கரையோரம் @ விமர்சனம்

karai 5

ஆர் ஜே கம்பைன்ஸ் சார்பில் அனந்த்  மற்றும் ராமலிங்கையா  தயாரிக்க, கன்னட இயக்குனர் ஜே கே எஸ் என்பவரின் இயக்கத்தில் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்த வசிஷ்டா மற்றும் சுனில்  ஷெட்டி .. இவர்களோடு சிம்ரன்,  நிகிஷா பட்டீல்,  இனியா ஆகியோர் நடித்திருக்கும் படம் கரையோரம். 

கரையேறுமா? பார்க்கலாம் 

இளம்பெண் ஒருவர் (நிகிஷா பட்டேல்)  மங்களூரில் உள்ள ஒரு கடலோர கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார் .  
 பணக்கார அப்பா (ராதாரவி) , ஒரு தங்கை இருவருடனும் வாழ்ந்த அவர் , தங்கையின் காதலனை அவளோடு சேர்த்து வைத்து அதனால் அப்பாவின் கோபத்துக்கு ஆளானவள் . ஒரு நிலையில் தந்தையும் இறந்து தங்கை , தங்கையின் மகள் ஆகியோரும் அநியாயமாக இறந்து போக , மனம் நொறுங்கிய நிலையில் ஒரு மன மாற்றத்துக்காக  மங்களூர் வந்து தங்குகிறாள் . தங்க வைப்பது அவளது தோழி (இனியா) .
Karaiyoram Movie Stills
அங்கே  கலங்கரை விளக்கம் ஒன்றில் தங்கி இருக்கும் ஒருவனுடன் பழகி,  காதலிக்கவும் செய்கிறாள் . ஆனால் அவன் செத்து பத்து வருஷம் ஆச்சு என்று பலரும் சொல்கின்றனர்.  ஆனால் அவனை இவள் தொடர்ந்து சந்திக்கிறான் . 
 
இப்படி ஒரு  திரில் விசயத்தை சொல்லி விட்டு , அதை சிறப்பாக அவிழ்க்க ஆயிரம் வழிகள் இருந்தும் , நட்புத் துரோகம் , சொத்துப் பத்திரம் , ஸ்லோ பாய்சன், குதிரைப் பந்தயம், அயோக்கிய காதலன் , அநாதைக் கதாபாத்திரங்கள் என்று படம் முழுக்க அரைத்த மாவை .. ம்ஹும் ! அரைத்து சுட்ட மாவை மீண்டும் ஊறவைத்து அரைத்து  ரசிகர்களை ஒரு வழி செய்கிறார்கள் . 
 
நிகிஷா பட்டேல் கிளாமராக இருக்கிறார் . முதல் ரெண்டு  நிமிடங்கள் அது சுகமாகத்தான் இருக்கிறது. ஆனால் கேரக்டருக்கு சம்மந்தம் இல்லாமல் தினவெடுத்துத் திரிவது போல அவ்வப்போது முனகுவதும் , திடீரென்று அழுவதும் , திடீரென்று ஸ்டைல் காட்டுவதும் ஒரு நிலையில் எரிச்சலூட்டுகிறது . கதை இருந்தால்தான் சதைக்கும் மரியாதை ! 
 
karai 4
ஒரு கேரக்டர் என்றால் என்ன? அது எப்போது என்ன செய்யும் ? என்ன மன நிலையில் இருக்கும் ? அதற்கேற்ப எப்படிப் பேசும் என்பது பற்றி எந்த தெளிவும் இயக்குனருக்கு இல்லாதது கொடுமை . 
 
அதுவும் போலீஸ் ஸ்டேஷன் காமெடி என்று ஒரு கூத்து அடிக்கிறார்கள் பாருங்கள் . எதையும் தாங்கும் இதயத்தால் கூட இதைத் தாங்க முடியாது . அது மட்டுமல்ல…ஒரு சின்ன கேப் கொடுத்தால் கூட கடற்கரைக்குப் போய் காரணமே இல்லாமல் குதித்து குதித்து ஆட ஆரம்பித்து விடுகிறார்கள் . 
 
சிம்ரன் வருகிறார் . ஸ்டைல் எல்லாம் செய்கிறார் . ஆனால் விஷயம்  இல்லியே .  ஓம குச்சி நரசிம்மனுக்கு போர்க் கவசம் போட்ட மாதிரி இருக்கிறது சிம்ரனின் காட்சிகள்.
 
நடந்த விசயங்களை எல்லாம் ஒரு முக்கியக் கேரக்டர் விலாவாரியாக படத்தின் கிளைமாக்சில் பேசி சஸ்பென்சை விளக்குவது என்பது கருப்பு வெள்ளைக் காலத்திலேயே தமிழ் சினிமா மென்று துப்பிய விஷயம் . அதே நேரம்  வல்லவனுக்கு வல்லவன் படத்தில் கூட இவ்வளவு வசனம் இல்லப்பா . பேசிக் கொண்டே இருக்கிறார் சிம்ரன். . 
 
karai 3
எழுத்தாளர்  தமிழ்வாணனின்  மறைந்த நகரம் நாவலை சுட்டு விட்டார்களோ என்று ஒரு நிலையில் நாம் யோசித்தால் .. ம்ஹும் ! ஸ்கிரிப்ட் பற்றி எல்லாம் இவங்க அவ்வளவு சீரியஸா எல்லாம் எடுத்துக்கவே இல்ல. 
படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர்கள் எல்லாரும் கன்னடர்கள் . அது பரவாயில்லை . ஆனால் அவர்களில் பலர் தமிழ் பேசுகிறேன் என்ற பெயரில் கன்னட வாசனையோடு பேசுவது ஒரு ரணகளம்
 
”அவன் கூட படுத்துட்டேன்னு கூட பொண்ணுங்க சொல்வாங்க” என்ற வசனத்தைப் பேசும் ஒரு காட்சியில் இனியா ஒரு சைகை செய்கிறார் பாருங்கள் . பீப் சாங் எல்லாம் பிச்சை வாங்கணும். 
 
அநேகமாக தமிழ் சினிமா ரசிகர்களைப் பற்றி  யாரோ இவர்களுக்கு ரொம்பக் கேவலமாக சொல்லி இருக்கிறர்கள் . 
அப்படியானால் படத்தில் பாராட்டக் கூடிய அம்சமே இல்லியா? இருக்கிறது 
அதுதான் ஜெய் ஆனந்த்தின் ஒளிப்பதிவு .  

karai 2

இதுவரை இந்திய அளவில் எந்த படத்துக்கும் பயன்படுத்தப்படாத சோனி 65 8 கே என்ற ஒரு கேமராவை இந்தப் படத்தில் முதன் முதலில் பயன்படுத்தி,  அருமையான ஷாட்களில் சிறப்பான கிரேடிங்கில்  கண்ணுக்குக் குளிர்ச்சியாக மயக்கவும் ஏரியல் மற்றும் ஹெலிகேம் ஷாட்களில் அசத்தவும் செய்து இருக்கிறார் இவர் . 

ஒன்று செய்யலாம் .. இந்தப் படத்தை ஒரு ஷோ ரீல் போலப் பயன்படுத்தி நல்ல கதையுள்ள படங்களுக்கு ஒளிப்பதிவு  செய்யும் வாய்ப்பை ஒளிப்பதிவாளர்  பெறலாம் . நிகிஷா பட்டேலுக்கு இந்தப் படம் ஒரு மூவி போட்டோ ஆல்பம் மாதிரி . இதை காட்டி அவரும் நல்ல படங்களுக்கு முயலலாம். 

மொத்தத்தில் கரையோரம் …. பெரும் சேதம் 

 

மகுடம் சூடும் கலைஞர் 

—————————————

ஜெய் ஆனந்த் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →