ஏகனாபுரம் @ விமர்சனம்

ae-4

வி ஆர் இன்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் வி.ரவி தயாரித்து நாயகனாக நடிக்க,

ரித்திகா, செவ்வாழை, ராஜ சிம்மன் ஆகியோர் நடிப்பில்,  வி.சுரேஷ் நட்சத்திரா என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஏகனாபுரம் .

இது  ரசனைபுரமா ? விசனபுரமா ? பார்க்கலாம்

பின் தங்கிய கிராமம் ஒன்றில் நல்லது கெட்டதுகளுக்கு பறையடிக்கும் தொழில் செய்கிற இளைஞனுக்கும் (வி. ரவி)

ae-3

ஊர் ஊராகச் சென்று வாத்துக் கிடை போட்டு பிழைக்கும் நாடோடி குடும்பத்தில் பிறந்து,  அம்மா இறந்த நிலையில் சித்தி மற்றும் அப்பாவோடு வாழ்ந்தபடி ,

மேற்படி கிராமத்துக்கு வந்து கிடை போட்டு வாத்து மேய்க்கும் ஓர் இளம்பெண்ணுக்கும் ( ரித்திகா) காதல் .

வாத்து முட்டை வியாபாரியான ஒரு காமுகன்(ராஜ சிம்மன்) , சித்திக்கு பண உதவி செய்வதன் மூலம் நாயகியை  ஆசை நாயகியாக்கிக் கொள்ள முயல்கிறான் .

நாயகனின் சிறு வயதில்,  அவனது அம்மாவுக்கும் ஒரு ஆணவம் கொண்ட பணக்காரப் பெண்ணுக்கும் நடந்த சண்டை கைகலப்பாக ,

ae-2

பணக்காரப் பெண்ணின் மகளான சிறுமி நாயகியின் அம்மாவை அடிக்க , பதிலுக்கு அந்த சிறுமியை இவன் அடித்த அடி,  அவளது  பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது .

அதனால் வளர்ந்த பின்பு அவள் திருமண வாழ்க்கை பாதிக்கப்படுகிறது . கணவன் விட்டு விட்டுப் போய்விடுகிறான் .

இப்போது ஊரிலேயே வசதியான பெண்ணாக இருக்கும் அவள், நாயகன் சந்தோஷமாக இல்லற வாழ்வை அனுபவிக்க விட மாட்டேன் என்று சபதம் போட்டு செயல்படுகிறாள் .

இந்த பலமான வில்லன் வில்லிகளுக்கு இடையே சிக்கிய இந்த ஏழை எளிய காதல் என்ன ஆனது என்பதே இந்தப் படம்

ae-1

படத்தின் மிகப் பெரிய பலம் அதன் எளிமை . கிராமத்துக்குள் வாழும் உணர்வை தரும் படமாக்க்கல் .

எந்த பயமோ அழுததமோ கமர்ஷியல் குறித்த திட்டமோ  இல்லாமல் நினைத்ததை நினைத்தபடி எடுத்துள்ளார்கள்.

அதனாலேயே கத்துக் குட்டித்தனங்களையும் மீறி சில கவிதைகளையும் அங்கங்கே பார்க்க முடிகிறது .

மதிய நேர சீரியல் நடிகை மாதிரி செயற்கையாக நடித்துள்ள அந்த வில்லியை தவிர மற்ற எல்லாருமே இயல்பாக இருக்கின்றனர் . நடிக நடிகையர் தேர்வில் ஜொலிக்கிறார் இயக்குனர் .

ae-5

அதே நேரம் செயற்கையான வசனங்கள் , படு செயற்கையான திருப்பங்கள் , அடுத்து என்ன நடக்கும் என்பதை சுலபமாக உணரத்தும் காட்சிகள் எல்லாம் படத்தை பலவீனமாக்குகின்றன .

கிளைமாக்சில் என்ன நடக்கும் என்பதை முன்பே ஒரு காட்சியில் சொல்லி அதையே கிளைமாக்சாக காட்டுவதோடு , முன்னையே சொன்னம்ல என்று அதை போட்டு வேறு காட்டுவது சிறுபிள்ளைத்தனம் .

இதெல்லாம் அந்தக் கால சிறுகதை பாணி .

ஏகனாபுரம் … ஆளில்லா ஊர்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *