ராயல் ஃ பார்ச்சுனா கிரியேசன்ஸ் தயாரிப்பில், முத்து, சரண்யா ரவிச்சந்திரன், முருகன் ஆறுமுகம் , ஜீவா சுப்பிரமணியம் நடிப்பில் கணேஷ் குமார் படத் தொகுப்பு மற்றும் எழுத்தில், நாஞ்சில் தினகர் இசையில் சத்யபதி இயக்கி இருக்கும் படம் லேபர் .
கட்டிடத் தொழிலாளிர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம் இது .
இளம் கட்டிடத் தொழிலாளர் தம்பதி ஒன்றில் கணவனின் குடிப்பழக்கம் மனைவியை பெரும் துன்பங்களுக்கு ஆளாக்குகிறது .
மேஸ்திரியாக இருக்கும் ஒருவர் தன் மகனையும் மகளையும் படிக்க வைத்து, மகனை என்ஜினீயர் ஆக்க கனவோடு போராடுகிறார்.
ஒரு திருநங்கை கட்டிடத் தொழிலாளி நன்றாக வேலை செய்தாலும் அவளுக்கு அவமானங்களுக்கு குறைவில்லை .
வடநாட்டு இளைஞன் ஒருவன் இங்கே சென்னைக்கு வந்து கட்டிடத் தொழ்லாளியாக வேலை பார்க்கிறான் .
எல்லோரும் சீட்டு பிடிக்கும் ஒரு ஏமாற்றுத் தம்பதியிடம் கஷடப்பட்டு உழைத்த காசை கட்டுகிறார்கள் .
எல்லோரின் வாழ்விலும் என்ன நடந்தது என்பதே இந்த லேபர் .
தொழில் நுட்ப நேர்த்தியின்மை, தேவைக்கு மேல் நீளும் ஷாட்கள் என்ற நிலையில் படம் இருந்தாலும் முடியும்போது படம் சற்றே மனம் கவர்கிறது என்றால் அதற்கு காரணம் கதையும் திரைக்கதையும்
படக் குழுவினருக்கு வாழ்த்துகள்
