‘பிச்சைக்காரன்’ படத்தின் ஃபீலிங் தரும் ‘காளி’

 விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க , 
 
விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா , ஷில்பா மஞ்சுநாத், அமிர்தா ஐயர் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’. 
 
மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டம் , பாடல்,
 
மற்றும்  படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. 
தெறிப்பான முன்னோட்டம் !
 
இனிப்பான பாடல் ! 
 
திரையிடப்பட்ட முதல் இருபது நிமிட படம் பிச்சைக்காரன் படத்தின் ஆரம்ப நிமிடங்கள்  கொடுத்த உணர்வைத் தந்தது .  
 
தொடர்ந்து படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர். 
“விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர்,
 
அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ்” என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.
 
“ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு, 
உருவாக்கி இருக்கும் படம்தான் இந்த காளி, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும்” என்றார் ரிச்சர்ட் எம் நாதன்.
 
“தமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருபபார் என்று தான் நினைத்தேன்.
 
ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்”  என்றார் நாயகி ஷில்பா மஞ்சுநாத்.
படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ்,
 
” ஒரு வினியோகஸ்தராக,  தயாரிப்பாளராக நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும், 
 
லாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.
 
கிருத்திகா அவர்களைப் பார்த்து பிரமித்தேன். கதைக்கு  என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா.
 
படத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். காளி என்றாலே ரொம்ப பவர்ஃபுல்லான தலைப்பு” என்றார் 
 
சுனைனா தனது பேச்சில்,
“ஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்னுடைய வம்சம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன்.
 
அதை ஒப்பிடும் போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாகத்தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்புதான்.
 
இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன்.
 
இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார் என்றார்.
இயக்குனர் கிருத்திகா உதயநிதி தனது பேச்சில், “பெண்கள் தினத்தில்தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள்.
 
ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார்.
 
முதலில் நான் சொன்ன கதை அவருக்கு சரியாகப் படவில்லை . இரண்டாவதாக ஒரு கதை சொல்ல நேரம் கேட்டேன் .
அப்போதும் என் வீட்டுக்கே வந்து கேட்டார் . கதையை ஒகே செய்தார் . 
 
அப்போ நான் , ‘பொதுவா எல்லாரும் வீட்டுக்கு வர வச்சுதான் கதை கேட்பாங்க . நீங்க ஏன் சார் வந்து கேட்கறீங்க?’ ன்னு கேட்டேன்.
 
அதுக்கு அவர் கதை புடிக்கலன்னா நம்ம வீட்டுக்கு வந்து கதை சொல்லும்போது, புடிக்கலன்னு சொல்ல நமக்கு கஷ்டமா இருக்கும் .
 
அவங்களும் ரொம்ப கஷ்டப்படுவாங்க . அவங்க வீட்டுலன்னா ஈசியா புடிக்கலன்னு சொல்லிட்டு வந்துடலாம் ” என்றார் . அவ்வளவு கண்ணியம் ! எனக்கும் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப்பெரிய பலம்.
 
உயிரைப் பணயம் வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம்.
 
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். 4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன்.
 
பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை.
 
திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்” என்றார் 
 
நாயகன் விஜய் ஆண்டனி., தனது  பேச்சில், “கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர். 
 
எனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் என் வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை.
 
அந்தக் கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம். ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர்தான்.
 
எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். கலை இயக்குனர் சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி ரெண்டு பேருமே என் குடும்பத்தில் ஒருவராகத்தான்  இருக்கிறார்கள்.
நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
 
எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார்.
 
திமிர் பிடிச்சவன் படத்தை அடுத்து கொலைகாரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள்” என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.
 

சந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழணங்கு ஆகியோரும் கலந்து கொண்டு,  பேசினர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *