நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிப்பில் பிரபு தேவா , நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குனர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ,பாகுபலி பிரபாகர் நடிப்பில் ஏ சி முகில் செல்லப்பன் இயக்கி இருக்கும் படம் பொன் மாணிக்கவேல்.
ஒரு ஜட்ஜ் துப்பாக்கியால் சுடப்பட்டும் பிறகு தலை துண்டிக்கப்பட்டும், கொல்லப் படுகிறார் . போலீசுக்கு சரியான துப்பு எதுவும் கிடைக்காத நிலையில் பொன் மாணிக்கவேல் (பிரபுதேவா) நியமிக்கப்படுகிறார் .
முன்பே ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர முடியாத நிலையில் பதிவியையே ராஜினாமா செய்ய முயன்றவர் இவர். மனைவி மட்டும் உண்டு .
ஜட்ஜை அடுத்து ஒரு இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார். அடுத்து கொலைகாரன் குறி ஒரு பெரிய தொழிலதிபர்தான் என்ற நிலையில் காவல்துறை பணிக்கும் அப்பாற்பட்டு தொழில் அதிபரைக் காப்பாற்ற பல கோடி பணம் கேட்டு டீல் பேசுகிறார் நாயகன் . ஏன் எதற்கு அப்புறம் என்ன நடந்தது என்பதே படம்.
கோடீஸ்வர பெண் பித்த போதை பழக்க கோடீஸ்வரர்கள் அவர்களால் பாதிக்கப்படும் இளம்பெண்கள் , குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் பொருமும் நபர்களில் ஒருவர் எடுக்கும் முடிவு என பயணிக்கும் படம் இது .
பெண்கள் பாதிக்கப்படுவதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள் . அடையாளம் காண முடியாத துப்பாக்கி , துப்பாக்கியால் இருந்து வெளிப்படும் குண்டுகள் தொடர்பான சில தகவல்கள் சிறப்பு. ரகசிய போலீசின் விசாரணை விசயங்களும் ஒகே ரகம்.
மற்றபடி படத்தில் புதிய உத்தி, பாராட்டும்படியான திரைக்கதை உத்தி என்று எதுவும் இல்லை . ஆயிரம் முறை பார்த்து சலித்த காட்சிகள் , இந்த படத்தின் கதைக்கு தேவையற்ற காட்சிகள் என்று படம் போகிறது.
இதில் ஒரு முரட்டுத்தனமான போலீஸ்காரருக்கு பெருவளத்தான் என்று சோழ மன்னன் கரிகால் சோழனின் பெயரை வைத்து கிண்டல் செய்வது எல்லாம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் நடிக நடிகையரின் நடிப்பு என்று எல்லா வகையிலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய படம்.
