
விஜய் நடித்த பிரியமுடன், மற்றும் யூத் , முரளி நடித்த வாட்டாகுடி இரணியன், ரமேஷ் நடித்த ஜித்தன் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா .
இவர் இப்போது இயக்கி இருக்கும் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன .
வெகு ஜன இயல்பு வாழ்வில் திரை உலகப் பின்னணியைக் கலந்து நகைச்சுவையோடு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வின்சென்ட் செல்வா என்பது முன்னோட்டததைப் பார்த்த போது தெரிந்தது .
திரைப்பட இயக்குனராக தம்பி ராமையா நடித்துள்ளார் .
நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார் .
இது போன்ற விழாக்களில் பேசும் வழக்கமான மிஷ்கினை இங்கே பார்க்க முடியவில்லை . மிகவும் நெகிழ்ந்து போய் பேசினார் . காரணம் மிஷ்கின் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் .
” என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு அடுத்தபடியாக நான் தாயாக நினைப்பது வின்சென்ட் செல்வா சாரைதான் . அவரது குடும்பத்தில் நானும் ஒருவன் .
அவர் பாடல்களில் ஆர்வம் உள்ளவர் . யாராவது பாடினால் அவ்வளவு ஆர்வமாக கேட்பார் . நான் அவரிடம் அசிஸ்டன்ட் ஆக போனபோது என்னையும் நிறைய பாடச் சொல்வார் .
நான் கொஞ்சம் இளையராஜா சார் குரலில் பாடுவேன் . என்னை நிறைய பாடச் சொல்லி கேட்டார். நானும் பாடுவேன்
அப்படியே டியூன் போடுவேன் பாடல் எழுதுவேன் .
யூத் படத்தில் கபிலன் எழுதி வந்த ஆல் தோட்ட பூபதி பாடலின் மெட்டுக்கு முதலில் பாடல் எழுதியவர் வாலி சார் தான். அதற்காக வாலி சாருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணமும் கொடுக்கப்பட்டு விட்டது .
அப்போதுதான் கபிலன் கொடுத்த பாடலையும் பார்த்தேன் . அந்த ‘ஆல் தோட்ட பூபதி’ என்ற வரி என்னை அசத்தியது . ‘இது வந்தால் நன்றாக இருக்கும்’ என்று நினைத்தேன் .
ஆனால் பாடலை மாற்ற முடியாது . அதுவும் வாலி சார் பாட்டை தூக்கி எறிந்து விட்டு ஒரு புதிய கவிஞரின் பாட்டை போடுவது சாத்தியம் இல்லை .
எனினும் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் .
பாடகர் சங்கர் மகாதேவன் பாட வந்தபோது நான் அவரிடம் போய் கபிலன் எழுதிய பாடலைக் கொடுத்து விட்டேன் . அவரும் பாடி விட்டார் .
பாடலைக் கேட்க வந்த டைரக்டர் வின்சென்ட் செல்வாவுக்கும் தயாரிப்பாளருக்கும் அதிர்ச்சி .
தயாரிப்பாளர் என்னை கன்னா பின்னா என்று திட்டுகிறார். ஆனால் டைரக்டர் அதை கூட செய்யவில்லை . எனக்கு மனசு கஷ்டமாப் போச்சு .
ஆனா சில நிமிடத்துக்குப் பிறகு டைரக்டர் என் கிட்ட ‘ நீ செஞ்சது சரி”ன்னு பாராட்டினார் .
அந்த நொடியில்தான் நான் முதன் முதலில் டைரக்டர ஆனேன்.
குழந்தைக்கும் சரி, டைரக்டருக்கும் சரி ….அவர்கள்கே ட்டது எல்லாம் கொடுக்கப்படவேண்டும் . எனக்கு அந்த உணர்வை தந்தவர் வின்சென்ட் செல்வா .
அது மட்டுமல்ல ..
எந்த ஷாட்டுக்கு எந்த லென்சை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்ற லென்சிங் அறிவில், அவர் ஜீனியஸ். அவரிடம் இருந்துதான் எனக்கு அது தெரிய வந்தது .
எனக்கு சினிமாவை கற்றுக் கொடுத்தவர் அவர் .
அவர் இல்லை என்றால் நான் இல்லை . அவர் மீண்டும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் ” என்றார்
வின்சென்ட் செல்வா தனது பேச்சில்
” மிஸ்கின் பேச்சில் நெகிழ்ந்து போனேன் . அவர் என்னிடம் உருவானவர் என்பதில் எனக்கு ரொம்ப பெருமை உண்டு .
பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய இயக்குனரான கோடார்ட் என்பவருக்கு இணையானவர் மிஷ்கின் .
மிஸ்கின் சொன்னது போல இனி நிறைய படங்களை இயக்குவேன் . இந்த விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் எல்லா தரப்பு ரசிகர்காளுக்கும் பிடித்த மாதிரி இருக்கும் ” என்றார்
வாழ்த்துகள் வின்சென்ட் செல்வா !