணுக்கு அசிங்கம் இல்லை. எடுத்த நாய்களுக்குத்தான் அசிங்கம். அதற்காக பெண் உடைந்து போகக் கூடாது என்பதை சொல்ல வந்திருக்கிறார் பாண்டிராஜ்.
அதை இன்னும் சிறப்பாக கம்பீரமாக சொல்லி இருக்கலாம் .