தாயம் @ விமர்சனம்

thaayam 3

ஃபியூச்சர் ஃபிலிம் ஃபேக்டரி இன்டர்நேஷனல் சார்பில் ஏ ஆர் எஸ் சுந்தர் தயாரிக்க, 

சந்தோஷ் பிரதாப், ஜெயகுமார், ஜீவா ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், , காதல் கண்ணன், ஐரா அகர்வால், அஜய், அன்மோல் சஞ்சு, ஆஞ்சல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெயதேவ், அருள் , சஹானா ஆகியோர் நடிக்க,

கண்ணன் ரங்கசாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் தாயம்

உருட்டலாமா ? இல்லை உருண்டு விடுவோமா?  பார்ப்போம்.

ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு மூன்று பெண்கள் நான்கு ஆண்கள் உட்பட ஏழு பேர் வருகிறார்கள் .

அவர்களை ஒரு அறைக்குள் இருக்க வைக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ” உங்களுக்கு முன்பு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார் .

thaayam 2

இந்தப் பதவிக்கு இன்னொருவர் வருவதை விரும்பாத அவரது ஆவி இப்போது இங்கு வரும் . உங்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு நாங்கள் வெளியே போய் விடுவோம் . ஒரு மணி நேரம் கழித்து வருவோம் .

உங்களில் யார் ஒருவர் உயிரோடும் மன நிலை பாதிக்கப்படாமலும்  இருக்கிறாரோ அவருக்குதான் பதவி ” என்று சொல்லி விட்டுப் போகிறார்கள் . ஆவி தெரிகிறது .

தவிர, ஒரு மணி நேரம் கழித்து தான் மட்டும் உயிரோடு இருந்தால் மட்டுமே பதவி தனக்கு வரும் என்ற நம்பிக்கையில் ஒருவரை ஒருவர் கொல்லமுயல்கின்றனர் . அவர்களுக்கு ஒரு துப்பாக்கியும் கிடைக்கிறது .

அவர்களது ஞாபக சக்தி பறிபோகிறது ஒருவனின் குளோனிங்கும் அங்கே இருக்கிறது .

ஒரு மணி நேரம் ஆன பிறகு யார் உயிரோடு இருந்தார்?என்பதே படம் .

thaayam 1

வித்தியாசமான கதை . கடைசியில்  பலவித குணாதிசய கற்பனைக் குறைபாட்டுக்கான (மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்)  மன நல சிகிச்சை என்ற ஒரு லாஜிக் சொல்கிறார்கள் .

ஆனால் அதை படம் பார்க்க வரும் ரசிகனுக்கு புரியும்படி சொல்ல வேண்டாமா ?

படத்தில் நடித்துள்ள யாரிடமும் ஒரு மண் சார்ந்த தன்மையோ இயல்போ இல்லை . செயற்கையான நடிப்பு .

சுற்றி உள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அடித்து அழித்து,  தான் மட்டும்தான் முன்னேறுவதுதான் கார்பரேட் கலாச்சாரம் என்று  சொல்லும் இடத்தில் மட்டும் பாராட்ட வைக்கிறார் .

ஆனால் படமாக்கல் தன்மையிலேயே கார்ப்பரேட் கலாசாரம்தானே தெரிகிறது .

தாயம் … காயம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *