‘மாயா’ கொடுத்தவர்களின் ‘மாநகரம்’

maana 3

மாயா படத்தைத் தயாரித்த பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன், ஸ்ரீ , சார்லி , முனீஸ் காந்த், ரெஜினா ஆகியோர் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் மாநகரம் 

 

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆள் கடத்தல் பின்னணியில் சென்னையின் இரவு குற்றங்களை விவரிக்கும் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன 

 

நான்கு கோணங்கள் மூன்று பிரச்னைகள் , இரண்டு காதல்கள் சொல்லும் ஒரு படம் இது என்று ஒரு வாசகம் முன்னோட்டத்தில் வருகிறது . ஜாவீத் ரியாஸ் இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தன 

 

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் லலிதானந்த பேசியபோது  நான் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜாவீத் ஆகியோர் குறும்படங்களில் இருந்து வந்துள்ளோம். நான் ஜாவீதின் இசைக்கு மிகப்பெரிய ரசிகன். 

 

ஜாவீத் இசையில் எந்தளவுக்கு புதுமையான இசை சப்தங்கள் இருக்கிறதோ அதே அளவுக்கு பழமையான ஒரு இசை கோர்ப்பும் இருக்கும். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமாகும்.” என்றார் 

 

படத்தொகுப்பாளர் பிலோமின் தனது பேச்சில் ” படத்தின் கதைக்களமே புதுமையான ஒன்றாகும். நானும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் குறும்படத்தில் இருந்து ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.

 

படபிடிப்புக்கு செல்லும் முன்னரே நானும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கதை எவ்வாறு பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம்” என்றார் 

 

நடிகர் முனிஸ்காந்த் பேசியபோது, ” இயக்குநர் நான் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் நான் இந்த படத்தில் நடித்தேன்.

maana 2

இப்படத்தை நான் தவிர்த்து இருந்தால் ஒரு நல்ல கதாபாத்திரத்தை இழந்திருப்பேன். நான் சார்லி சாரின் மிகப்பெரிய ரசிகன் அவருடன் இப்படத்தில் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார் 

 

நடிகர் சார்லி தனது பேச்சில் “மாநகரம் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லும் ஒரு படமாக இருக்கும். அதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கடுமையான உழைப்பும் முக்கிய காரணமாகும். 

 

படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது உங்களுக்கு இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் இல்லை , நல்லவன் கதாபாத்திரமும் இல்லை

 

ஆனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு நோபிள் ஆன  கதாபாத்திரமாக அது இருக்கும் என்றார் அதை கேட்டவுடன் எனக்கு பிடித்திருந்தது. நான் கால் டாக்சி டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். 

 

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவர்களை பற்றி நான் கூறியே ஆக வேண்டும். அவர் உசேன் போல்ட் க்றிஸ் கெய்ல் போன்றவர் , 

 

ஆம் அவர்கள் இருவரும் எவ்வளவு பெரிய சாதனைகளை செய்து இருந்தாலும் “ ஒ அப்படியா , பெரிய சாதனைய நிகழ்த்தி இருக்கிறோமா “ என்று சாந்தமாக கேட்பார்கள்.

 

அதே போல தான் இவரும் மிகபெரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு சாந்தமாக இருப்பார்” என்றார்

 

நடிகர் ஸ்ரீ பேசியபோது, “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் கதையை கேட்டு நான் வியந்துவிட்டேன். 

 

படத்தில் நான் உங்களுக்கு துணை இயக்குநராக பணிபுரிகிறேன் என்று கூறினேன். 

maana 1

அந்த அளவுக்கு எனக்கு கதை பிடித்துவிட்டது. இதற்கு முன்னர் நான் இப்படி, ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் இயக்குநர் குமாராஜா தியாகராஜாவிடம்தான்  உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளேன்.” என்றார் 

 

 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் பேச்சில் ” இப்படம் எங்கள் அனைவருக்கும் முதல் படமாகும். இப்படத்துக்கு தயாரிப்பாளர் நினைத்திருந்தால்,

 

 மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து நீங்கள் பணியாற்றுங்கள் என்று சொல்லி இருக்கலாம்.  ஆனால் நான் கூறிய அந்த குழுவோடு பணியாற்ற என்னை அனுமதித்ததுக்கு நன்றி” என்றார் 

 

விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ” இப்படத்தின் கதை ஊரில் இருந்து சென்னையை நோக்கி பிழைப்பதற்காக வந்த எங்களின் சொந்த கதையைப் போல் இருந்ததால் என்னை இக்கதை மிகவும் கவர்ந்தது.
மாயாவின் இயக்குநர் அஷ்வினை போல் இந்த இயக்குனரும்  குறும்படம் இயக்கி வந்தவர்.  படம் நன்றாக வந்துள்ளது. நிச்சயம் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தரவேண்டும்.

 

நடிகர் சந்தீப் கிஷன் பேசியபோது “இப்படத்தின் கதையை கேட்டதும் நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு இக்கதை அவ்வளவு பிடித்திருந்தது.

 

 இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எங்களை குழந்தை போல் பார்த்து கொண்டார். 

 

படபிடிப்பு தளத்தில் நாங்கள் அனைவரும் என்ன உணவு உட்கொள்கிறோமோ அதே உணவை தான் படத்தின் லைட் மேனில் இருந்து அனைவரும் சாபிட்டார்கள். 

 

அந்த அளவுக்கு அனைவரின் நலத்திலும் கவனம் செலுத்துபவர் என்றார் சந்தீப் கிஷன்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *