தமிழ்நாடு மலையாளிகள் கூட்டமைப்பின்’ சார்பில் வருகின்ற அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதி ‘ஆவணிப்பூவரங்கு’ என்ற ஒரு திருவிழா,
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் ஒரு வடக்கன் வீர கதா , பழசி ராஜா போன்ற புகழ் பெற்ற மலையாளப் படங்களை இயக்கிய இயக்குனர் ஹரிஹரன்,
எம் ஜி ஆர் நடித்த நாளை நமதே , கமல் நடித்த நம்மவர் போன்ற படங்களை இயக்கிய கே. எஸ் சேதுமாதவன்,
இயக்குனர் ஐ வி சசி (அலாவுதீனும் அற்புத விளக்கும்), நடிகை சீமா, கலை இயக்குனர் சாபு சிரில், மலையாள நடிகர் கதாசிரியர் ஸ்ரீனிவாசன் என
திரையுலகை சார்ந்த பல முன்னணி கலைஞர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்
18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழா பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் .
மேற்படி ஆவணிப் பூவரங்கின்’ நிறுவனர் வி சி பிரவீன். பேசும்போது
” நாங்கள் 180 இதய நோயாளி குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை நடத்தி இருக்கிறோம். அதில் தற்போது 179 குழந்தைகள் ஆரோக்கியமாகவும், இயல்பாகவும் இருப்பதை பார்க்கும் பொழுது
எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.
எங்கள் அமைப்பின் தூதராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பத்மஸ்ரீ கமல் ஹாசன் சாருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
கலாச்சார பரிமாற்றங்களை தாண்டி, நம் இரு மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற திட்டங்களை அறிமுக படுத்துவதே எங்களின் தலையாய கடமை…” என்று கூறினார் ‘
“நம் தமிழக – கேரள மக்களின் இடையே நிலவி வரும் சகோதர உறவை கொண்டாடும் தருணம் இது. இரு மாநிலங்களின் நட்புறவை மேம்படுத்தும் ஒரு திருவிழா தான் இந்த ஆவணிப் பூவரங்கு….
திருச்சூர் பூரம் திருவிழா போல இது நடததபடும் ” என்று கூறினார்,
தமிழ்நாடு மலையாள மக்களின் கூட்டமைப்பின் நிறுவனரும், பழசி ராஜா படத்தைத் தயாரித்தவரும் தூங்கவனம் படத்தின் தயாரிப்பில் இணைந்திருந்தவருமான ,
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன்.
எல்லாம் சரி … முல்லைப் பெரியாறு போன்று தமிழ் நாட்டை கேரளா வஞ்சிக்கும் விசயங்களில் உங்கள் நிலைப்பாடு என்ன?” என்று நான் கேட்டேன் .
“அது எங்கள் கையில் இல்லாத விசயம். முல்லைப் பெரியாறு பிரச்னை , காவிரி பிரச்னை எல்லாம் தமிழ்நாட்டுக்கு இருக்கத்தான் செய்கிறது
ஆனால் எங்களால் முடிந்தவரை சென்னையின் ஐந்து இடங்களில் வாட்டர் டிரீட்மென்ட் பிளான் அமைக்க இருக்கிறோம் ” என்றார் .