தண்ணீர் லாரி ஓட்டும் குமார் (பாலாஜி) . அவனது நண்பர்கள்.தங்கராசு , ஜகா (முறையே யோகி பாபு, பால சரவணன்)
ஜனனி என்ற பெண்ணுக்கும் (தீக்ஷிதா மாணிக்கம் ) குமாருக்கும் காதல் . ஜனனியின் அண்ணன் கர்ணா (முத்துக் குமார்) சாராய பார் மற்றும் கட்டப் பஞ்சாயத்து நடத்தும் ரவுடி .
கர்ணாவின் நம்பிக்கைக்குரிய சக ரவுடி மாரி (அஞ்சாதே ஸ்ரீதர்) . அரசியல்வாதி சித்தப்பா ஜாதி வெறி பிடித்தவர் .
ஒரு நிலையில் குமார் ஜனனி காதல் குடும்பத்துக்கு தெரியவருகிறது . எல்லோரும் அதை எதிர்க்க , கர்ணா குமாரை அடித்து நையப் புடைக்கிறான்.
குமார் , ஜனனியை அவர் கொல்ல முயல, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் கர்ணா , ஜனனிக்கு துணையாக மாரியை அனுப்பி வைத்து விட்டு குமாரை அழைத்து வர கர்ணா கிளம்ப,
எதிர்பாராத மழையால் கர்ணா ஒரு இடத்திலும் , குமார் ஒரு இடத்திலும் , ஜனனி- மாரி இருவரும் ஒரு இடத்திலும் சிக்கிக் கொள்ள ..
நடிகர் பசுபதி கெஸ்ட் ரோலில் வந்து ஒரு பாட்டுக்கு ஆடி விட்டுப் போகிறார் .
பாலாஜி பல வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் . ஆள் அப்படியே இருக்கிறார் (இது பாராட்டு மட்டும் அல்ல )
தீக்ஷிதா ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போகிறார் .
யோகி பாபு, பால சரவணன், நமோ நாராயணன் ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள் .
அவ்வப்போது பின்னணியில் வரும் இளையராஜா பாடல்கள் அருமை . குறிப்பாக சென்யூரீட்டா பாடல் . கேட்டே ரொம்ப நாள் ஆச்சு .
இன்னும் அழுத்தமான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை தேவைப்படுகிறது .
கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருப்பது மட்டும் முக்கியம் அல்ல . அதுவரை சொன்ன படத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் .
தண்ணீர் லாரி ஓட்டுனர் என்ற கேரக்டரை வைத்து பல்வேறு விசயங்களை சீரியசாக காமெடியாக பேச முடியும் . ஆனால் பேசவில்லை .






