ஆன்டனி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சண்டக்கோழி புகழ் “லால் ” ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா , சம்பத் ராம் ,’வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடிப்பில் ,
குட்டி குமார் என்பவர் இயக்கியுள்ள படம் ‘ஆண்டனி’ .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ஷிவாத்மிக்கா இசை அமைத்துள்ளார்
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் .
விழாவில் பேசிய S .A சந்திரசேகர்
” இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது.
எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்
ஜெயசித்ரா பேசும்போது
” படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர்.
இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் .தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என்றார்
‘ வெப்பம்’ ராஜா தன் பேச்சில் ” படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர் .
இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார்.19 வயது உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பண்ணிருக்கார்.,PC ஸ்ரீ ராம் போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை .
படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம்.கண்டிப்பா அவர் மிக பெரிய நடிகராக வருவார்.
ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால்தான் ஆண்டனி படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை நடிக்க முடியும்.மிக சிறப்பாக செய்து உள்ளார் ” என்றார்
நடிகை ரேகா ” மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள்.படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும்.ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை ‘ என்றார்
இசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா ” படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி.இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுக கலைஞர்களாகப் பணியாற்றி உள்ளோம்.
வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்றார்
இயக்குனர் குட்டி குமார் பேசும்போது ” இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி.
இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம்.ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்.
இரண்டு வித்தியாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.பூமிக்கு மேல்,மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்க பட்டு உள்ளது.
உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த்.மேலும்படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.ரொம்ப நாளாவே மியூசிக் பண்ணிருக்காங்க’ என்றார்