‘அப்பா’வின் பெருமையும் பிள்ளையின் அருமையும்

 

appa 3

நாடோடிகள்  நிறுவனம் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் சமுத்திரக் கனி மற்றும்  மதியழகன் இருவரும் தயாரிக்க, 

சமுத்திரக்கனி , தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன் ஆகியோர் நடிக்க , 
சமுத்திரக்கனி எழுதி இயக்கி இருக்கும் படம் அப்பா . 
இந்தப் படத்துக்காக பல பிரபலங்கள் தங்களது தந்தை பற்றிப் பேசும் வீடியோக்கள் இப்போது பெரும் பிரபலம் . 
கருத்தாக்க ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்துக்காக,  சமுத்திரக் கனியுடன் பேசியது நிஜமாகவே சுவையான அனுபவம்.
 வெகு இயல்பாக சுவாரஸ்யமாக பல்வேறு சமூக விசயங்களோடும் தொடர்புப்படுத்தி தனது  அப்பா படம் பற்றி சமுத்திர ஆழமாகப் பேசுகிறார் கனி 
appa 2
“இது சில  அப்பாக்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் கதை . 
இயல்பாக சுதந்திரமாக பிள்ளையை வளர்க்கும் அப்பாவாக நான் . அதிக பாசம் காட்டி வளர்க்கும் அப்பாவாக தம்பி ராமையா , 
‘பாம்புக் கறியா இருந்தாலும் நடுத்துண்டம் நமக்கு’ என்பது போல எதிலுமே முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் கூட்டததில் ஒருவராக வாழ்ந்து,
அடையாளமே இல்லாது முடிந்து போகும்  நபர்களின் பிரதிநிதியான ஓர் அப்பாவாக நமோ நாராயணன் …
இவர்கள் பிள்ளைகள் , அந்த பிள்ளைகளின் அம்மாக்கள் ஆகியோர் பற்றிய படம்  இது .
படம் துவங்கிய பத்து நிமிடத்துக்குள் படம் பார்க்கும் ஒவ்வொருவரும்,  படததில் வரும் ஓர் அப்பாவோடு , தனது சொந்த அப்பாவை ஒப்பிட்டுப் பார்க்க முடியும் . 
appa 7
அப்படி ஓர் அனுபவமாக இந்தப் படம் இருக்கும் . 
அப்பா  எது   சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிற அம்மாக்கள் , அப்பா என்ன சொன்னலும் அதற்கு எதிராகவே பேசி,
 அவரை நோகடித்து எல்லாவற்றையும் கெடுத்து அதனால் பிள்ளைகளையும் கெடுக்கும் அம்மாக்கள், 
அப்பாவோடு இயல்பாக இருக்கிற அம்மாக்கள் , பயந்து நடுங்கி சுய கருத்து எதுவும் இல்லாமல் வாழ்ந்து மடியும்  அம்மாக்கள் .. இவர்களால் பிள்ளைகளின் வாழ்க்கை  என்ன ஆகிறது என்பதை இந்தப் படம் பேசும் .
இதை பிரசாரமாக சொல்லாமல் போரடிக்காமல் , நாம் இப்போது உட்கார்ந்து பேசுகிறமாதிரி இயல்பாக சுவாரஸ்யமாக  சொல்லி இருக்கிறேன் . 
appa 8
இப்படி சுவையாக சொல்ல  வேண்டும் என்பதற்காகவே கதை எழுதிய பிறகு திரைக்கதையை முடிக்க  மட்டும் நான்கு வருடங்களை எடுத்துக் கொண்டேன் . 
பார்ப்பவர்களை இந்தப் படம் சிரிக்க  வைக்கும் . கண்ணீர் சிந்த வைக்கும் . ரசிக்க வைக்கும் . 
இந்தப் படத்தை பார்த்து முடித்த பிறகு ,  அப்பா இருந்தால் அவரை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் . அப்பா இறந்தவர்களுக்கு அவரை எண்ணி ஏக்கம் வரும் . 
ஆனால் அது மட்டுமே இந்தப் படத்தின்  நோக்கம் இல்லை 
ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்று நாற்பது மார்க் வாங்கிய பெண்,  மார்க் கம்மி என்று தற்கொலை செய்து கொள்கிறாள் . 
 appa 1
சில நாட்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலின் உயரமான  மொட்டை மாடியில்  இருந்து ஒரு பெண் ஓடி வந்து குதித்து தரையில் விழுந்து சிதறி செத்துப் போனாள் . ஏன் ?
அந்தப் பெண்களுக்கு தன் தோல்வியை சொல்லி ஆறுதல் தேட , அப்பா என்ற  ஒரு ஹீரோ இல்லை . அதுதான் பிரச்னை 
பிள்ளைகளை பேச அனுமதியுங்கள் . அவர்கள் உணர்வுகளை கேளுங்கள் . தோல்விகளில் ஆறுதலாக இருங்கள் .
தப்பே செய்தாலும் பிள்ளைகளுக்கு ‘நம்ம அப்பா  இருக்கிறார் , அவரிடம் போனால் சரியாகி விடும்’ என்ற நம்பிக்கை வரும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லும் படம் இது . 
appa 6
நானெல்லாம் சின்ன வயசில் பள்ளியில் வாத்தியாரும் அடித்து , வீட்டுக்குப் போனால் அப்பாவும் அடிப்பார் என்ற பயத்தில் எங்கே போவது என்று தெரியாமல் அலைந்து இருக்கிறேன் . 
அன்று வாழ்க்கை முறை நமக்கு கொடுத்த போராட்ட உணர்வு நம்மை யோசிக்க வைத்தது .
இன்றைய வாழ்க்கை முறையில் அந்த போராட்ட குணம் அமையாத நிலையில் நம்பிக்கை தரும் அப்பா இல்லாத பிள்ளைகள் தற்கொலை வரை போய் விடுகிறார்கள் . 
எனவே உங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை கொடுங்கள் என்று சொல்லும் படம் இது . 
“விவரம் தெரிந்த பிறகு தன்  அப்பாவின் கையை பிடிக்கும் உரிமையே தனக்கு தனது 23 ஆம் வயதில்தான் வந்தது” என்று ஒரு பேட்டியில் கமல் கூறி இருந்தார் .
appa 9அன்று அப்பா பிள்ளை இடையே இடைவெளிகள் இருந்தாலும் மற்ற உறவுகள் இருந்தன .
ஆனால் இன்று  பல கூட்டுக் குடும்ப உறவுகள் குறைந்து விட்ட நிலையில்,  அப்பா பிள்ளை இடையே இடைவெளி கூடாது என்பதை சொல்லும் படம் இது . 
ஆயிரம் உறவுகள் வந்தாலும் என்றென்றும் நமக்கான உயர்ந்த உறவு பெற்றவர்கள்தான் . அந்த உறவின் விதையான  அப்பாவின் பெருமை சொல்லும் படம் இது .
appa 5
படத்துக்கு இசையால் அப்பாவாகி இருப்பவர் இசைஞானி இளையராஜா . சம்பளத்துக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தப் படத்துக்காக இசை கொடுத்தார் அவர் . 
அவர் முந்தைய படத்துக்கு வாங்கிய தொகையை நானே வெளியே கேட்டுத் தெரிந்து கொண்டு அதன் பிறகு அந்த  மரியாதையை  செய்தேன் . 
அவர் இசை கொடுத்த பிறகு இந்தப் படம் இன்னும் சிறப்பாக பெரும்பலத்தொடு  அமைந்து இருக்கிறது ” என்கிறார் உற்சாகமாக . 
வரும் ஜூலை ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது அப்பா . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *