தொழில் நுட்ப வசதியின் ஆபத்து சொல்லும் ‘கீ’

நாடோடிகள் , ஈட்டி  ,மிருதன் , போன்ற வெற்றிப்  படங்களைத்  தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள  பத்தாவது படம்  “கீ’

கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா  , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார்  காலீஸ் .இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பு நகூரான் .

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

நிகழ்வில் திரையிடப்பட்ட பாடல் காதுக்கு இனிமை . கண்ணுக்கும் குளுமை .மனிதனின் வசதிக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் எப்படி ஒரு நிலையில் மனிதனுக்கே ஆபத்தாகிறது என்பதை சொல்ல வரும் படம் இது என்பது முன்னோட்டத்தில் புரிந்தது  .

வில்லனாக நடிக்கும் கோவிந்த் பத்ம சூர்யா பேசுகையில், “தமிழ் படத்தில் முதன் முதலாக  நடித்துள்ளேன். வில்லனாக நடித்து உள்ளேன். வாய்ப்பளித்த இயக்குனர் காலீஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது, ” வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என  எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லனாக  மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார். கதையைக் கொண்டது இத்திரைப்படம்.தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது.சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிப்பதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள் .சிறப்பான பணியைச் செய்துள்ளார்.

காலீஸ் சிறந்த இயக்குனர் .இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும்.

இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி ,அணைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள்  மிக பிரமாண்டமாக வந்துள்ளது.படத்தொகுப்பாளர் நாகூரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .  படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது .உங்கள் அன்பாலும் ஆதரவாலும்  படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்றார் 

நிக்கி கல்ராணி தனது பேச்சில், “மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படம் வருகிறது  என்றே சொல்லலாம்.  தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்கும் காலீஸ்  அவர்களுக்கும் நன்றிகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 4 ,5 வருடங்களாக  இந்த படத்தை ஒரு குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளனர்.. ஏப்ரல் 12ம் தேதி படம் வெளியாகிறது இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என முழுமையாக நம்புகிறேன்.

காலீஸ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர். ஜீவாவுடன் நான் முதலில் நடித்த படம் இது .ஆனால் கலகலப்பு 2  படம் முதலில் ரிலீஸ் ஆனது. இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கேமராமேன் அபிநந்தன் ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது.. ” என்றார் .

இயக்குனர் காலிஸ் பேசும்போது, ” செல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு 4 வயது குழந்தை ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அந்த குழந்தை இந்த  படம் பார்க்க வேண்டும். ஒரு 70 வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால்  நடக்கும் விளைவுகள்  என்ன ?என்பதை எடுத்து கூறும் படம் . இந்த படம் வெளிவர கடைசிவரை உறுதுணையாக இருந்த நடிகர் ஜீவா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நிக்கி கல்ராணி ஒரு சின்சியரான நடிகை. அருமையாக நடித்துள்ளார்.படப்பிடிப்புக்கு விரைவாகவே வந்து விடுவார். அபி நந்தனின் ஒளிப்பதிவு , நகூரனின் படத்தொகுப்பு என அனைவரும் அருமையாக வேலை செய்துள்ளனர்.. வில்லனாக நடித்துள்ள பத்ம சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 12 ஆம் தேதி படம் வெளிவருகிறது. உங்கள் ஆதரவு வேண்டும்  ” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *