சுவிஸ் வாழ் ஈழத் தமிழரின் ‘காத்தவராயன் கூத்து’

kaaththa 3

சென்ற தமிழ்த் தலை முறைகளில்  கூத்து  வடிவம் மூலமாக மக்களிடம் பெரும் ஆதரவு பெற்ற கதைகளில் ஒன்று காத்தவராயன் கதை .

மதுரை வீரன் கதை போல இதுவும் மக்களைக் காக்கும் மனிதனாக விளங்கி பின் கடவுளாகவே வணங்கப்பட்ட ஒரு  கிராம தேவாதியின் கதை . 

கூத்து வடிவம் பிரபலமாக இருந்த காலத்திலேயே இது , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க , காத்தவராயன் என்ற பெயரில் படமாக வந்தது (எம் ஜி ஆருக்கு ஒரு மதுரை வீரன் ; சிவாஜிக்கு ஒரு காத்தவராயன் )
ஆனால்  கூத்துக் கலை  பெரும்பாலும் அழிந்து சினிமாவின் வடிவமும்  நவீனமாகி விட்ட நிலையில்,  காத்தவராயன் கதையை  காத்தவராயன் கூத்து என்ற பெயரில் படமாக எடுக்க வருகிறார்  ஒருவர் . 
kaaththa 2
அவர் ஓர் ஈழத் தமிழர் பெயர் எஸ் கே சுந்தரம் . 
காத்தவராயன் படத்துக்கான கதை திரைகதை வசனம் எழுதி இசை அமைத்து பாடல் தயாரித்து,
 அதன் வெளியீட்டு விழாவை  வி சி குகநாதன் மற்றும் கே . பாக்யராஜ் தலைமையில் சென்னையில் நடத்திய  இவர், அடுத்து இதை  படமாக  எடுக்கவும் இருக்கிறார் . 
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய  எஸ் கே சுந்தரம் ” நான் இலங்கை யாழ்ப்பாணம் அனலை தீவில் பிறந்த பிறந்தவன். என் தந்தை பரம்பரை கூத்துக் கலைஞர் .
காத்தவராயன் கூத்து  உள்ளிட்ட கூத்துகளை  சிறுவயது  முதலே அவர்  சொல்லைக் கேட்டு வளர்ந்தவன்  நான் . எனக்கும் இதில் ஆர்வம் பிறந்தது . 
kaaththa 6
பின்னர் நாங்கள் போர்ச் சூழல் காரணமாக சுவிட்சர்லாந்து போனோம் , அங்கே நான் காத்தவராயன் கூத்தை பாடப் பாட கேட்டுக் கொண்டே  உயிர் துறந்தார் எனது தந்தை . 
இந்தக் கலையை பரப்ப வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை . 
அதன் படி நான் இந்த காத்தவராயன் கூத்தை கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களாக எழுதி இசை இயக்கம் செய்து  சுவிட்சர்லாந்தில் பலமுறை  இசை  நாடகங்களாக நடத்தி இருக்கிறேன்.
தமிழர் கலையான கூத்துக் கலையை உலகம் முழுக்க பரப்புவதே எனது நோக்கம் . 
அதன் உச்சமான இந்த காத்தவராயன் கூத்தை அழியாமல் காக்க எண்ணி,  படமாக்கி உலகம் முழுக்க வெளியிட இருக்கிறேன் ” என்றார் . 
kaaththa 4
நிகழ்ச்சியில் பேசிய வி சி குகநாதன் ” என்  தாய் தமிழ் நாட்டுக்காரர் . என் தந்தை யாழ்ப்பாணம் புங்கிடு  தீவை சேர்ந்தவர் . அதன் பக்கத்தில்தான் அனலை  தீவு. 
பல கல்விமான்களை கொடுத்த மண்  அது . அங்கிருந்து வந்து கூத்துக் கலையை படமாக்கும் சுந்தரத்தின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் ” என்றார் . 
கே . பாக்யராஜ் பேசும்போது ” நான் சுந்தரத்தை விட சுந்தரத்தின் மனைவியை ரொம்ப பாராட்டறேன்.
ஏன்னா … இலங்கையில் இருந்து போர்ச் சூழலில் நொந்து சுவிட்சர்லாந்து போய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு , நாலு குழநதைகளுக்கும் அப்பா  ஆகிட்ட நிலையில ,
kaaththa 1
சம்பாதிச்ச காசை எல்லாம் போட்டு படம் எடுக்கிறேன்னு செலவு பண்றார் சுந்தரம் . 
‘அந்த சூழ்நிலையில சுந்தரத்துகிட்ட அவங்க ” சம்பாதிச்ச  காசை வச்சு பிள்ளைகளை வளர்க்கறத பாருங்க . கூத்தும் வேணாம் . ஒன்னும் வேணாம்’னு சொல்லி இருந்தா,
 அதை யாரும் தப்புன்னு சொல்ல முடியாது . ஆனா கணவரோட ஆசைக்காக அவங்க தர்ற ஒத்துழைப்பு  பெரிய  விஷயம் . 
கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல  படம்  பண்றீங்க . ஜனங்களுக்கு புடிக்கிற மாதிரியும் உருவாக்கி போட்ட காசை நீங்க எடுக்கணும் . அதான் என் விருப்பம் ” என்றார் .
வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *