ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் வழங்க, கதிரவன், அனகா, ஷரவண சுப்பையா , சுபா பாண்டியன், எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்ரமணிய சிவா, கேபிள் சங்கர் நடிப்பில் , சிட்டிசன் படப் புகழ் இயக்குனர் ஷரவண சுப்பையா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இரண்டாவது கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் மீண்டும் .
காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஓர் இணையர் (கதிரவன்- அனகா). அரசாங்கத்தின் பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் ஒன்றான அண்டர் கவர் ஆப்பரேஷன் பிரிவில் பணியாற்றும் நாயகன் , மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் பணி நிமித்தம் பிரிய, புரிதலின்மை காரணமாக கணவனை விட்டே பிரிந்து போய் விடுகிறாள் மனைவி .
பெண்ணின் பெற்றோர் பிறந்த குழந்தையை அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டு மகளுக்கு வேறு திருமணம் செய்து வைக்கின்றனர் . தனது குழந்தையை கண்டு பிடித்து வளர்க்கும் நாயகன் , தனிப்பட்ட வாழ்வில் தனது மகனுக்காகவே வாழ்கிறான்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நாயகியின் கணவன் ( ஷரவண சுப்பையா) மற்றும் அவனது அம்மா , தங்கைகள் அனைவரும் தூய இறை நம்பிக்கையும் உயர் குணங்களும் கொண்டவர்கள் .

இந்த நிலையில் சென்னையை அழித்த சுனாமியை இல்லுமிநாட்டிகள் செயற்கையாக உருவாக்கி அழிவை ஏற்படுத்திய விசயமும் , 2022இல் அதை விடவும் கொடுமையான ஒரு சுனாமியை உருவாக்க திட்டமிட்டு இருப்பதும் தெரிய வருகிறது.
மேல் விவரங்கள் சேகரிக்கவும் , அதை தடுக்கவும் இலுமினாட்டிகள் ஆளும் சிலாக்கி தீவுக்கு நாயகன் செல்கிறான். மகனை நாயகியிடமும் நாயகியின் கணவனிடமும் ஒப்படைத்து விட்டு, ‘நான் உயிரோடு மீண்டும் வராவிட்டால் இவன் உங்கள் பிள்ளை ‘ என்று கூறிக் கிளம்புகிறான்.
இதுவரை சென்ற யாரும் உயிரோடு திரும்பாத நிலையில் , சிலாக்கியில் நடந்தது என்ன? அதன் விளைவுகள் என்ன ? என்பதே மீண்டும்.

அது மட்டுமல்ல திரைகதையின் தன்மைக்கு ஏற்ற ஷாட்கள், ஃபிரேம்கள், அதிரடியான கேமரா கோணங்கள் கொண்ட சிறப்பான் படமாக்கல், அழுத்தம்ன இயக்கம் என்று அசத்தலாக படத்தை உருவாக்கி இருக்கிறார் .
ஒரு சிறப்பான இயக்குனருக்கான ஷாட் கம்போசிஷன்கள் ரசிக்க வைக்கிறது . சென்டிமென்ட், விறுவிறுப்பு என்ற பின்னலில் அருமையாக படத்தை செலுத்தி இருக்கிறார் .
பணம் இருக்கிறது என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் பெட்ரோல் வாங்கி பயன்படுத்துவேன் என்ற பணக்கார எண்ணம் எப்படி ஏழை மக்களை பாதிக்கிறது…வரிகட்டாத அயோக்கியத்தனம் .. இவற்றைப் பற்றி எல்லாம் அவர் வைத்து இருக்கும் காட்சிகளும் வசனங்களும் அற்புதம் . சுனாமி பற்றிய கதைப் பகுதி அபாரம்.
தவிர மனைவியின் முதல் கணவனுக்குப் பிறந்த குழந்தையை தனது குழந்தையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு உயர்ந்த மனிதன் கதாபாத்திரத்தில ஒரு சிறகின் வருடல் போல நடித்துள்ளார். மனைவிக்கும் முதல் கணவனின் மகனுக்கும் பிறந்த குழந்தை , அவளை அம்மாவாக ஏற்றுக் கொள்ளும் காட்சியில் அவர் பூக்கும் ஒரு மெல்லிய புன்னகை உதாரணம். அந்தக் குடும்பத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் மனிதத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதம் அலாதி.
கதிரவன், அனகா ஆகியோரிடம் வேலை வாங்கி இருக்கும் விதமும் சிறப்பு. நிர்வாணமாக சித்திரவதைக்கு ஆளாகும் காட்சிகளில் கதிரவன் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்
அனகாவை ஒரு நிம்டம் பம்பாய் மனிஷா கொய்ராலாவாக ஆக்கி புன்முறுவல் பூக்க வைக்கிறார் இயக்குனர்,
வைரமுத்து மற்றும் ஷரவண சுப்பையாவின் பாடல்களுக்கு பலம் சேர்க்கிறது நரேன் பாலகுமாரின் இசை . பின்னனின் இசை நெகிழ்வான காட்சிகளுக்கு கனமும், ஆக்ஷன் காட்சிகளுக்கு பரபரப்பும் கொடுக்கிறது.
சீனிவாச தேவாம்சத்தின் ஒளிப்பதிவு இயக்குனருக்கு பெரும் துணையாக பயணித்து இருக்கிறது .
தனிப்பட்ட வாழ்வு, தேசப் பணி என்ற இரண்டு தடங்களில் செல்லும் கதையை அழகாக் இணைத்து படத்தை வேகமாக கொண்டு போகிறது ராஜா முகமதுவின் ஒளிப்பதிவு . காட்சி மாறும் இடங்களில் பல சமயம் எடிட்டிங் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
படத்தில் நடித்து இருக்கும் இயக்குனர்கள் எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்ரமணிய சிவா, கேபிள் சங்கர் கவனம் கவர்கிறார்கள்.
லேடி ஹிட்லராக நடித்திருக்கும் சுபா பாண்டியன், அமைச்சர் அனுராதா ஆகியோரும் சிறப்பு .
படத்தில் வரும் சமூக அக்கறை விசயங்களை இன்னும் சிறப்பாக அழுத்தமாக சொல்லி இருந்தால் ஓடம் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில்
மீண்டும்……… ஷரவண சுப்பையா !
