அட்டு @ விமர்சனம்

at 2
ஸ்டுடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட , ட்ரீம் ஐகன் பிலிம் புரடக்ஷன் சார்பில் எஸ் . அன்பழ்ககன் தயாரிக்க, ரிஷி ரித்விக், அர்ச்சனா ரவி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில்
ரத்தன் லிங்கா இயக்கி இருக்கும் படம் அட்டு .அட்டு என்றால் யாருக்கும் அடங்காத தைரியமான ஆள் என்று அர்த்தமாம் . படத்தில் சொல்கிறார்கள் .ரசிகர்கள் தைரியமாக பார்க்கப் போகலாமா ?  பேசுவோம்

வட சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குப்பையும் குப்பை சார்ந்த பகுதியுமான ஒரு குப்பை மலை மற்றும் குப்பைக் காட்டில் ,

அம்மா அப்பா யார் என்று தெரியாத நிலையில் இந்த உலகததோடு சுய அறிமுகம் செய்து கொண்டு ,

ஓர் இட்லிக்கார ஆயாவின் கருணையால் வளர்ந்து அடிதடி ரவுடித்தனம், காசுக்காக கையை காலை எடுப்பது , கழுத்தை அறுத்துக் கொல்வது  என்று வாழ்ந்து வரும் இளைஞன் அட்டு (ரிஷி) .

காசுக்காக ஆட்களை கொல்வது மட்டுமின்றி போதைப் பொருள் கடததலும் அந்த பகுதியில் உண்டு அட்டுவைச்  சுற்றி அவனைப் போலவே சில நண்பர்கள் .

at 4
அட்டு அன் கோ வைப் போலவே அங்கே பல குழுக்கள் . அந்த குழுக்களைக் கட்டுப்படுத்தும் தாதாதாதாக்களுக்கு எல்லாம் பெரியவராக அரசியலும் சேர்த்து து செய்யும் ‘பெரியவர்’ என்ற ஒரு மனிதர் .

அட்டுவை சிறுவயது முதலே அறிந்த ஓர் இளம்பெண் (அர்ச்சனா ) அவனைக் காதலிக்கிறாள் . . ஆனால் அவளது தந்தைக்கோ , தன் மகள் காசுக்காக கொலை செய்யும் ஒரு நபரை

— எந்த பொறுப்பும் இல்லாத ஒருவனை – காதலித்து வாழப் போவதில் விருப்பம் இல்லை . அதையும் மீறி அவர்களின் காதல் தொடர்கிறதுஅட்டுவின் அட்ராசிட்டியால் கொதித்துப் போகும் ஒரு இன்ஸ்பெக்டர் கறுவிக் கொண்டு காத்திருக்கிறார்

அட்டு குழுவுக்கும் மற்ற குழுக்களுக்கும் சண்டை வருகிறது . அதன் விளைவாக அட்டுவுகும் அவன் நம்பிய தாதாவுக்கும் மோதல் வருகிறது . ஒரு நிலையில் மறைந்து வாழ்ந்து பெரியவரிடம் தஞ்சம் புகுகிறான் அட்டு .

அங்கேயும் தன் நண்பன் ஒருவனின் நன்மைக்காக பெரியவரையே பகைக்கும் சூழல் வர , அப்புறம் அட்டு என்ன ஆனான் ? அவன் காதல் என்ன ஆனது ? என்பதே அட்டு .

at 3

படம் பார்த்து முடிந்த உடனே , ‘ வீட்டுக்குப் போய் சுடுதண்ணி வச்சு  ரெண்டு துளி டெட்டால் விட்டு , ஹமாம் சோப்பு கதற கதற தேய்ச்சுக்  குளிக்கணும் ‘ என்ற எண்ணம் வருகிறது .

காரணம்,  ஒரு மாபெரும் குப்பை  மலைக் காட்டில் வெம்புழுதியில் , அழுக்கில் , எண்ணெய்ப் பிசுக்கில் ,  காடு போல முடி வளர்த்துக் கொண்டு, 

பல்லே விளக்காமல் பத்து வருடம் வாழ்ந்து விட்டது போன்ற உணர்வு நமக்கே ஏற்படுகிறது .அந்த அளவுக்கு படத்தின் களத்தை,  பின் பின்புலத்தை,  காட்சியில் யதார்த்தத்தை,  கொண்டு வருவதில் ராட்சஷ உழைப்பு உழைத்துள்ளார் இயக்குனர் ரத்தன் லிங்கா .

அதற்கு ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் கலை இயக்குனர் சுரேஷ் கலேரி இருவரும் யானை பலம் கொடுத்து உள்ளாகள். குறிப்பாக படத்தில் டோன் படத்துக்கு ஒரு தனித் தன்மையை தருகிறது
வட சென்னையில் ஒரு குறிப்பிட்ட பொருளாதார அடுக்கில்  மண் சார்ந்து  வாழும் மக்களின் பேச்சு வழக்கு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது .

at 4

நடிக நடிகையர் தேர்வு அருமை .

போபோ சசி இசையில் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம் பாடல் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது . பாமரத்தனம் நிறைந்த அந்த குரலும் பாடல் வரிகளில் உள்ள சென்னை கானா வாசனையும் சூப்பர் .

டிங் டிங் டிகானா பாடல் கமர்ஷியல் கைமா .

பின்னணி இசை பல சில இடங்களில் பக்குவம் இல்லாமல் இருந்தாலும் பொதுவில் அதிகம் கேட்டிராத ஒரு வித்தியாசத்தன்மையை கேட்க முடிகிறது . பாராட்டுகள் .

பவர் பாண்டியன் ஆசானின் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கின்றன .

இப்படி எல்லாம் மேக்கிங்கில் பார்த்து பார்த்து செய்தவர்கள் கதை திரைகதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

படத்தின் அடிப்படைக் கதையில் புதுமை எதுவும் இல்லை . பார்த்துச் சலித்த பல படங்களின் இன்னொரு காப்பிதான் . திரைக்கதையும் அப்படியே

at 1

கதாநாயகியின் தந்தை எடுக்கும் அந்த முடிவு  மட்டும் வாழ்வியலை பிரதிபலிக்கிறது . பெரியவர் வீட்டில் நடக்கும் திருப்பமும் சபாஷ் போட வைக்கிறது ,

என்றாலும் அதன் விளைவு வழக்கமான ஒன்றாக முடிவதால் பலன் கம்மி

எல்லோரும் எல்லா வகையிலும் அயோக்கியர்கள் என்று கதை சொன்ன பிறகு யாருக்கு என்ன நடந்தால் நமக்கு என்ன என்ற உணர்வு வருகிறதே தவிர எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஆர்வத்தோடு தொடர முடியவில்லை .

கதாநாயகி கதாபாத்திரம் கூட ஏன்தான் இப்படி அலையுதோ என்ற உணர்வே ஏற்படுகிறது .

படமாக்கலில் வன்முறையை குறைத்து இருக்கலாம் .

இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி இருந்தால் ..

அட்டு … ஆகி இருக்கும் சூப்பர் ஹிட்டு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *