திருநாள் @ விமர்சனம்

naal 5

கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிக்க ,

ஜீவா , நயன்தாரா, சரத் லோகித் சிவா, கருணாஸ்  , ஜோ மல்லூரி  ஆகியோர் நடிக்க ,

பி எஸ் ராம்நாத் கதை  திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் திருநாள் .

இந்தத் திருநாள் வசூல் வரும் நாளா ? இல்லை வெறும் நாளா ?

பார்க்கலாம்

naal 1

தான் செய்யும் கட்டை பஞ்சாயத்து தொழிலுக்கு போர்வையாக இருக்க ஒரு கண்ணியமான தொழில் தேவைப்படும் தாதா  நாகாவும் (சரத் லோகித் சிவா ) ,

நேர்மையாக  தொழில் செய்து முன்னேற விரும்பும் நபர் ஒருவரும் ( ஜோ மல்லூரி )

ஒன்று சேர்ந்து ஆளுக்கு இருபது லட்சம் ரூபாய் போட்டு கோணி வியாபாரம் செய்கின்றனர்.

நாகாவின் கையாள் பிளேடு (ஜீவா ). நேர்மையாளரின் மகள் வித்யா (நயன்தாரா).

இருவருக்கும் காதல் .

naal 4

வித்யாவுக்கு அப்பா மாப்பிள்ளை பார்க்க , அவர்கள் பெண் பார்க்க வந்திருக்கும் நேரம், அது பற்றி மண்டியில் பிளேடுவிடம் வித்யா பேசிக் கொண்டிருக்க ,

சாக்குக் கட்டுகள் சரிந்து விழுந்து இருவரையும் அழுத்த , ஊரே காப்பற்ற வர,

சாக்குக் கட்டுகளுக்கு அடியில் பிளேடுவும் வித்யாவும் இருப்பதை ஊரே பார்க்க ,

மானம் போகிறது .

தனக்காக  நாகா பேசுவான் என்று பிளேடு எதிர்பார்க்க .

naal 8‘அப்படிப் பேசினால் அனாதையான பிளேடு தனக்கு சமமாகி விடுவான்’ என்று நாகா சொல்ல

அதைக் கேட்கும் பிளேடு  நாகாவின் நிஜ  முகம் அறிகிறான்.

இதுதான் சமயம் என்று வித்யாவின் அப்பாவையும் ஏமாற்றுகிறான் நாகா .

விளைவு?

இதுவரை அடிமையாக இருந்த பிளேடு  நாகாவுக்கு எதிராக திரும்புகிறான் .

இவர்களின் பிரச்னைக்கு இடையில் , இன்னும் சில ரவுடிகள் …

naal 6
இந்த எல்லா ரவுடிககளையும் ஒழிக்க நினைக்கும் அசிஸ்டன்ட் கமிஷனர் (நீயா நானா கோபிநாத்) எல்லோரும் சேரும்போது …

என்ன நடக்கிறது என்பதே இந்த திருநாள் .

தஞ்சை மாவட்ட பின்னணியில் கோணிப்பை தொழில் என்ற புது களத்தை முன் எடுத்த வகையில் கவனம் கவர்கிறார் இயக்குனர் ராம்நாத் .

ஆரம்பத்தில் தமிழ் சினிமா பார்த்து சலித்த கதாபாத்திரங்கள் காட்சிகள் வந்தாலும் சரியான சந்தர்ப்பத்தில் அவற்றில் வாழ்வியலையும் யதார்த்தத்தையும் கலந்து வித்தியாசப்படுத்துகிறார் .

பிளேடு என்ற  பெயருக்குப் பொருத்தமாக , தண்ணிக்குள் இருந்து தப்பிக்கும் ஐடியா,

naal 7சாக்குக் கட்டு தொழில் செய்பவன் அப்படியே  இலைக்கட்டு  தொழிலுக்கு மாறும் லாஜிக் ,

பிளேடுவைக் கொல்ல வந்து “நீயாவது நல்லா வாழு ‘’ என்று மன்னித்துப் போகும் சக ரவுடி (ராமச்சந்திரன்) கதாபாத்திரம்

— என்று  இயக்குனரைப் பாராட்ட பல விஷயங்கள் .

சிறப்பு.

உருவத் தோற்றம் செட் ஆகவில்லை என்றாலும் நடிப்பில் பிளேடுவைக் கூர் தீட்ட முயன்று இருக்கிறார் ஜீவா .

ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் போகப் போக வித்யா கேரக்டரை ரசிக்க வைக்கிறார் நயன்தாரா .

naal 3

அவரை ஷோ கேஸ் செய்யாமல் குறைவான மேக்கப் இயல்பான தோற்றம் என்று பயன்படுத்திய வகையில் இயக்குனருக்கு கூடுதல் பாராட்டுக்கள் .

தனது மனைவியை  நாகா சீரழிப்பது  கண்டு புழுங்கும் காட்சிகளில் கருணாஸ்  ஓகேஸ்!

ராமச்சந்திரன் இதுவரை நடித்த கேரக்டர்களிலேயே இதுதான் பெஸ்ட் . வாழ்த்துகள் !

சரத் , மல்லூரி , சாப்பாட்டு ராமனாக வரும் ராமதாஸ் ஆகியோரும் ஒகே .

ஸ்ரீ யின் இசையில் ‘பழைய சோறு பச்சை மிளகாய்’ பாட்டு தலைவாழை இலை சாப்பாடாக ருசிப்பதோடு,  மனசின் சாக்குப் பையில் உட்கார்ந்து கொண்டு வீடு வரைக்கும் வருகிறது.

naal 2

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதியும் பாராட்டும்படி இருக்கிறது .

நாகாவை  பிளேடு பழிவாங்க  இருவருக்கும் இடையிலான விசயங்களே போதும் .

அப்படியிருக்க , கருணாஸ் மனைவி விவகாரம் விலாவாரியாக சொல்லப்படுவது தேவை  இல்லாத சுமை .

என்னதான் கமர்ஷியல் என்றாலும் திட்டாதே பாட்டு நிற்கவில்லை .

முடிவில் அழுத்தம் கம்மி .

எனினும் வாழ்வியல் கலந்த கமர்ஷியலாக கவர்கிறது படம்

திருநாள் ….. மிட்டாய் கடை !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *