சிவாஜி வீட்டில் ரஜினி கலந்து கொண்ட ‘நெருப்புடா’ பட விழா

neruppu 1

ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் சார்பில் விக்ரம் பிரபு , சந்திரா ஆர்ட்ஸ் சார்பில்  இசக்கி  துரை , சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்..கே. அஜய் குமார் ஆகியோர்  தயாரிக்க,

விக்ரம் பிரபு , நிக்கி கல்ராணி , பொன் வண்ணன், நான் கடவுள் ராஜெந்திரன் ஆடுகளம் நரேன் ஆகியோர்   நடிக்க,  பி.அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர்  இயக்கி இருக்கும் படம்  நெருப்புடா

இந்த அசோக்குமார் ரோமியோ  ஜூலியட் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் . ஒளிப்பதிவாளர்  ரவி வர்மனிடம் இரண்டு படங்களில் இணை  ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர் .

அது மட்டுமா ? சி என் என்,  ஐ பி என்  தொலைக்காட்சி  நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பத்திரிக்கையாளராகப் பணி புரிந்தவர் .

neruppu 5

படத்துக்கு ஒளிப்பதிவாளர் – R.D. ராஜசேகர், இசை – ஷான் ரோல்டன், பாடல்கள் – ரோக்கேஷ், கலை – எம்.பிரபாகரன், படத் தொகுப்பு – தியாகு, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – நரேன், டிஸைனர், சபீர்,

தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் சங்கத் தலைவர் டைமண்ட் பாபு , இந்தப் படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார் .

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், சத்யராஜ், விஷால், இயக்குனர் விக்ரமன், தனுஷ் , கலைப்புலி எஸ் தாணு விவேக் என்று பல பிரபலங்கள் !

படத்தில் முன்னோட்டமும் பாடல் ஒன்றும் திரையிடப்பட்டது .

ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரபாகரின் கலை இயக்கத்தில் அசோக்குமாரின் இயக்கத்தில் படம் வித்தியாசமாக வந்திருப்பது சிறப்பான முன்னோட்டத்திலேயே தெரிந்தது .

neruppu 6

பாடலில் மிக சிறப்பாக ஆடி இருந்தார் விக்ரம் பிரபு .

நிகழ்ச்சியில் பேசிய விஷால், படம் பார்க்கும்போதே பாதியிலேயே படத்தைப் பற்றி தவறாக விமர்சனம் எழுதும் போக்கு மாறவேண்டும் ” என்று  சொல்ல,

தொடர்ந்து தாணு. விவேக், ராகவா லாரன்ஸ், விக்ரமன் , ரஜினி காந்த் வரை அந்தக் கருத்தை தங்கள் பாணியில் வலியுறுத்தினார்கள் .

“சான் ரோல்டன் இசை மிக சிறப்பாக உள்ளது . அவர் பெரிய உயரங்களுக்கு போவார்” என்றார் தனுஷ்

சிவாஜி வீட்டு சாப்பாட்டின் சிறப்பு பற்றி சத்யராஜ், விவேக் பலரும் சிலாகித்துப் பேசினார்கள் ” ஒரு முறை மூன்று மணி நேரம் ஷூட்டிங்க நிறுத்திட்டு சாப்பிட்டோம் என்றார் விவேக் .

neruppu 4

அதோடு ”பிரபுவிடம் ஓர் அழகிய கள்ளமின்மை உண்டு . தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ஓவர் நைட்டில் பெரிய ஹீரோவான முதல் நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் .

இரண்டாவது நடிகர் சிவாஜியின் பேரனான  விக்ரம் பிரபு . வேறு யாருக்கும் இந்தப் பெருமை இல்லை ” என்றார் விவேக்

நான் வாழ் வைப்பேன் படத்தின் சிவாஜியுடன் நடித்த போது முதன் மூதலாக சிவாஜி வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டதை நினைவு கூர்ந்த ரஜினிகாந்த்

” அவர் இப்போது இங்கே உயிரோடு இருந்தால் ‘என்னடா ! எனக்கு போட்டியா தாடி வச்சிட்டியா?’ எனக் கேட்பார்” என்றார் .

neruppu 2

ரஜினி உட்பட நிகழ்ச்சியில் பேசிய எல்லோருமே , ” இந்தப் படத்தின் வெற்றி விழாவை இங்கே இதே சிவாஜி வீட்டிலேயே நடத்த வேண்டும் . நாங்கள் அழைக்காமலே வருவோம் ” என்றார்

“படத்துக்கு  நெருப்பு  என்று ஒரு டைட்டிலை யோசித்து வைத்து இருந்தோம் . இந்த சமயத்தில் ரஜினி சாரின் கபாலி  படத்தின் பாடலில்  வரும், 

‘நெருப்பு டா’  என்ற வார்த்தை  பிரபலமாகி விட,  அதையே பெயராக வைத்து  விட்டோம் ” என்றார் விக்ரம் பிரபு .

“தீயணைப்பு வீரர் பற்றிய கதை என்பதால் இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக அமைந்தது ” என்றார் இயக்குனர் அசோக் குமார் .

“அப்பா மீது கொண்ட அன்பு காரணமாகவும் எங்கள் மீது கொண்ட நட்பு காரணமாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ” என்றார் பிரபு

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *