நமது @ விமர்சனம்

namadhu 1
வராஹி  சலன சித்ரம் சார்பில் சாய் கொர்ரபட்டி தயாரிக்க,
மோகன்லால் , கௌதமி , ஊர்வசி , நாசர் ஆகியோர் நடிக்க , சந்திர சேகர் எலேட்டி இயக்கத்தில் 
தெலுங்கிலும் ,  தமிழிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்திருக்கும்  படத்தின் தமிழ்  வடிவமே  நமது . 
எமது என்று  ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு இருக்கிறதா படம் . 
டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் அடுத்த மேனேஜர் பதவிக்கு,  தன்னோடு  போட்டியிடும் நபரை லேசாகத்  ‘தட்டி’  இன்டர் வியூவுக்கு வர விடாமல் செய்ய,
ரவுடி ஒருவரை ஏற்பாடு செய்கிறார் ஒருவர் (மோகன்லால்) .அதற்கு   கூலியாக ஐயாயிரம் ரூபாய் தருகிறார் . 
அவருக்கு மேனேஜர் வேலையும் கிடைத்து விடுகிறது 
namadhu 5
அதே நேரம் ரவுடிக்கு  இதயத்தில் ஓட்டை என்று டாக்டர் சொல்ல, ஆபரேஷனுக்கு ஒன்றரை லட்சம் பணம் தேவைப்பட , லைட்டாக  தட்ட வேண்டிய  நபரை வெயிட்டாக தட்டிவைக்கும் அந்த ரவுடி , 
 வேலை கிடைத்த நபருக்கு போன் பண்ணி  “நீ ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தால்தான்  அவரை உயிரோடு  விடுவேன் ” என்கிறான் . பணத்தோடு போனால் ரவுடி இறந்து கிடக்கிறான் . 
 மன சாட்சி  குத்திக் கிழிக்க, பாதிக்கப்பட்டவனை கண்டு பிடிக்க போராடுகிறார் இந்த புது மேனேஜர்  
ஒரு மிடில் கிளாஸ்  குடும்பத் தலைவி (கவுதமி ) தன்னை  சுற்றி நிகழும் பணத்தாட்டத்தைப் பார்த்து மனம் நோகிறாள் .
இந்த நிலையில் அவளுக்கு  அயல் நாட்டில்  ஒரு வேலை கிடைக்க , குடும்பத்தை பிரிந்து போக அவள் வருந்துகிறாள் . 
namadhu 4
ஆனால் அவளது கணவன் , மகன் , மகள் எல்லோருமே ”பணம்தான்  முக்கியம். நீ போ..”  என்று சொல்ல  மனம் உடைகிறாள் .
ஒரு கான்வென்ட் மாணவி  ஓர்  சாலையோர ஏழைக் குடும்பத்துச் சிறுவன்  மீது பாசம் வைத்து அவனை,   தான் படிக்கும் பள்ளியில் சேர்க்கிறாள்.
அந்த  சிறுவன் தொலைந்து போக , அவனை கண்டுபிடிக்க  அவள் அலைகிறாள்  . 
ஒரு கல்லூரி  மாணவன் ஒரு  பெண்ணை  காதலிக்கிறான் . அவளுக்கும் சம்மதம் போல் தெரிந்த நிலையில் காதலைச் சொல்ல,  அவள்  அவனை அடித்து அவமானப் படுத்திப் புறக்கணித்துப்  போகிறாள் .
namadhu 3
இந்த  நாலு  புள்ளிகளும் ஒன்று சேரும் போது என்ன நிகழ்கிறது என்பதுதான் இந்தப் படம் 
— என்றதும் நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டு நம்பிக்கை வைத்தால்  அதற்கு  www.nammatamilcinema.in  நிர்வாகம் எந்த  விதத்திலும் பொறுப்பாகாது . 
அந்த  நான்கு பேரும் யார் என்ற சஸ்பென்ஸ் உடையும் இடத்தை  பெரிதாக நம்பி படத்தை எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் அது ஒரு பக்குவமில்லாத  அரை வேக்காட்டுத்தனமான  விசயமாகவே இருக்கிறது . 
தவிர  அந்த  சஸ்பென்ஸ் முன்னதாகவே ஒரு நிலையில் தானாகவே   புரிந்து விடுகிறது 
எதற்கு அந்த சஸ்பென்ஸ் ? அதனால் என்ன பலன் ? அதை  ஆரம்பத்தில் சொல்லி இருந்தால் கூட ஒரு எமோஷனலான ஃபேமிலி  டிராமா கிடைத்து இருக்குமோ என்று தோன்றுகிறது . 
namadhu 2
நான்கு கதைகளில் மோகன்லால் கதை மட்டும் அழுத்தமாக இருக்கிறது . ஆனால் திரைக்கதையில்  நன்றாக கையாளப்படவில்லை . 
கவுதமி கதையில் சில காட்சிகள் பரவாயில்லை . ஆனால் ரொம்ப  இழுவை .
கான்வென்ட் மாணவி ஏழைப் பையன் மீது பாசம் வைக்கும் காட்சிகள் சொல்லப்பட்ட விதம் படு செயற்கை . 
காதல்  டிராக்கில்  அந்த  பெண் ஏன் புறக்கணிக்கிறாள் ? அது தற்காலிக  கோபம் எனில் அது அவனுக்கு ஏன் புரியவில்லை ?
இப்படி கதை  திரைக்கதைதான் கடுப்படிகிறது என்றால் 
ஒரு பக்கம் மோகன்லால் சொந்தக் குரலில் பேசுகிறேன் என்று மலையாள பாணியில் பேசுகிறார் .
namadhu 6
இன்னொரு பக்கம் சொந்தக் குரலில்  பேசுகிறேன் பேர்வழி என்று கௌதமி  தெலுங்கு பேசுகிறார் . 
கவுதமியின் தோழியாக  வெகு சாதரணமான ஒரு கேரக்டரில் ஊர்வசி . ஆனால் வேலை அதிகம் இல்லை 
படத்தின் முடிவுக்கு பொருத்தமான துவக்கம் இல்லை . துவக்கத்துக்கு ஏற்ற  முடிவு இல்லை . 
மோகன்லாலின் சக போட்டியாளன் காணாமல்  போனதற்கு மோகன்லாலின் ‘தட்டல்’ ஐடியா காரணம் இல்லை என்று,
ஒரு நிலையில் வேறு  கதை சொல்லி படத்தைக் கொண்டு போயிருந்தால் நன்றாக இருந்து இருக்கும் .
நமது … யாருதோ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *